Friday, January 13, 2012

சென்னையில் அப்பார்ட்மெண்ட் வாங்கப்போகிறீர்களா - ஹிட்டன் காஸ்ட்டுக்கு பில்டர்களின் புது டெக்னிக்ஸ்

சென்னையின் ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்ல லாபத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். சென்னை இப்போது க்ரேட்டர் சென்னையாக மாறியதால் புறநகர்களில் நிறையப் பகுதிகள் சிட்டி லிமிட்ஸுக்குள் வந்து விட்டன. அதனால் தென்சென்னை பகுதியில் புழுதிவாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் போன்ற ஏரியாக்களில் அப்பார்ட்மெண்ட்டுகளின் விலை எகிறிவிட்டது. 20,25 வருடங்களுக்கு முன் அங்கே நிலம் 1 கிரவுண்டு ரூ.10000-20000 என்று வாங்கிப்போட்டவர்களெல்லாம் இன்று கோடீஸ்வரர்கள். இப்படிப்பட்ட நில உரிமையாளர்களும் இன்று திடீர் பில்டர்களாக அவதாரம் எடுத்து அப்பார்ட்மெண்ட் கட்டி விற்க துவங்கிவிட்டார்கள்.

வீடு வாங்குபவர்கள் ப்ரொபஷனல் பில்டர்களிடம் வாங்காமல் இப்படிப்பட்ட திடீர் பில்டர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்றால் தொலைந்தோம். சில ப்ரொபஷனல் பில்டர்களிடமும் ட்ராபேக்ஸ் இருக்கலாம். ஆனால் இது என் மற்றும் என் நண்பர்களின் சொந்த அனுபவம். Hidden costs list பின் வருமாறு -


1.இந்த கார்ப்பெட் ஏரியா, ப்ளிந்த் ஏரியா,காமன் ஏரியா களேபரங்களில் நீங்கள் வாங்கும் வீட்டின் மொத்த அளவில் இருந்து கார்ப்பெட் ஏரியா 20% மட்டுமே குறைவாக இருந்தால் உங்கள் பில்டர் உங்களை ஏமாற்றவில்லை. உதாரணமாக நீங்கள் 850 சதுரடியில் வீடு வாங்கினீர்கள் என்றால் உங்கள் கார்ப்பெட் ஏரியா குறைந்தபட்சம் 680 சதுரடியாக இருக்க வேண்டும். கார் பார்க்கிற்குத் தனியாக 1 - 1.5 லட்சம் வாங்குவார்கள். ஆனால் இப்போது கார் பார்க்கிங் ஏரியாவையும் வீட்டின் அளவோடு சேர்த்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டின் கார் பார்க் ஏரியா 60சதுரடி. ஒரு சதுரடியின் விலை ரூ.3500. எனவே நாங்கள் கார் பார்க்கிங்குக்கு கொடுத்த தொகை ரூ.210000 - கிட்டத்தட்ட குறைந்தபட்சம் ரூ.60000 எக்ஸ்ட்ரா.

2. வீட்டுக்கு டைல்ஸ் போடும் நேரத்தில் ஒரு டைலுக்கு ரூ.40 தான் தருவேன் என்பார் பில்டர். மேற்கொண்டு ஆவதை நாம் தான் செலவழிக்க வேண்டும். ஒரு டைல் ரூ.100க்காவது வாங்கினால்தான் தரமானதாக இருக்கும். 800 சதுரடிக்கு ஆகும் டைல்ஸ் செலவு - ரூ80000. இதில் பில்டர் தருவது ரூ.32000 மட்டுமே. நமக்கு ஆகும் எக்ஸ்ட்ரா ரூ50000. மேலும் குழாய் இணைப்புகள், வாஷ்பேசின் அனைத்துக்குமே இருப்பதிலேயே லோ காஸ்ட் ஐட்டங்கள்தான் தருவோம் என்பார் (இந்த கண்டிஷன் எதையுமே நீங்கள் வீடு புக் செய்வதற்கு முன் சொல்லமாட்டார்). இவற்றுக்கு எப்படியும் ரூ. 30000 எக்ஸ்ட்ரா.

3.வீட்டில் ஒரு ஸ்விட்ச் போர்டு அதிகம் கேட்டால் கூட ஒரு ஸ்விட்ச் 20 ரூபாய் என்று கணக்கு சொல்வார். நாம் விதியை நொந்து கொண்டு கொடுக்கவேண்டியதுதான்.

4. என்ன பணம் கொடுத்தாலும் பில் உடனே வாங்கிக்கொள்ளுங்கள். சாயந்தரம் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள் - எவ்வளவு அவசரத்திலிருந்தாலும் பரவாயில்லை. என் தோழி கவுரவமான உயர்தொழிலில் இருப்பவர். அவர் ரூ.5000த்திற்கு பில் அப்புறம் வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டார். பில்டர் நீங்கள் 5000 ரூபாய் தரவேயில்லை என்று சொல்லி மேற்கொண்டு 5000 வாங்கிவிட்டார். இவ்வாற் நாம் 5000 ஏமாந்து, அவரை 5000 ரூபாய்க்கு ஏமாற்றியதாக அவப்பெயரையும் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான்.

இப்படி அப்படி என்று ரூ2 லட்சம் எக்ஸ்ட்ரா கறந்துவிடுவர். அத்துடன் மிகவும் மரியாதைக்குறைவான, நம்பிக்கையற்ற ட்ரீட்மெண்ட் நமக்கு கிடைக்கும். இந்த மாதிரி மோசமான அனுபவம் நல்ல established, professional பில்டரிடம் எங்களுக்கு ஏற்படவேயில்லை. வீடு வாங்குவது அனேகருக்கு வாழ்நாள் கனவு. வாங்கும் முன் பில்டரையும் கவனியுங்கள்.

4 comments:

Deepak Karthik said...

panam paththaayiram seiyum :)

DK

aparnaa said...

nalla message!

Hariharan Valady said...

I have had worse experience when I bought a flat in Coimbatore, that too from a 'reputed' builder! Let buyers beware.

மாலா வாசுதேவன் said...

I agree vth u Hariharan Valady

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes