Sunday, June 8, 2014

80களின் குழந்தைகள் Versus தற்சமயக் குழந்தைகள்

80களின் மற்றும் தற்சமயக்குழந்தைகளுக்கு இடையே நான் பார்க்கும் ஸ்டீப் வித்தியாசங்கள் இவை:

1. 80களில் யாராவது சிட்டியிலிருக்கும் பெரிய அண்ணா அல்லது மாமா மட்டுமே கேமரா வைத்திருப்பார்கள். அவர்கள் ஊரிலிருந்து வரும்போது வீட்டிலிருக்கும் எல்லாக்குட்டிப்பிள்ளைகளையும் வரிசையாக நிற்க வைத்து ஃபோட்டோ எடுப்பார்கள். எல்லோரும் அடித்துப்பிடித்துக்கொண்டு லைனாக நிற்போம் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு. தற்சமயப் பிள்ளைகளை எந்தவொரு எக்ஸாட்டிக் இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாலும் ஏய் நில்லு நில்லு ஒரே ஒரு போட்டோ எடுத்துக்குறேன். கொஞ்சம் சிரியேன் என்று நம்மைக் கதற விடுவார்கள். மேற்கொண்டு இன்னொரு போட்டோ என்று சொன்னால் ஓ, நாட் அகைன் என்பார்கள்.

2.  தீபாவளி, பொங்கல், பிறந்த நாளுக்கு மட்டுமே புது டிரெஸ் கிடைக்கும். எப்படா போட்டுக்கொள்வோம் என்று தவித்துக்கொண்டிருப்போம். இப்போது புது டிரெஸெல்லாம் பிள்ளைகளுக்கு மேட்டரே இல்லை. சைஸ் சரியா இருக்கா என்று செக் செய்வதற்கு கூட போட்டுப்பார்க்கமாட்டார்கள். `எல்லாம் சரியாத்தான இருக்கும். போர் அடிக்காதீங்கம்மா` என்று சிம்பிளாக முடித்துக்கொள்வார்கள். இந்த ரூ.1500 டிரஸ்ஸுக்கு உன் டோட்டல் ரியாக்ஷன் இவ்ளோதானா என்று நாம் முழித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

3. கடைத்தெருவுக்குப் போவதென்றால் ஒரே கொண்டாட்டம் தான். சிங்கப்பூர் சென்டர், வஹாப்  கடை (புதுக்கோட்டையில் அனேக முஸ்லிம்கள் அப்போது சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் இருப்பார்கள். அவர்களுடைய சொந்தக்காரர்கள் இங்கே ஸ்டோர் வைத்திருப்பார்கள் - சரவணா ஸ்டோர் போல்). பிரமாதமாக ஒன்றும் வாங்கித்தந்துவிட மாட்டார்கள் - கண்ணாடி வைத்த ஷார்ப்பனர், பாதி வெள்ளை பாதி பச்சையாக முகர்ந்து பார்த்தால் சென்ட் வாசம் வீசும் ரப்பர் -இவ்வளவுதான். டபுள்டக்கர் பாக்ஸெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. இவ்வளவு பர்ச்சேஸுக்கே சந்தோஷம் பிய்த்துக்கொள்ளும். இப்போது பென்சில் டப்பா ரூ.400. ஒரு பட்டனை அமுக்கினால் ஸ்கேல் வெளியே வரும் மற்றொன்றை அமுக்கினால் ரப்பர் இப்படி எக்கச்சக்கம். இதை வாங்கிக்கொடுக்க கடைக்கு கூப்பிட்டோம் என்றால் ஷாப்பிங்கா சுத்த போர். முடிந்தது விஷயம். 

4. நமக்கு (ஒரு 4 பிள்ளைகளின் கூட்டம்) ஒரேயொரு கோல்ட் ஸ்பாட் பாட்டில் கிடைக்கும். ஒரு ஸ்ட்ராவை வைத்துக்கொண்டு ஆளுக்கொரு உறி உறிவோம். முடிந்தது கதை. இப்போதெல்லாம் பலாப்பழம் வாங்கினால் கூட எனக்கு ஒண்ணு தனியா வாங்கித்தந்துருங்க என்பார்கள் போலும்.

5. கவணில் கல் வைத்து பறவையை அடித்தால் 80. கவணில் பறவையை வைத்து கல்லை அடித்தால் (ஆங்க்ரி பேர்டு) தற்காலம்.

சரிதானா எனக்குத்தெரிவியுங்கள்.

Sunday, June 1, 2014

என்ஜினியரிங் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு எப்படி நடக்கின்றன இன்டர்வியூக்கள்???

ஏப்ரல், மே மாதங்களில் என்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர் பணிக்கு எக்கச்சக்க வான்ட்டட் வரும். நாமும் சலிக்காமல் அப்ளை செய்து, எல்லா நேர்முகத் தேர்வுகளையும் அட்டண்ட் செய்து கொண்டிருப்போம். இன்ட்டர்வியூவில் சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள் நிறைய - ஒரே செட் ஆஃப் ஆட்களுக்குத்தான் வெவ்வேறு பல்கலைகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து அழைப்பு வந்திருக்கும். இந்த இன்ட்டர்வியூக்கள் குறித்த நெருடலை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

 நெருடல் - இன்ட்டர்வியூ அட்டண்ட் பண்ண வருபவர்களை இவர்கள் ட்ரீட் பண்ணும் முறை. சமீபத்தில் ஒரு பிரபல கல்விக்குழுமத்தின் இன்ட்டர்வியூ அட்டண்ட் செய்துள்ளார் என் முன்னாள் மாணவர் ஒருவர். இந்தக்கல்விக் குழுமத்திற்கு ஏகப்பட்ட கல்லூரிகள் உள்ளன - ஒரு டீம்ட் யுனிவர்சிட்டி உட்பட. ஒரு கல்லூரி மூத்த மகனுக்கு, ஒரு கல்லூரி இளைய மகனுக்கு மற்றுமொரு கல்லூரி மகளுக்கு, பல்கலை அவருக்கு என்று கேள்வி. நம் மாணவர் அட்டண்ட் பண்ணியது மருமகனுக்குரிய கல்லூரியில். இனி அவரின் அனுபவம் அவர் மொழியில் - நேர்முகத்தேர்வு அறையில் அந்த மருமகன் மற்றும் ஒரு பேராசிரியர் (ஏதோ ஒரு துறையின் தலைவராக இருக்கவேண்டும்). ஆக்சுவலா நாந்தான் இன்டர்வியூக்காகப் போயிருந்தேன். ஆனா என்னைய விட அந்த பேராசிரியர்தான் ஜாஸ்தி டென்ஷனா இருந்தார். மருமகன் சில்க் க்ளாத்ல வெள்ள சட்ட போட்டுக்கிட்டு, கோல்டன் ரிம் கண்ணாடி போட்டுக்கிட்டு பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தார். என்னைக் கூப்பிட்டவுடன் உள்ள போனேன். நான் இன்டர்வியு முடிச்சுட்டு வெளிய வர்ற வரைக்கும் அந்த பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்த ஆள் என்னைய நிமிர்ந்தே பாக்கல.அவர் பாட்டுக்கு நியூஸ் படிச்சுக்கிட்டிருந்தார். இந்த புரொபஸர் என்ன கேக்கறோம்னே தெரியாம டென்ஷன்ல என்னைய என்னத்தையோ கேட்டுக்கிட்டு இருந்தார். நான் இன்னைக்கு சென்னைல வெயில் ஜாஸ்தின்னு ஏதாவது கேள்விக்கு ஆன்ஸர் பண்ணியிருந்தாக் கூட அந்த ஆளுக்குத் தெரிஞ்சிருக்காது. அவ்ளோ டென்ஷனா இருந்தாப்ல. ஏங்க இவ்ளோ டென்ஷனாயிருக்கீங்க. என்ன தலையவா சீவீருவாங்கன்னு சொல்லி அவரக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாமானு நெனச்சேன். அப்புறம் விஷால் பண்ற மொக்க காமெடி மாதிரி ஆயிடும்னு கம்முனு இருந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு  அப்புறம் சொல்றோம்னு சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க.

இதில் நம் மாணவரின் சந்தேகங்கள் - 

1. அப்புறம் சொல்றோம்னு சொல்றாங்க. ஆனா யாரத்தான் செலக்ட் பண்றாங்கன்னே தெரியல. ஏஏ காலேஜ்ல இன்டர்வியு அட்டண்ட் பண்ணவங்க எல்லாரும் பிபி காலேஜுக்கும் வர்றாங்க.

2. இன்டர்வியுவுக்கு வர்றவங்கள எப்டினாலும் நடத்தலாம்கிற ஐடியா இவங்களுக்கு எப்டி வருது?

இதில் சந்தேகம் ஒன்றுக்கான விடை நாம் விசாரித்தவரை - ஏஐசிடிஇ, யுஜிசி போன்ற நிறுவனங்களுக்கு சப்மிட் செய்யும் ரிப்போர்ட்டில் பேப்பரில் வெளியிட்ட வான்ட்டஅட் விளம்பரம், அதற்கு வந்த ரெஸ்பான்ஸ் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அதில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கல்லூரி நிர்வாகம் சப்மிட் செய்ய வேண்டுமாம். இதற்காகவே ஆசிரியர்கள் தேவை இருக்கிறதோ இல்லையோ இப்படி விளம்பரம் கொடுத்து ஒரு இன்டர்வியுவும் நடத்திவிடுகிறார்களாம். 

சந்தேகம் இரண்டைப் பொருத்தவரை இது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை என்று கருதுகிறேன். மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ, உன்னையறிந்தோ பிஹெச்டி படித்தேன் என்று சாபமிட்டுவிட்டு வரவேண்டியதுதான்.

பி.கு.

இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நடத்தும் நேர்முகத்தேர்வுகள் உண்மையானவைகளாக இருக்கின்றன. தேர்வு நடக்கும் அறையில் தேர்வாளர்கள் நாம் பேசுவதைக் கவனிக்கின்றனர்.தேர்வு முடிந்தவுடனே முடிவுகளை அறிவித்துவிடுகின்றனர். மேலும் இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் மிகச்சொற்ப விதிவிலக்குகள் உள்ளன.


 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes