Thursday, August 29, 2013

தனுஷ் படத்தில் சிம்பு - பழம் விட்டாச்சு

தனுஷ், சிம்பு கொஞ்ச வருடங்களுக்கு முன் மோதிக்கொண்டிருந்தாலும் இப்போது நண்பர்களாகவே வெளியில் காட்டிக்கொள்கின்றனர். தற்சமயம் வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து தயாரிக்கும் காக்கா முட்டை படத்தில் ஒரு பாடலை, சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரைப்பாடித் தருமாறு தனுஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார். சிம்புவும் ஒப்புக்கொண்டு சந்தோஷமாகப் பாடித் தந்ததாகக் கேள்வி.
ஒருவரை வெறுப்பேற்ற வேண்டுமென்றால் அவருக்குப் பிடிக்காதவரிடம் நாம் ஒட்டி உறவாடலாம். என்ன நடக்குது தனுஷ் இங்க - வீட்ல எல்லாரும் சுகம் தானே???? ;)

Wednesday, August 28, 2013

ஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்

சுமார் 20 வருடங்களுக்கு முன், எம்.சி.ஏ சீட் கிடைத்தவர்கள், கடவுளர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். முடித்தவுடன், அரசுக்கல்லூரிகளில் பெர்மணன்ட் வாத்தியார் வேலைக்குச் சென்றவர்களும், ஐ.டி. துறையில் வேலைக்குச் சென்றவர்களும் பிழைத்தனர். மாறாக, ப்ரைவேட் என்ஜினியரிங் கல்லூரிகளில் வேலைக்குச் சென்ற வாத்தியார்களின் நிலை தான் இப்பதிவின் பாடுபொருள்.

முதலில், தகுதியற்றவர்கள் தான் வாத்தியார் வேலைக்கு வருவார்கள் என்ற பிம்பத்தை எப்பாடுபட்டும் உடைக்க இயலாது. நீங்கள் பல்கலைக்கழக முதல் மாணவராக இருந்தாலும் சரி, வாத்தியார் வேலைக்கு வந்து விட்டால் நீங்கள் மக்குதான். சரி அதாவது பரவாயில்லை. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். தற்சமயப் பிரச்சினை என்னவென்றால், எம்.சி.ஏ கோர்ஸிற்கு மாணவர்கள் சேர்வதேயில்லை. 120 சீட் இருக்கும் கல்லூரியில் 20 பேர் சேர்கிறார்கள். காரணம் 6 வருடப் படிப்பு. அதனால் வேலையில் இருக்கும் வாத்தியார்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். தங்களுடைய லேட் 30களில் இருக்கும் வாத்தியார்கள், வேலையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்படும்போது அவர்களால் வேறு என்ன செய்யமுடியும். இனிமேல் ஐ.டி. துறைக்குள் நுழைவதென்பது இயலாத காரியம். மேலும், ஏற்கனவே ஐ.டி. யில் இருப்பவர்களே பயந்து கொண்டு இருக்கும் சூழ்நிலை இருக்கிறது (நோ ஜாப் செக்யூரிட்டி). எனவே அவர்களுக்கு ஆப்ஷன்ஸ் என்பதே இல்லை என்பது தான் நிதர்சனம்.

எனவே மாணவர்களும், பெற்றோரும் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கும் முன் நிதானிக்க வேண்டியது மிக அவசியம். ஏதாவது ஒரு கோர் சப்ஜக்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பொத்தாம்பொதுவான கோர்ஸுக்கு வேலை வாய்ப்பில்லாமல் போகும்போது, கோர் சப்ஜக்ட் படித்தவர்கள் கட்டாயம் பிழைத்துக்கொள்கிறார்கள். மாறாக டெம்ப்ரரி பூம் இருக்கும் கோர்ஸுகளைத் தவிர்ப்பதே நல்லது.

Tuesday, August 27, 2013

மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டுத் தீர்மானம் - தமிழ் மென்பொருட்களைப் பயன்படுத்துவோம்

மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து உலகத்தமிழ் இணைய மாநாட்டை மலேயா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 15-18 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். உயர்திரு. அனந்தகிருஷ்ணன், டைரக்டர், ஐ.ஐ.டி கான்பூர், அவர்களும் உயர்மட்டக்குழுவின் ஒரு உறுப்பினர். தமிழில் உள்ள மென்பொருட்கள், இன்னும் புதிய தமிழ் மென்பொருட்கள் உருவாக்க வேண்டியதன் அவசியம், இருக்கும் தமிழ் மென்பொருட்களின் தரம், அவை இன்னும் அப் டி த மார்க் இல்லாமல் இருப்பதன் காரணங்கள் முதலியவற்றை விரிவாக அலசினார்.
தமிழில் இருக்கும் மென்பொருட்களை நாம் முதலில் பயன்படுத்துகிறோமா? என்னென்ன மென்பொருட்கள் தமிழில் இருக்கின்றன என்பது முதலில் நமக்குத்தெரியுமா? இப்போதைய தொழில்நுட்ப யுகத்தில், ஒரு மொழி சர்வைவ் செய்ய வேண்டுமென்றால் அது தன்னை மொழித்தொழில் நுட்பத்துக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழுக்குத் தன்னார்வலர்கள் பலர் சிறப்பான மென்பொருட்களைத் தயாரித்துள்ளனர். ஆனால் நாம் யாரும் அதைப்பயன்படுத்துவதில்லை. ஒரு பொருளைச் சந்தைப்படுத்த இயலாத போது, அதைத் தயாரிக்க பலர் முன்வருதில்லை. சந்தைப்படுத்த அவசியமில்லாத பொருளின் தரத்தைக்குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இது ஒரு லூப் மாதிரி போகிறது - தரமில்லாததால் பயன்படுத்துவதில்லை, பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் தரத்தை உயர்த்த முடியும். நாம் பயன்படுத்தி feedback கொடுத்தால்தான் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அதில் உள்ள குறைகளைக் களைய முடியும். இது தான் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் சாராம்சம். கீழே தமிழ் மென்பொருட்கள் பட்டியலைத் தருகிறோம். பயன்படுத்திப் . பாருங்கள்.

1. பெரும் பேராசிரியர். உயர்திரு. தெய்வசுந்தரம் அவர்களின் மென்பொருள். 90% மேல் சரியான அவுட்புட் தருகின்ற அருமையான சொல்திருத்தியுடன் கூடிய தமிழ்ச்சொல்லாளர் (வேர்ட் ப்ராஸஸர்) மென்தமிழ். ட்ரையல் வெர்ஷனைப் பயன்படுத்திப்பாருங்கள்

2. மைக்ரோசாப்ட் வேர்டோடு தரப்படுகிற தமிழ் சொல்திருத்தி மற்றும் ப்ராஸஸர். மென்தமிழோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். பேராசிரியர், தமிழ் கம்ப்யூட்டிங்கில் எங்கிருக்கிறார் என்று தெரியும்.

3.பொன்விழி என்னும் ஓ.சி.ஆர். உங்கள் கையெழுத்தைக் கணிணி புரிந்து கொள்வதற்கான மென்பொருள். http://ildc.in/tamil/Gist/htm/ocr_spell.htm

மேலும் உங்களுக்குத் தெரிந்த தமிழ் மென்பொருட்களின் சுட்டிகளும் வரவேற்கப்படுகின்றன. மொழி, காலத்தை வெல்ல வேண்டுமென்றால், மொழித்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவோம் - செம்மொழியைக் கணிணி மொழியாகவும் ஆக்குவோம்.

Monday, August 19, 2013

மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு

மலேசியாவில் மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து நடத்திய உலகத்தமிழ் இணைய மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை மலேயா பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். ஒரு சிறு பயணக்குறிப்பு இதோ.

டிப்பெண்டன்ட் விசாவில் இல்லாத முதல் வெளிநாட்டுப்பயணம் என்பதால் மிகவும் எக்ஸைட்டடாக இருந்தது. மாநாட்டின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒரு புறம் இருக்கட்டும் (பின்னொரு பதிவில்). இப்பதிவில் நான் வேறு சிலவற்றைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.

முதலில் உணவு. காலை உணவில் விதவிதமான நூடுல்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒல்லியான, பட்டையான, உருண்டையான என்று வித விதமான வடிவங்களில், முக்கியமாக மீன் சேர்க்கப்பட்டவை.இவர்களின் நூடுல்ஸ் மசாலா வித்தியாசமாக, மிகச்சுவையாக இருக்கிறது.  அப்புறம் சம்பல் - இந்த மீன் குழம்பு சான்ஸே இல்லை. சூப்பர். முக்கியமாக கவனிக்க வேண்டியது - இவர்களின் மதிய, இரவு உணவில் (பெரிய ஹோட்டல்களில் மட்டுமல்ல -எந்த உணவகமாக இருந்தாலும்) காய்கறி சாலட்டும் (வெறும் உப்பு சேர்த்து வேகவைக்கப்பட்டவை ஆனால் ஆச்சர்யகரமாக மிக ருசியானவை), பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இது நம்மூரில் இல்லாத, நிச்சயம் ஆரோக்கியமான உணவுப்பழக்கம். நம் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் இப்பழக்கத்தை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொஞ்சமாவது வறுப்பதையும், பொரிப்பதையும் குறைத்துக்கொள்ளவேண்டும்.

அப்புறம் ஷாப்பிங் அவ்வளவு எக்சைட்டிங்காக இல்லை. எல்லா ப்ராடக்ட்டுகளும் நம்மூரில் கிடைக்கின்றன.

ஒரு யு.எஸ் தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி தன் குடும்பத்தோடு  மாநாட்டில் பேப்பர் ப்ரஸண்ட் பண்ண வந்திருந்தார். அவர், அவருடைய கணவர், இரு மகள்கள்.18 மற்றும் 14 வயது. என்ன படிக்கிறார்கள் என்று கேட்டேன். மூத்த பிள்ளை பி.ஹெச்.டி பயோடெக்னாலஜி ஒரு ஐவி லீக் பல்கலையில் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். சர்ப்ரைஸ். எப்படி இவ்வளவு சிறிய வயதில் என்று கேட்டேன். ஹை ஸ்கூலில் இவளது சாட் ஸ்கோரைப் பார்த்து, நான்கு வருடம் பிரமோஷன் கொடுத்து, நேரடியாக பிஹெச்டி யில் அனுமதித்ததாகக் கூறினார். இது எந்த வளரும் நாட்டிலும் சாத்தியமில்லை.
இதே நேரம் ஒரு மலேசியத்தமிழரிடம் பேசிய போது, மலாய்ப்பிரிவு மாணவர்கள்  பள்ளியில் பத்து பாடங்களில், ஏதாவது இரண்டு பாடங்களில் `ஏ` க்ரேட் எடுத்தால் கூட  போதும். காலேஜில் அவர்கள் கேட்கும் பிரிவு கோட்டாவில் கிடைத்து விடும். ஆனால் தமிழ்ப்பிள்ளைகள் பத்துக்குப் பத்து `ஏ` வாங்கினால் கூட கேட்ட கோர்ஸ் கிடைப்பது கடினம் என்று கூறினார். ஏன் வளரும் நாடுகள், வளரும் நாடுகளாகவே பல வருடங்கள் இருக்கின்றன என்று எனக்குப் புரிந்தது.
இலங்கையிலிருந்து ஒரு தமிழர் வந்திருந்தார். சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையில் ஒரு ஈழம் தொடர் வெளியாகி, பெருத்த விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது. அத்தொடரில், ஒரு நிருபர் குழு, இலங்கை சென்று மீள்குடியேற்றம் எப்படி நடக்கிறது என்பதைப் பார்த்து, மிகப்பாஸிட்டிவான ரிப்போர்ட்டைக் கொடுத்திருந்தனர். மற்ற அனைத்து ஊடகங்களும் நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருந்த நிலையில், துக்ளக் மட்டும் மீள்குடியேற்றம் ஒழுங்காக நடப்பதாகத் தெரிவித்திருந்தது. உண்மையில் அங்கு என்ன தான் நடக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அவர் என்னைக் கேட்டவை மற்றும் என்னிடம் தெரிவித்தவை இதோ.


1. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இலங்கை என்னும் நாடாக முன்னேற விரும்புகிறோம். உங்கள் அரசியல்வாதிகள் உங்கள் தமிழ்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கட்டும். எங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

2. போரின் காயங்களை மறந்து நாங்கள் முன் செல்ல விரும்புகிறோம். எங்களை விட்டுவிடுங்கள்.

நாம் நிறைய உண்மைகளை எதிர்கொள்ள விரும்புவதில்லை. மாறாக நாம் விஷயங்கள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அப்படியே கற்பனை செய்து கொள்கிறோம். இதுவே நிஜம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes