Tuesday, August 25, 2015

லீகல் டெரரிஸம்

      1961ஆம் ஆண்டு வரதட்சணை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது நிச்சயம் பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்டப் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்திருக்கும். இப்போதும் வரதட்சணை எல்லா மறைமுக வடிவங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. பொண்ணுக்குப் போடறதெல்லாம் உங்க இஷ்டம் என்று மாப்பிள்ளை வீட்டார்கள் சொன்னார்கள் என்றால் பெண்வீட்டாரின் வசதி, சொத்து நிலவரம் எல்லாவற்றையும் தீர விசாரித்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். விழிகள் விண்மீன்களோடு விளையாடினாலும், விரல்கள் ஜன்னல் கம்பிகளோடுதான் என்று கவிஞர்கள் மணமாகாத இளம்பெண்கள் குறித்து எழுதிய கவிதைகள் இன்றும் ரெலவன்ட். அதனால் வரதட்சணை ஒழிப்புச்சட்டம் எந்த நோக்கத்துக்காக இயற்றப்பட்டதோ அது நிறைவேறியதாகத் தெரியவில்லை. மாறாக இந்தச்சட்டம் ஏகப்பட்ட வழிகளில் பெண்களால் மிஸ்யூஸ் செய்யப்படுகிறது. 
         
          தற்சமயம்  செக்ஷன் 498ஏ  இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பெயில் கிடையாது. இது ஒரு நான்-பெயிலபிள் அஃபன்ஸ். உடனடியாகக் கைது செய்நுவிடுவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. ஒருவேளை பாதிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் பெண்களால் குற்றத்தை நிருபிக்க முடியாமல் போகுமானால் அவர்கள் ரூ.1000 ஃபைன் கட்டினால் போதும். 
                 
         1000 ரூபாயோடு விஷயம் முடிந்துவிடும் என்பதால் பெண்கள் கணவரோடு பிரச்சனை வரும்போது அவர்கள் குடும்பத்தையே உள்ளே தள்ளி விடுகிறார்கள். வெறும் ஆயிரம் ரூபாய்க்கு கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் எல்லோருக்கும் கூட்டமாகச் சிறைத்தண்டனை என்பது இப்பெண்களுக்கு ஒரு நல்ல ஆஃபராகத் தெரிகிறது. 60களில் இருக்கும் மாமனார், மாமியார், கல்யாணம் முடிந்து வேறோரு வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாத்தனார் என்று அனைவர் வாழ்க்கையையுமே இவர்களின் பொய்யான ஒரு குற்றச்சாட்டு புரட்டிப்போட்டுவிடுகிறது.
     
      கணவர் குடும்பத்தோடு சேர்ந்து என்னை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தினார். அவருடைய தம்பி என்னை அடித்தார் என்று ஒரு பெண் புகார் கொடுத்தார். விசாரணையில் அந்தக்கொழுந்தன் அப்பெண் சொன்ன தேதியில் வீட்டிலேயே இல்லை. மும்பை சென்றிருந்தார் என்று நிரூபிக்கப்பட்டது. அப்பெண் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு வீட்டுக்குப்போயிருந்திருப்பார். கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் கணவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் என்ன பதில். தீர்ப்பளித்த நீதிபதி இது தீவிரவாதத்தின் ஒரு வடிவம் -  லீகல் டெரரிஸம் என்று கடுமையாகத் தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். இது போல் எண்ணற்ற கேஸ்கள். சமீபத்தில் பேஸ்புக்கில் பெண்களை மோசமாகச்சித்தரித்த ஒரு படத்துக்கு ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் லைக் போட்டார் என்று கேஸ். ஆனால் அப்படத்தில் அஃபென்ஸிவாக எதுவுமேயில்லை. விசாரணையில் மனைவி தன் கணவனை மிரட்டுவதற்காகப் போட்ட கேஸ் இது என்று தெரிய வந்துள்ளது. ஆக்சுவலாக சொத்துப்பிரச்சனை.

இது போல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது லீகல் டெரரிஸம் தான். எனவே 489ஏ சட்டத்திருத்தத்திற்கு உட்படுத்தவேண்டும் என்று கோர்ட் பரிந்துரைத்துள்ளது. ஏதோ நல்லது நடந்தால் சரிதான்.














Tuesday, March 17, 2015

ஆண்கள் அழலாமா?

       ஆண்மையைக் குறித்து பல்வேறு ஐடியாக்கள் எக்காலத்திலும் நிலவி வருகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது – ஆண் தன்னுடைய எமோஷன்களை வெளியே காட்டாமல் இருப்பது. ஒரு ஆண்மகன் தன் வருத்தத்தையோ, அழுகையையோ பிறர் பார்க்கக் காட்டுவது பலவீனத்தின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. வீட்டில் உள்ளோரும் இதை சாதாரணமாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றனர். ‘என்னடா பொம்பளப்புள்ள மாதிரி அழுவுற’  என்பது சர்வசாதாரணமாக எல்லா வீடுகளிலும் சொல்லப்படும் ஒரு வசனம். பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் இக்கருத்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

          ஆனால் தன்னைப் பார்த்து பார்த்து வளர்த்த அப்பா, அம்மாவின் மறைவுக்கே அழாமல் கல் மாதிரி நிற்கமுடியுமேயானால் இப்படி ஒரு மனிதனால் யாரை முழுமையாக நேசிக்க முடியும். இதில் ஆணென்ன, பெண்ணென்ன. தன் தாயாருக்காகக் கண்ணீர் வடிக்கும் ஒரு ஆண். அவ்வப்போது அருகில் வந்து அவனது கண்ணீரைத் துடைத்துச் செல்லும் அவன் மகள் – என்ன ஒரு அருமையான காட்சி. மறைந்த ஆன்மா சாந்தியுற்றிருக்கும். தன் தாயாரை நினைத்து அழும் கணவனை எந்தப்பெண்ணும் அதிகம் நேசிப்பாள். அம்மாவை இப்படி அன்பு செய்கிறவன், நிச்சயம் என்னையும் அன்பு செய்வான் என்று எண்ணுவதற்கான அத்தாட்சி அந்தக் கண்ணீர்.

        எனவே ஆண்களே நீங்களும் உங்கள் துயரின்போது அழலாம். அது உங்களை இன்னும் ஆண்மைமிக்கவனாகக் காட்டும். மெல்லிய ஆண்மகனையும் பெண்ணுக்குப் பிடிக்கும்.


           இன்னொரு முக்கியமான விஷயம் – பொம்பள மாதிரி அழுற – என்பதெல்லாம் அர்த்தமற்றது. பெண்களின் மனவலிமை அசாத்தியமானது. நெவர் அண்டர் எஸ்டிமேட்.

Thursday, February 12, 2015

புத்தகக் கண்காட்சி - நான் வாங்கிய புத்தகங்கள்

புத்தகக் கண்காட்சி வழக்கம் போல் இந்த வருடமும் களைகட்டியது. நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இங்கே;
1.       ஆழி சூழ் உலகு – ஜோ.டி. க்ரூஸ்
2.       உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார்
3.       ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா – பியர் லோட்டி
4.       பெண்மை வெல்க – பிரபஞ்சன்
5.       புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
6.       இந்தியப் பயணக் கடிதங்கள் – எலிஸா பே
7.       ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு
8.       மறைக்கப்பட்ட இந்தியா – எஸ். ராமகிருஷ்ணன்
9.       விகடன் பொக்கிஷம்
10.    லைட் ரீடிங் வகையறாவில் சுஜாதா நாவல்கள் இரண்டு, அனுராதா ரமணனின் புத்தகங்கள் சில மற்றும் பாலகுமாரன் நாவல் ஒன்று.
பிள்ளைகளுக்கு வாங்கியது;
1.       அட்வன்ச்சர்ஸ் ஆப் டாம் சாயர்
2.       அரௌண்ட் த வேர்ல்ட் இன் தேர்ட்டி டேஸ்
3.       அமர் சித்ர கதாவில்  சாம்பு, சுப்பாண்டி மற்றும் சில.
ஒவ்வொரு புத்தகத்தையும் பற்றிய விரிவான விமர்சனத்தைப் பின்னொரு பதிவில் தருகிறேன். எனக்காக வாங்கிய புத்தகங்களில் டைம்பாஸ் ரீடிங்குக்காக வாங்கிய புத்தகங்கள் தவிர மற்ற அனைத்திலும் இருக்கும் ஒரு பொதுத்தன்மை – அவை அனைத்துமே ஏறத்தாழ வரலாற்று ஆவணங்கள். நூல்களின் வடிவம் நாவல், கடிதம், கட்டுரை, டைரிக்குறிப்பு என்று மாறுபட்டாலும் அனைத்துமே வரலாற்றுச் செய்திகளின் பெட்டகங்கள். நாம் எங்கு போகிறோம் என்பதை உணர்வதற்கு நாம் எங்கிருந்து வந்தோம் என்பதனை அவசியம் உணர்ந்துகொள்ளவேண்டும். நம்முடைய கலாச்சாரப் பின்னணி, பாரம்பரியம், நடைமுறைகள் - இவற்றை மிக சுவாரசியமான முறையில் மேற்கண்ட புத்தகங்களிலிருந்து அறிய முடிந்தது.

குறிப்பாக ப.சிங்காரத்தின் நாவல் ஒரு யுனிக் படைப்பு. உலகப்போர் காலங்களில் பர்மா, இந்தோனேசியாவில் செட்டியார்களின் வியாபார நிலை, அவர்கள் அங்கே சம்பாதித்துக்கொண்டிருந்தபோது, இங்கே புதுக்கோட்டை, கோட்டையூர் ஆகிய இடங்களில் அவர்களின் குடும்ப நிலை இவற்றைப் பற்றிய வரலாற்று நூல் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இல்லையென்றால் அந்தக்குறையைப் ‘புயலிலே ஒரு தோணி’ போக்குகிறது. மிக சுவாரசியமான நடை – சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ வில் தமிழர்களின் பிரமாதமான பங்களிப்பு, தமிழ்நாட்டு சாதிப் பிரிவுகள் வெளியாடுகளிலும் மறைமுகமாகத் தொடரப்பட்டது என பல சரித்திர விஷயங்களைப் புலப்படுத்திச் செல்கிறது இந்நாவல். அவசியம் படிக்க வேண்டியது. மற்ற நூல்களின் விரிவான ரிவ்யூ விரைவில்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes