Wednesday, June 27, 2012

கனிமொழிக்கு மீண்டும் சிறை

அதிமுக அரசின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து, திமுக வரும் நான்காம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஜாமீன் பெற முயற்சிக்காமல் சிறையிலேயே இருப்பவர்களுக்குக் கட்சியில் பதவியும் தரப்போகிறாராம் ஸ்டாலின்.
கருணாநிதிக்கு எதில் யார் வாரிசோ என்னவோ தெரியாது - ஆனால் அவரைப்போல் காமெடி பண்ணுவதில் அவருடைய வாரிசு நிச்சயம் கனிமொழிதான். சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு சிபிஐயிடம் சிறப்பு அனுமதி வாங்கப்போகிறாராம். மக்களை அடிமுட்டாளாக எண்ணும் கருணாநிதி மற்றும் குடும்பத்தாரின் போக்கு சொல்ல முடியாத அளவு எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
மேடம் கனிமொழி - நீங்கள் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சிறையை நிரப்ப அனுமதி வாங்குவதற்குப் பதிலாக, திகார் சிறையையே நிறைத்திருக்கலாம் அல்லவா - வெளியே வந்தவுடன் உங்கள் சகோதரர் உங்களுக்குக் கட்சியில் பதவியும் கொடுத்திருந்திருப்பார், நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு ஜாமீனுக்குச் செய்த முயற்சியும் மிச்சமாகியிருந்திருக்கும்

Thursday, June 21, 2012

குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்ட பெண்களுக்கு ஒரு அலர்ட்

நடுத்தரக் குடும்ப மற்றும் டெக்னிக்கல்லி ஸ்கில்டு, க்வாலிபைடு பெண்கள் பலரும் குழந்தை பேற்றுக்குப்பின் வேலையை விட்டுவிடுவது மிகப் பரவலாக க் காணப்படும் ஒரு சாதாரண ட்ரண்ட். பிள்ளையப் பாத்துக்கிறதுக்காக ரூ.40000 வேலய விட்டுருக்கா - என்று ஒரு பாராட்டுப்பத்திரமும் கிடைக்கும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பின்னடைவுகளைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது ( http://uk.finance.yahoo.com/news/can-you-afford-to-be-a-stay-at-home-mum.html ). வேலையை விட்டுவிடுவதன் சாதக பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார்கள். 
இதைப்படிக்கும்போது மாபசான் எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகம் வருகிறது.
ஒரு குடிசைப்பகுதியில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் 10, 12 பிள்ளைகள். ஒரு கனவானும், அவர் மனைவியும் தினமும் அந்தப்பகுதியைக் கடந்து வாக்கிங் செல்வார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே அந்தப் பகுதியிலிருந்து ஒரு பிள்ளையைத் தத்தெடுக்கப் பிரியப்படுவார்கள். இரு குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்களிடம் பேசுவார்கள். ஒரு தாய் பசியோ, பட்டினியோ எங்கள் பிள்ளையை நாங்கள் வளர்த்துக்கொள்வோம். யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று மறுத்து விடுவாள். மற்றொருவள் தன் கடைசி மகனைத் தத்துக்கொடுக்க சம்மதித்து விடுவாள். 
தத்துக்கொடுத்த பெண்ணை அந்தப்பகுதி மக்கள் இரக்கமில்லாதவள், பாசமில்லாதவள் என்று தினமும் திட்டுவார்கள். அதே நேரம் தத்துக்கொடுக்க மறுத்த பெண்ணைத் தாயென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று போற்றுவார்கள். வறுமையும் தொடர்ந்தது.
இப்படியாக 18 வருடம் கழிந்தபின், ஒரு நாள் தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளை தன் நிஜ தாய் தந்தையரைப் பார்க்க வருவான், உயர்தர உடுப்புக்களோடு, கையில் விலையுயர்ந்த பரிசுகளும், பணமும் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்து அவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வான்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த பக்கத்து வீட்டு வறுமையில் உழலும் பையன் தன் தாயிடம் - நீதான் என் வாழ்க்கையைப் பாழாக்கினாய். முதலில் என்னைத்தான் தத்துக்கேட்டார்களாமே நீ கொடுக்க மறுத்த்தால் இன்று என் வாழ்க்கையே வறுமையில் இருக்கிறது. செல்வச்சீமானாக இருந்திருக்க வேண்டியவன், உன்னால் இப்படியாகி விட்டேன். மகன் இப்படிச்சொல்வதோடு கதையை முடித்திருப்பார் மாபசான்.
இளம் தாய்மார்களே வேலையை விடுவதற்கு முன் யோசியுங்கள். குழந்தைக்குப் பாதுகாப்பு தேவைதான் - அதில் முக்கியமானது "பொருளாதாரப் பாதுகாப்பு"

Wednesday, June 20, 2012

பஸ்ஸில் பயணம் செய்து பல்பு வாங்கிய தேனி எம்எல்ஏ

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியின் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார்.  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=489928. பஸ்ஸில் பயங்கர கூட்டம் போலும் - உட்கார இடம் கிடைக்கவில்லை. கண்டக்டரிடம் - நான் எம்எல்ஏங்க என்று சொல்லியிருக்கிறார். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லை. அவர்  பாட்டுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு தன் சீட்டில் அமர்ந்து விட்டார். எம்எல்ஏ நொந்து போய் போக்குவரத்துக் கழகத்திடம் தன் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இது இன்றைய செய்தி.
இச்செய்திக்கு இரண்டு விதமான ரெஸ்பான்ஸ்கள் வந்திருக்கின்றன.
  •  முதல் டைப் ; எம்எல்ஏக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் நின்றபடிதான் பயணம் செய்கின்றனர். ஒவ்வொருவருக்கும் சீட் பிடித்துக் கொடுப்பதா கண்டக்டரின் வேலை?
  • இரண்டாவது டைப் (இது என் கருத்து) ; இதே எம்எல்ஏ கொத்துக் கொத்தாக செயின் போட்டுக்கொண்டு ஸ்கார்ப்பியோவில் பத்து, பதினைந்து ஆட்களோடு வந்து பஸ்ஸை அரை மணிநேரம் நிறுத்திப்போட்டிருந்தால், கண்டக்டரும், பயணிகளும் பயந்து நடுங்கியிருப்பார்கள். ஒரு மக்கள் பிரதிநிதிக்கு ஜனநாயக நாட்டில் சிறிய அளவில் மரியாதை தெரிவிப்பதில் ஒன்றும் தவறில்லை. 
எளிமையாக இருப்பவர்களைக் கேவலப்படுத்துவதும், தாம்தூமென்று குதிப்பவர்கள் முன் மிகப்பணிந்து செல்வதும் நம் இந்திய மனோபாவம். மாணவர்களோடு இறங்கிப் பழகும் ஆசிரியரை மாணவர்கள் மதிப்பதில்லை. சொந்தக்காரர்களில் நன்றாகப் பழகுபவரை யாரும் மதிப்பதில்லை. நன்றாகப் பழகினால் - இவனை/ளை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் - என்றே நினைக்கிறார்கள். நம் இடத்தை விட்டு கீழே இறங்காமல் மெயின்டெயின் செய்துகொண்டு, நான் பணக்காரன்/ரி, படித்தவன்/ள், நல்ல நிலையில் இருக்கிறவன்/ள், பதவியில் இருக்கிறவன்/ள் என்று ஒவ்வொரு நிமிடமும் பறை சாற்றினால்தான் பிறரின் அவமதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். எளிமை கிளிமை எல்லாம் unaffordable ஆகி கொஞ்ச நாளாகிவிட்டது. கவிஞர் கண்ணதாசன் பாடலில்( பரமசிவன் கழுத்திலிருந்து) வருவது போல எல்லாம் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே என்பதுதான் சரி. 
மிஸ்டர் பெரியகுளம் எம்எல்ஏ உடனே போய் தொகுதி நிதியிலிருந்து ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்குங்கள்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes