Friday, February 9, 2018

மிட்லைஃபில் சந்திக்கும் பிரச்சினைகள் - வேலன்ட்டைன்ஸ் டேவுக்காக


     வேலன்டைன்ஸ் டே நெருங்கி விட்டது. காலேஜ் வாசலில் ஃபுல்லும் ரெட்ரோஸ் விற்பனை. காலேஜ் காண்டீனில் கேட்பரி சில்க் தான் ஜாஸ்தி விற்பனையாவதாகத் தகவல் .
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே,
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்
 என்றான் பாரதி.
    அடலஸன்ட் வயதில் ஒரு மிகக் கொடுமையான தனிமை ஒன்று வந்து மனதில் கவிந்திருக்கும். அன்பான பெற்றோர், சகோதரன், சகோதரி, ஆகச்சிறந்த நண்பர்கள் எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாதது போன்ற ஒரு துக்கம் மனதை அரிக்கும். சில நிமிடங்கள் தனித்திருந்தாலும், இத்துக்கம் மனதை ஆக்கிரமித்துக்கொள்ளும். அதே நேரம் ஃபிஸிக்கலி தனித்திருக்கவேண்டும் என்றும் தோன்றும்.
'Solitude has soft, silky hands, but with strong fingers it grasps the heart and makes it ache with sorrow.' – கலீல் கிப்ரான்
மனமெனும் மண்டபம் மவுனமாய் உள்ளது, யாரது யாரது மாயாஜாலமாய் உள்ளது, என்னவள் என்பவள் யார் என்று தேடித் தவிப்பது இந்நிலை.
தண்டவாளத்தில் தலைசாய்த்திருக்கும் ஒற்றைப்பூ நான் – நீ
நடந்து வருகிறாயா அல்லது
ரயிலில் வருகிறாயா (கவிஞர் – யாரோ)
என்று மனம் தடதடக்கக் காத்திருந்து, அவனோ, அவளோ நடந்து வந்துவிட்டால் (ரயிலில் வந்துவிட்டவர்களைப் பற்றி அடுத்துப் பேசுவோம்), மனம் முழுக்க சாரல் மழைதான் – வாவ் வாவ், இந்த ஸ்டேஜில் நாம் நாமே இல்லை – நானே நானா யாரோ தானா – உலகம் வண்ணமயமாய்ப் பூத்துக்குலுங்கத் துவங்கும். மணிக்கணக்கில் நீளும் தொலைபேசி அழைப்புகளும், பிரிந்திருக்கும் நேரமெல்லாம் காணத் துடிப்பதும், ஒன்றாக இருக்கும் மணித்துளிகள் சர்க்கரையாய் கரைவதும், அடேங்கப்பா. வளாகத்தின் ஸ்டோன் பென்ச்சுகளில் அமர்ந்திருக்கும் காதலர்களின் உலகிற்கும் நம்முடைய உலகிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
அப்புறம் ஒற்றைக்கால், இரட்டைக்கால் எல்லாவற்றிலும் நின்று அவனை/ளைத் திருமணமும் செய்துகொண்டுவிடுகிறீர்கள். இனிமேல்தான் இருக்கிறது உங்கள் ஆசிட் டெஸ்ட். நமக்கு சுத்தமாகத் தெரியாத, நாம் இதுவரைப் பார்த்தறியாத முகமும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை உணரத்துவங்குவோம். அப்பா, அம்மா சொன்னத கேட்டுருக்கலாமோன்னு நெனச்சுட்டீங்கன்னா, you are a failure. You could have watched the movie “What happens in Vegas”. This is what the judge says to the couple
Listen, I've been married for twenty five years to the same wonderful, infuriating woman. And granted there are days when I want to light her on fire but I don't, because I love her. And that would be illegal. And you know something, and I might be old fashioned but when I said those vows, I meant them.
சில நேரம் கோபத்தில் எரித்து விடலாம் என்று தோன்றுகிறதாம். நீங்களும் என்னடா பொழப்பு இது. பெரிய தப்பு பண்ணிட்டோமோன்னு நெனக்கலாம். சில நேரம் தோண தான் செய்யும். தப்பில்ல. But, always remember, this is the person you loved with all your heart. குறைகளும் கொண்டவர்தான் உங்களது வாழ்க்கைத்துணை. நீங்களும் அப்படியே. Don’t ever allow a third person between you two – your parents, siblings, friends. காதலித்தவர்களை மணக்காமல் சந்தர்ப்பவசத்தால் வேறு யாரையாவது மணந்தவர்களின் மணவாழ்க்கையிலும், சிறு ஏமாற்றங்கள் வந்தால் கூட போதும் – பழைய உறவுகளைப் புதுப்பிக்க முயல்கிறார்கள்.
Listen, Dinosaurs had their shot, and nature selected them for extinction. – Jurassic park dialogue. Similarly, your previous relationships were also meant to be extinct. You are destined to be with your present partner (Unless and otherwise, the partner is too abusive are anything like that).
சுய-கழிவிரக்கத்தில் தன் பழைய காதலன்/காதலியையோ தேடிப் போவது இப்போது மிகச்சாதாரணமாகவும் சுலபமானதாகவும் மாறிவிட்டது நம்முடைய சோஷல் மீடியாக்களின் புண்ணியத்தில். Men and women in their 40s come to a mid-life crisis and all the hells break loose. A known devil is better than an unknown satan. Remember this.
உங்கள் வாழ்க்கைத்துணையிடம் எதுவெல்லாம் இல்லையென்று நீங்கள் நினைத்து வேறு யாரையாவது நாடுகிறீர்களோ, அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்காத வேறு சாத்தான் ஒளிந்திருக்கலாம்.
For all the married couple out there, get old together. தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காது இருக்கட்டும். உங்களின் காதல் தீரா நதியாக உங்களின் ஆன்மக் கரைகளுக்குள் அலை பாயட்டும். என் மனம் நிறைந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes