மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து உலகத்தமிழ் இணைய மாநாட்டை மலேயா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 15-18 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். உயர்திரு. அனந்தகிருஷ்ணன், டைரக்டர், ஐ.ஐ.டி கான்பூர், அவர்களும் உயர்மட்டக்குழுவின் ஒரு உறுப்பினர். தமிழில் உள்ள மென்பொருட்கள், இன்னும் புதிய தமிழ் மென்பொருட்கள் உருவாக்க வேண்டியதன் அவசியம், இருக்கும் தமிழ் மென்பொருட்களின் தரம், அவை இன்னும் அப் டி த மார்க் இல்லாமல் இருப்பதன் காரணங்கள் முதலியவற்றை விரிவாக அலசினார்.
தமிழில் இருக்கும் மென்பொருட்களை நாம் முதலில் பயன்படுத்துகிறோமா? என்னென்ன மென்பொருட்கள் தமிழில் இருக்கின்றன என்பது முதலில் நமக்குத்தெரியுமா? இப்போதைய தொழில்நுட்ப யுகத்தில், ஒரு மொழி சர்வைவ் செய்ய வேண்டுமென்றால் அது தன்னை மொழித்தொழில் நுட்பத்துக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழுக்குத் தன்னார்வலர்கள் பலர் சிறப்பான மென்பொருட்களைத் தயாரித்துள்ளனர். ஆனால் நாம் யாரும் அதைப்பயன்படுத்துவதில்லை. ஒரு பொருளைச் சந்தைப்படுத்த இயலாத போது, அதைத் தயாரிக்க பலர் முன்வருதில்லை. சந்தைப்படுத்த அவசியமில்லாத பொருளின் தரத்தைக்குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இது ஒரு லூப் மாதிரி போகிறது - தரமில்லாததால் பயன்படுத்துவதில்லை, பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் தரத்தை உயர்த்த முடியும். நாம் பயன்படுத்தி feedback கொடுத்தால்தான் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அதில் உள்ள குறைகளைக் களைய முடியும். இது தான் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் சாராம்சம். கீழே தமிழ் மென்பொருட்கள் பட்டியலைத் தருகிறோம். பயன்படுத்திப் . பாருங்கள்.
1. பெரும் பேராசிரியர். உயர்திரு. தெய்வசுந்தரம் அவர்களின் மென்பொருள். 90% மேல் சரியான அவுட்புட் தருகின்ற அருமையான சொல்திருத்தியுடன் கூடிய தமிழ்ச்சொல்லாளர் (வேர்ட் ப்ராஸஸர்) மென்தமிழ். ட்ரையல் வெர்ஷனைப் பயன்படுத்திப்பாருங்கள்
2. மைக்ரோசாப்ட் வேர்டோடு தரப்படுகிற தமிழ் சொல்திருத்தி மற்றும் ப்ராஸஸர். மென்தமிழோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். பேராசிரியர், தமிழ் கம்ப்யூட்டிங்கில் எங்கிருக்கிறார் என்று தெரியும்.
http://www.microsoft.com/ta-in/download/details.aspx?id=6804 MS Office 2010
3.பொன்விழி என்னும் ஓ.சி.ஆர். உங்கள் கையெழுத்தைக் கணிணி புரிந்து கொள்வதற்கான மென்பொருள். http://ildc.in/tamil/Gist/htm/ocr_spell.htm
மேலும் உங்களுக்குத் தெரிந்த தமிழ் மென்பொருட்களின் சுட்டிகளும் வரவேற்கப்படுகின்றன. மொழி, காலத்தை வெல்ல வேண்டுமென்றால், மொழித்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவோம் - செம்மொழியைக் கணிணி மொழியாகவும் ஆக்குவோம்.



10:51:00 AM
மாலா வாசுதேவன்
0 comments:
Post a Comment