Monday, October 4, 2010

பணமும், பணக்காரர்களும்


பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்தியாவில் மதிக்கப்படுகின்றனர். வேறெவரும் இங்கே மதிக்கப்படுவதில்லை - ஒரு சமீபத்திய சர்வேயின் முடிவுகள். இது டைம்ஸ் ஆஃப் இண்டியா நியூஸ்பேப்பரில் சமீபத்தில் வந்த ஒரு செய்தி. இதனோடு நான் ஒரு வரியைச் சேர்க்க விரும்புகிறேன் : இந்தியாவில் பணம் படைத்தவர்களுக்கும், நான் பணம் படைத்தவள் என்பதைக் காட்டிக் கொள்கிறவர்களுக்குமே மதிப்பு. இக்கருத்திற்கு நான் ஒரு ஆதாரத்தையும் தர விரும்புகிறேன். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன் நாங்கள் மும்பையில் வசித்தபோது நடந்த ஒரு சம்பவம் - இதுவும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தான் வெளியிடப்பட்டது. ஒரு டாக்டர் உ.பி மாநிலத்திலிருந்து மும்பையைச் சுற்றிப்பார்க்க வந்தார். சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்து, படித்து (படிப்பால் மட்டுமே) மருத்துவர் ஆனவர். அவருடைய தாயாருக்கு புகழ் பெற்ற தாஜ் ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருந்திருக்கிறது. நிறைவேற்றுவது ஒரு நல்ல மகனின் கட்டாயக் கடமை அல்லவா? குடும்பத்தோடு அங்கே சென்றிருக்கின்றனர். தாயார் கரிய நிறமும்,எளிய தோற்றமும் கொண்டவர் போலும். மகனும் அப்படியே. உள்ளே செல்ல முயன்ற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த மகன் ' நான் ஒரு டாக்டர். நீங்கள் கொடுக்கும் பில்லை என்னால் செட்டில் செய்ய முடியும் ' என்று சொல்லி தன் வங்கி அட்டைகளையும் காண்பித்துள்ளார். நோ யூஸ். அனுமதி மறுப்புக்கு Hotel management சொன்ன காரணம் அவர்கள் ரப்பர் செப்பல் அணிந்திருந்தார்களாம்.(நாங்கள் gateway of india சென்றிருந்தபோது கவனித்த விஷயம் - அந்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்த வெளிநாட்டவர் பலரும் அரைக்கால் சட்டையும், ரப்பர் செருப்பும் அணிந்து கொண்டு கையில் ஒரு வாட்டர் பாட்டிலுடனும் இருந்தனர்).
இங்கே நான் ஒரு சிறு தகவலைத் தெரிவிக்க விரும்புகிறேன். தாஜ் ஹோட்டலை ஜாம்ஷெட்ஜி டாடா துவங்கியதற்கான காரணம், 19ம் நூற்றாண்டில் அப்போது புகழ் பெற்று விளங்கிய வெள்ளையர்கள் மட்டுமே செல்லக்கூடிய அப்பல்லோ ஹோட்டலில் டாடாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.எனவே அனைத்து இந்தியர்களும் செல்லத்தக்க உயர்தர ஹோட்டலை நிர்மாணிக்க விரும்பி அந்த ஹோட்டலைக் கட்டுவித்தார்.1904ம் ஆண்டு அது துவங்கப்பட்டது.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது - நம்மிடம் பணம் இருக்கிறது என்பதை நாம் நம் நடை, உடை, செருப்பு, நகைகள் வாயிலாகப் பறை சாற்றினாலன்றி நம்மை ஒரு பயல் மதிக்கப்போவதில்லை.நம்மைப் பற்றியிருக்கும் நிறவெறியும், பணவெறியும் என்று ஓயும்?

என்னை சிந்தனையில் ஆழ்த்திய மற்றொரு நிகழ்ச்சி - பணம் படைத்தவர்களுக்கு எதிராகவோ, அவர்களைப் பற்றியோ எந்த ஒரு கருத்தோ, தகவலோ அவர்கள் ஒப்புதலின்றி யாரேனும் சொன்னால் அவர்கள் அடையும் நிலை Oh my God :(

நடிகர் சிவக்குமாரைப் பற்றி எனக்கு மிகவும் நல்ல opinion இருந்தது. அவரது நல்லொழுக்கம், பேச்சுத்திறன், கடமையுணர்வு etc. சமீபத்தில் அவரது மகன் கார்த்தி நடித்த 'நான் மகான் அல்ல' படம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக PRO நிகில்முருகன் தன்னுடைய Twitter accountல் ஒரே ஒரு வரி comment ஒன்று போட்டார் - "Why poor opening for Naan Mahan Alla?"
அவ்வளவுதான். உடனே நடிகரின் வீட்டிலிருந்து கண்டனங்கள். உடனடியாக அவர் சூர்யாவின் PRO பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஸ்ருதி கமல்ஹாசன் - எனக்கு நிகில் முருகன் PRO அல்ல என்று அறிக்கை வெளியிட்டார். (ஏற்கனவே நிகில் அவருக்கு PRO அல்ல. அவருடைய தந்தை கமலுக்குத்தான் நிகில் PRO - எல்லாம் ஏழாம் அறிவு படுத்தும் பாடு). நிகில் முருகன் ஒன்றும் சாதாரண ஆளில்லை. த்ரிஷா, ஹாரிஸ், கமல் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கும், பெரிய பட்ஜட் படங்களுக்கும் PRO வாகப் பணியாற்றியவர். தன்னுடைய துறையில் வல்லுனர். ஒரே ஒரு வரி உண்மைக்காக இந்த action எடுக்கப்பட்டிருக்கிறது. பணம் படைத்த சிவக்குமார் தன் மகனைப் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டதற்காக நிகில் மேல் எடுத்திருக்கும் நடவடிக்கை அவருடைய சகிப்புத்தன்மையின் லெவலைக் காட்டுகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes