Tuesday, January 17, 2012

எப்போதும் சந்தோஷமாயிருக்க எளிய வழிகள்

கற்கால மனிதர்களின் வாழ்வியல் சூழல் - எப்போதும் ஆபத்து நேரலாம். அதனால் எந்நேரமும் தயாராயிருக்க வேண்டும் - என்ற மனநிலையிலேயே அவர்களை வைத்திருந்தது. இயற்கைச் சீற்றங்களால், வனவிலங்குகளால், நோய்களால், உணவு பற்றாக்குறையால் என்று அவர்கள் எப்போதும் மனதளவில் பிரச்சனைகளை எதிர்நோக்க தயாராயிருக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றனர். இப்போது வாழ்வியல் சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் உடல் மாற்றம் அடைந்திருக்கிறது - மனம்? நிச்சயமாக இல்லை. எல்லாம் நிறைவாக இருக்கும் வேளையிலும் மனம் ஏதோவொரு முகம் தெரியா ஆபத்தைப் பற்றிய கற்பனை பயத்தில், கவலையில் உழல்கிறது. மனம் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டெரியும் சூழ்நிலையிலும், கவலை மேகங்கள் அதைச் சூழ ஒரு நொடி போதும். மனதை அடக்கி அதனை எப்போதும் சந்தோஷம் கொண்டிருக்கச்செய்ய எளிய வழிகள் இவை -

1. ஒப்பிடாதீர்கள் - பேஸ்புக் ஸ்டேட்டஸில் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்திலிருந்து, லக்ஸுரி க்ருய்ஸில், லண்டன் வீதியில் போன்ற அப்டேட்டுகளைப் பார்க்கும்போது நாம் மெட்ராஸ் மொட்டை வெயிலில், HOD tortureல் என்று தான் status update செய்யவேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதற்காக கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் போக்கும், அர்த்தமும் வேறு. மற்றவர்களோடு நம்மை கம்ப்பேர் செய்வது மனக்கஷ்டத்துக்குத்தான் வழிவகுக்கும். அவ்வாறு ஒப்பீடுகள் வரக்கூடிய சந்தர்ப்பங்களைத் தவிருங்கள். 2. சின்ன விஷயங்களிலும் சந்தோஷமடையுங்கள். உதாரணமாக இந்த மென்பனிக்காலத்தின் காலையில் அருந்தும் அருமையான ஒரு கப் காபி, இளையராஜாவின் ஜெயா டிவி ஷோ etc, etc... வாழ்க்கை கடுமையானது. மகிழ்ச்சியாயிருக்க காரணங்களைக் கண்டுபிடியுங்கள்.

3. நன்றியுள்ளவர்களாயிருக்கப் பழகுவோம். எத்தனையோ பேர் எதுவமேயில்லாமலிருக்கும்போது, நான் இதைக் கணினியில் டைப் செய்யவும், அதை நீங்கள் வாசிக்கவும் சந்தர்ப்பம் கொடுத்த இறைவனுக்கு நன்றி.

4. தேவைப்படுபவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்வோம். பின் வருவது ஒரு நல்ல ஆர்கனைசேஷன். முடிந்தால் அவர்களோடு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் திருப்பிச்செலுத்தமுடியாத வகையிலான உதவிகளைச் செய்யுங்கள். www.chennaisocialservice.org, Mr.Sivakumar : 9941014591. இதில் கிடைக்கும் மனநிறைவும் சந்தோஷமும் வேறெதிலும் இல்லை.

5. இறுதியாக இறைவனின் திருவடியை இறுகப்பற்றிக்கொள்வோம். ஒன்றை நினைத்து ஒன்றை மறந்து ஒடும் மனம் எல்லாம் நீயென்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே என்னும் தாயுமானவரின் என்றும் நினைவில் இருத்துவோம்

2 comments:

sridev said...

verrrrrrrrrrrrrrrrrrry nice...thank u padma..

மாலா வாசுதேவன் said...

Thank u fr ur comment selva

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes