Monday, January 9, 2012

ஒரு நற்செய்தி - புத்தகக்கண்காட்சியில் பூந்தளிர் அமர்சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது

35ம் புத்தகக்கண்காட்சி சென்னையில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மிக மகிழ்ச்சியைத் தந்த விஷயம் - கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் அமர் சித்திரக்கதை தமிழில் கிடைக்கிறது.







அந்தப்புத்தகங்களின் அட்டையைப் பார்க்கும்போது, நாம் படித்த கல்லூரிக்கு செல்லும் போது , ஆத்மார்த்தமான நண்பனை நீண்ட நாட்கள் கழித்துப்பார்க்கும்போது, நம்முடைய ஆதர்ச எழுத்தாளரை நேரில் சந்திக்கும்போது ஆகிய தருணங்களில் எல்லாம் ஏற்படும் நெகிழ்வு ஏற்பட்டது. என்ன தான் ஆங்கில அமர் சித்திரக்கதையைப் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து, விநாயகரை கணேஷா என்றும், இராவணனை ராவணா என்று பிள்ளைகள் படிப்பதைப் பார்த்தாலும் பிள்ளைகள் நம் புராணங்களை நம் தாய்மொழியில் படிப்பதையே நான் விரும்புகிறேன். கும்பகர்ணனின் கதையைப் படித்து குழந்தைகள் சிரித்து சிரித்து குதூகலிக்கும்போது ஆங்கிலத்தில் இதையே அவர்கள் படித்திருந்தால் இந்தளவு அவர்களால் கதையோடு ஒன்றிப்போயிருக்க முடியுமா? என்று தோன்றியது. சந்தேகம்தான்.

சர்வைவலுக்குப் பிற மொழிகள் தேவைதான். ஆனால் மனம் ஒன்றவும், மனம் கரையவும் தாய்மொழியில் படிப்பதாலும் எழுதுவதாலும் மட்டுமே முடியும்.


பி.கு

அருமையான ஏற்பாடுகள் செய்திருக்கும் அமைப்பாளர்கள், அரங்கத்திற்குள் இருக்கும் காபி வெண்டிங் மெஷினின் காபி தரத்தைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். நடந்து நடந்து காபி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் அந்தக் காபியைக் குடிக்கவே முடியவில்லை. நிறைய பேர் பாதி கப்பில் குப்பையில் போட்டுவிட்டனர் - நான் உட்பட.





1 comments:

Anonymous said...

ஆமாங்க காபிய வாயில் வைக்க முடியல

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes