Friday, December 9, 2011

சாப்ட்வேர் இன்ஜினியர்களின் வித்தியாச ஆன்சைட்

சென்னை பல்கலைக்கழத்தில் செமஸ்டர் எக்ஸாம்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அங்கு சூப்பர்விஷன் செல்ல நேரிட்டது. எக்ஸாம் ஹால் சூப்பர்விஷன் என்பது நான் ஏற்கனவே முன்னொரு பதிவில் சொல்லியிருந்ததைப்போல எனக்கு மிகவும் பிடிக்காத மொக்கை வேலை. வேறு வழியேயில்லாமல் சென்றேன்.


பார்வையற்ற மாணவர்களுக்கான ஹாலில் எனக்கு சூப்பர்விஷன் அலாட் செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட அனுபவம் எனக்கு முதன்முறையாகக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு உதவியாளர் வந்து மாணவர்கள் சொல்லச் சொல்ல எழுதிக்கொடுக்கின்றனர். அவர்களுக்கு ஸ்க்ரைப் என்று பெயர். பொதுவாக எக்ஸாம் ஹால்கள் மௌனத்தில் வெடித்துச்சிதறும். ஆனால் சலசலவென்று சத்தத்தோடு ஒரு எக்ஸாம் ஹால் இதுவே.


ஸ்க்ரைப்களாக வந்திருந்தவர்களில் காதில் எதுவும் அணியாமல் Swatch Watch, Puma bag உடன் வந்திருந்த பபிள்கம்மை மென்று மென்று மென்று கொண்டிருந்த இளம் பெண், தலையெல்லாம் பரட்டையாக பயங்கரமான Nike Shoeவும் ஒற்றைக் காதில் கடுக்கன் இளைஞன், மிக நீட்டாக ஆபிஸ் டிரஸ்ஸில் வந்திருந்த இரு இளைஞர்கள், சாதாரணமாக ஆடையணிந்த நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தோற்றத்தைக் கொண்டவர்கள் என வித்தியாச கலவையாக இருந்தது. அனைவரும் 25 வயது மிகாதவர்கள், இளைஞர்கள்.


அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரித்தேன் - நீங்கள் யார்? எப்படி ஸ்க்ரைபாக வந்தீர்களென்று. இவர்கள் அனைவரும் வெவ்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பாக இச்சேவையைச் செய்து வருவதாகத் தெரிவித்தனர். கடுக்கன் இளைஞன், துபாயில் வேலை பார்ப்பதாகவும், விடுமுறையில் வந்தபோது இதைச்செய்வதாகத் தெரிவித்தான். இளம்பெண் MBA Student, மற்றொரு பெண் கரஸ்பான்டன்ஸில் கெமிஸ்ட்ரி. அனைவரும் இளைஞர்கள், 25 வயது மிகாதவர்கள். அந்த ஆபிஸ் இளைஞர்கள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அமெரிக்கா போவார்கள், லண்டன் போவார்கள், ரிசார்ட்டுகளில் கூத்தடிப்பார்கள் என்று பல்வேறு மீடியாக்களாலும் உருவாக்கப்பட்டு வரும் பிம்பம் சுக்குநூறாக சிதைந்தது. அவர்கள் ஆபிஸிலேயே (Scope International) சமூக சேவைக்கு நேரம் ஒதுக்கி வசதி செய்து தருகிறார்கள் என்று சொன்னான் அந்தப்பையன்.

மேலும் இக்கால இளைஞர்கள் மேம்போக்கானவர்கள், சமூக அக்கறையில்லாதவர்கள் என்ற அசட்டு வாதங்களும் அங்கே பொய்யாக்கப்பட்டன. விடுமுறையில் வரும்போதும் தேடி வந்து உதவி செய்யும் அவ்விளைஞனும், பணிச்சுமையிலும் அங்கு வந்து அருமையாக எழுதிக்கொடுக்கும் அப்பொறியாளர்களும், மேலும் அங்கிருந்த அத்தனை அழகர்களும், அழகிகளும் மானுடத்தின் மீதான என் நம்பிக்கையை எப்போதும் போல் உயர்த்தினர்.

என்னருமை இளைஞர்களே, உலகமெனும் பெருஞ்சக்கரம் உருண்டோடுவதற்கான பல்சக்கரங்கள் நீங்களே, உம் போன்றவர்களே. வாழ்க நீவிர் வளமுடன் என்னாளும்

2 comments:

பிரேமா said...

அருமையான பதிவு....நன்றி மாலா....
அன்பு தோழி பிரேமா...

mala vasudevan said...

Thank u fr reading n commenting continuously Brem. its encouraging

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes