Friday, December 2, 2011

பொன்னியின் செல்வன் வாசக வெறியர்களுக்கு ஒரு அதிர்ச்சி


பொன்னியின் செல்வனை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதும் தமிழர் அனேகம். வந்தியத்தேவனின் குதிரையை மனதால் பின்தொடர்ந்தோர் கணக்கில் அடங்காதவர். அனிருத்தப்பிரம்மராயரின் அறிவுத்திறனையும், குருவை மிஞ்சிய சிஷ்யனான ஆழ்வார்க்கடியானையும் விரும்பாதவர் யார்?
பூங்குழலியின் நுண்ணறிவோடு கூடிய விளையாட்டுத்தனம், ஆதித்த கரிகாலனின் வீரம் மற்றும் வேகம், ராஜராஜனின் தியாகம், சேந்தன் அமுதனின் பக்தி, குந்தவையின் ஆளுமைத்திறன், நந்தினியின் மயக்கும் அழகு மற்றும் தீராக்கோபம், மதுராந்தகனின் கோழைத்தனம், துரோகம் என அப்புதினத்தில் இடம்பெறாத மனித உணர்ச்சிகளே இல்லை எனலாம்.
இங்கு ஆதித்த கரிகாலனின் மரணம் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. யார் அவரைக்கொலை செய்தது என்பதை கல்கி பூடகமாகவே விட்டிருப்பார். பாண்டியனின் ஆபத்துதவிகள், பழுவேட்டரையர், நந்தினி என்று பலரும் ஆதித்தனின் அகால மரண வேளையில் கடம்பூர் அரண்மனையில் இருந்ததாக கல்கி சித்தரித்திருப்பார்.
பொன்னியின் செல்வன் நாவலின்படி சோழ அரசியான செம்பியன்மாதேவியால் வளர்க்கப்பட்ட ஆனால் பாண்டியகுலத்தைச் சேர்ந்தவனான மதுராந்தகன் அரியணையைக்கைப்பற்ற சூழ்ச்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், உண்மையில் அரியணைக்குரியவராகக் கருதப்பட்டவரும், செம்பியன் மாதேவியின் திருவயிறுதித்தத்தேவருமான, சேந்தன் அமுதன் சிவனெறிச்செல்வராக, சிவக்கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தங்க நகைகளைக் காணும்போதும் சிவபெருமானின் பொன்மேனியை நினைவில்கொண்டு, பொன்னார்மேனியனே என்று சிவபதிகம் பாடிக்கொண்டிருந்திருக்கிறார். ராஜ்ஜியம் ஆளும் ஆசை துளியும் இல்லாத அவரை ராஜராஜனே அரியணையில் கட்டாயப்படுத்தி அமர வைத்ததாக நாவல் கூறுகிறது.
ஆனால் சமீபத்தில் படித்த ராஜராஜன் என்ற புத்தகத்தின் அடிப்படையில் (இப்புத்தகம் வரலாற்றுச்சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது - ஆசிரியர் ச.ந.கண்ணன், கிழக்கு பதிப்பகம்) உண்மையில் சேந்தன் அமுதன் என்ற உத்தம சோழனே சதி செய்து கரிகாலச்சோழனைக் கொன்றிருக்கிறார். எனவேதான் சுந்தரசோழனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தபின் உத்தமசோழன் ஆதித்தனைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்கவோ தண்டிக்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் மக்கள் உத்தமசோழனின் சதியை அறிந்தே இருந்திருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவில்லாத மன்னனாகவே அவர் விளங்கியிருக்கிறார். அவருக்குப்பின் அரியணையேறிய ராஜராஜன் ரவிதாஸன் முதலான சதிகாரர்களைத் தண்டித்திருக்கிறார் And rest is history.
கதைக்காகக்கூட ஒரு சோழமன்னனைக் கொலைகாரனாக காட்ட கல்கி விரும்பவில்லை போலும். எழுத்தாளர்களுக்கே உரிய டிராபேக் இது. உண்மை இதனால் நிச்சயம் மறைக்கப்படுகிறது.

9 comments:

Arun Kumar said...

I have read this novel.......Interesting post and shocking revelation too

மாலா வாசுதேவன் said...

vanakkam Arun. i too were shocked to know this. thank u fr ur comment. continue reading. :)

தருமி said...

power corrupts - even our former rajas!

மாலா வாசுதேவன் said...

Kalakkal comment Dharumi. nacchunnu irukku comment

V.Prema said...

you are always posting for your type of people.........naan ponniyin selvan padichathay illa.

v.Prema said...

Mrs.Mala vasudevan ennoda comment kum reply pannunga

sridev said...

Really shocked Padma..i planned to read it again(already read it 2 times) .. really hard to think senthan amudhan like this

மாலா வாசுதேவன் said...

Yes Selva I too got much shocked n it was really hard to believe

Prabhu said...

அனுஷா வெங்கடேஷ் எழுதிய காவேரி மைந்தன்( http://kavirimainthan.wordpress.com/) படித்தேன்.அதில் கொலை செயத்வனை கண்டுப்பிடிப்பது தான் கதை...அதிலும் பாண்டியர்களின் செயலாகவே இருக்கும்...

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes