Monday, September 6, 2010

பிள்ளைகளிடம் கேட்கக்கூடாத கேள்விகள்

பின்வரும் கேள்விகளைப் பிள்ளைகளிடம் (வயது 3 மற்றும் 5) கேட்பதைக் கட்டாயம் தவிருங்கள். மீறி நீங்கள் கேட்டால் வரக்கூடிய பின்விளைவுகளைக் கொடுத்துள்ளேன்.
  1. ரெஸ்ட்டாரண்ட்டில் இருக்கும்போது - உனக்கு ஜூஸ் வேணுமா அல்லது ஐஸ்க்ரீம் வேணுமா? (முடிவில் இரண்டையும் வாங்கிக்கொடுத்துவிட்டு கூடவே Benadryl மற்றும் Chericofஐயும் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப நேரிடும்)
  2. ஞாயிற்றுக்கிழமையன்று - இன்று எங்கே போகலாம்? (மூத்தது சிட்டி சென்டர் ப்ளே ஏரியா என்று சொல்லும்; இளையது பீச் என்று சொல்லும். முடிவில் சண்டையைச் சமாளிக்க முடியாமல் கோவிலுக்குப் போய் குடும்ப ஒற்றுமைக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு வீடு செல்வீர்கள்)
  3. அக்கா படிக்கிறால்ல நீயும் படிக்கலாம்ல? என்று இளையபிள்ளையிடம் (Bubbles, Pepper புத்தகங்களை 1001வது முறையாக நீங்கள் வாசித்து கதை சொல்ல நேரிடும். பிள்ளை ABC, 123 எல்லாம் படிக்காது. எனவே இந்தக்கேள்வி 'நமக்கு நாமே ஆப்பு வைக்கும் திட்ட'த்தின் கீழ் வரும்)
  4. வீட்டில் இருக்கும் கடைசித்துண்டு தின்பண்டத்தை (அது கடைசித்துண்டு ஆப்பிள், சாக்லேட், பிஸ்கட் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) - தம்பிக்கு வேணாமாம். நீ சாப்பிடுறியா? (இந்தக் கேள்வி கேட்டு முடிந்தவுடன் தம்பிக்கு உடனடியாக அது தேவைப்பட்டுவிடும். அக்காவிடம் நீங்களே கேட்டுவிட்டதால் அக்காவுக்கும் அது வேண்டும். நாம் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதுதான். இதுவும் மேற்சொன்ன same scheme (நமக்கு நாமே ஆப்பு)ன் கீழ் வரும்.
  5. இருமலா இருக்கே பாப்பா. இன்னிக்கு வேணா லீவ் போட்ருலாமா? (நாம் யோசிக்கத்தான் செய்து கொண்டிருப்போம். அதற்குள் யூனிஃபார்மைக் கடாசிவிட்டு சேட்டை ஆரம்பித்துவிடும். அக்கா இல்லாமல் பாசமலர் தம்பியும் பள்ளி செல்ல மாட்டார்)

7 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

கண்டிப்பாக நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை அநேக வீட்டில் இது கண்டிப்பாக நடக்கும்

லெமூரியன்... said...

ஹா ஹா ஹா...!
என்ன பண்றது ,அனுபவம் தான் சிறந்த ஆசான்..!
உங்க அனுபவம் வருங்காலத்துல எங்களுக்கு பாடமா இருக்கும்...

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi Mala,this is Christy Gerald.U have a nice blog Dear with interesting posts .Reach out Many Tamil bloggers.They will definitely follow U.Expecting many more to come.Following U.

mala vasudevan said...

hi christy thank u fr ur comments. its very encouraging. n ur blogspot is looking very professional n gr8. :)

aparnaa said...

LOL!! so true !! well said !!

Justus said...

experienceso??? super....

மாலா வாசுதேவன் said...

Thank you Justus for taking time to read and write your comments. Continue to read

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes