இந்த வருடம் எக்கனாமிக் ஸ்லோடவுன் இருக்கும் என்று உலகப்பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஐஐடி சென்னை மாணவன் ஒருவர் வருடத்திற்கு 64 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். இந்நிறுவனம் எத்துறையைச் சார்ந்தது? பேங்க்கிங், பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி போன்ற எந்தத் துறையும் இல்லை. மாதம் சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு ஆள் எடுத்துள்ள நிறுவனம் - பாக்கெட் ஜெம்ஸ். இந்நிறுவனம் செல்போன் கேம்ஸ் டெவலப் செய்யும் நிறுவனம். மேலும் பேஸ்புக் வருடத்திற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐஐடி பாம்பே மாணவருக்கு வேலை அளித்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட பொழுதுபோக்கு துறையைச் சார்ந்தவை. ஏன் ஓடுகிறோம்? நம்முடைய இலக்கு என்ன என்பது தெரியாமலே ஒரு மிகப்பெரிய ஓட்டப்பந்தயத்தில் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இருக்கும் இடத்தைத் தக்க வைக்க இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்கிறார்கள் மேனேஜ்மென்ட் குருக்கள். இதன் விளைவு மிகப்பெரிய மன அழுத்தம். அனைவரும் ஏதாவது சாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சாமான்யர்களுக்கு இங்கு இடம் இல்லை. இச்சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைப்படு்வது ஒரு ரிலாக்ஸேஷன். இதனால் பொழுதுபோக்குத்துறை மிக வேகமாக வளர்கிறது. இதன் வெளிப்பாடுதான் அனைத்து துறைகளிலும் மந்த நிலை நிலவும்போது, கம்ப்யூட்டர் கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனம் இவ்வளவு சம்பளம் கொடுத்து மாணவர்களை வேலைக்கு எடுப்பது.



6:39:00 PM
மாலா வாசுதேவன்
Posted in:
1 comments:
informative post
Post a Comment