Friday, April 12, 2013

பல்கலைக்கழகத் துணைவேந்தரின் துணிச்சல்

மேற்கு வங்கத்தில் Students' Federation of India வின் தலைவர் 22 வயது சுதிப்தா குப்தா போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். இம்மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையொட்டி மேற்கு வங்க நிதியமைச்சர் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினால் தாக்கப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கொடியை ஏந்திய சிலர் பிரசிடன்சி பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு பயிலும் மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.

இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலையில், அப்பல்கலையின் துணைவேந்தர் மாளபிகா சர்க்கார் அளித்துள்ள பேட்டி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. அவர் மீடியாக்களில் தெளிவாக நடந்ததை அப்படியே தெரிவித்துள்ளார். கையில் கட்சிக்கொடி ஏந்திய குண்டர்கள், பல்கலைக்கழகத்தின் லேபுகள், பிற பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கின்றனர் என்றார். அவர்கள் கட்சிக்காரர்கள் தானா அல்லது வேறு யாராவது கட்சியைக் களங்கப்படுத்துவதற்காக கட்சிக்கொடியைக் கையில் வைத்துக்கொண்டு அப்படிச் செய்தார்களா என்று நிருபர் எடுத்துக்கொடுத்த லீடுக்கு வளவள கொழகொழ பதிலைச் சொல்லாமல் அதைத் தீர்மானிக்க வேண்டியது காவல்துறை என்றார் கம்பீரமாக.
இத்துணைவேந்தரை நியமித்தது மம்தா பானர்ஜி.பேஸ்புக் கார்ட்டூனுக்கு லைக் கொடுத்ததற்காக கைது செய்யப்படுவது வங்கத்தில் புதிதல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தான் பார்த்ததை, தான் அநியாயம் என்று எண்ணுவதைத் தைரியமாக எந்தவித காம்ப்ரமைஸூம் இல்லாமல் எடுத்துச்சொன்ன இப்பெண்மணியின் நெஞ்சுரமும், நேர்மைத்திறமும் என்னை வியப்பிலாழ்த்துகிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான அபத்தங்களையும்,
 மேலிடத்தில் இருப்பவர்களின் அர்த்தமற்ற கோபங்களையும், செயல்களையும் - சர்வைவல் பிரச்சினை என்று கூறிக்கொண்டு மென்று முழுங்கிக் கொண்டு , சகிக்க முடியாமல் சகித்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். ஏன் நம் மாநிலத்திலேயே கிட்டத்தட்ட 160 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு பெரும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் தான் பேசும் அனைத்து மேடைகளிலும், தான் சார்ந்துள்ள ஒரு கட்சித்தலைவரையும், அவர் குடும்பத்தாரையும் காது கூசும் அளவிற்குப் புகழ்ந்து தன்னை அவர் காலடியில் அமர்ந்திருப்பேன் என்று கூறித் தரைமட்டமாகத் தாழ்த்திக்கொண்ட உரையை எவ்வளவோ முறை கேட்டிருக்கிறோம். அவரின் இத்தகைய `தன்னடக்க` பேச்சை விகடன் கூட சிறிய எள்ளலோடு வெளியிட்டிருந்தது.
     இப்படிப்பட்ட அடிவருடித்தனம் இல்லாமல், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட உயர்திரு.மாளபிகா சர்க்கார் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். We admire you Dear Madam

2 comments:

Prema said...

Before admiring that lady,You analyze her Political Back,Anybody will talk boldly if they have it so.............

மாலா வாசுதேவன் said...

Opinion agreed Ma'am. thank u fr ur comments

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes