Wednesday, November 9, 2011

4 நாட்கள் லீவ் போட்ட 2ஆம் வகுப்பு பிள்ளை

பிள்ளைகளுக்கு எதிர்பாராமல் ஒரு 4 நாட்கள் ஸ்கூலுக்கு லீவ் எடுக்கும்படி நேர்ந்துவிட்டது. 2ம் வகுப்பு பிள்ளை 4 நாட்கள் லீவ் எடுத்தால் நமக்கு கை கிட்டத்தட்ட ஒடிந்துவிடும். 7 subject (English, Tamil, EVS, Hindi, GK, Maths, Arts & Craft) - ஒவ்வொரு subjectஇலும் 10 பக்கம் எழுத வேண்டியிருக்கும். அதையாவது எழுதிக்கொடுத்து விடலாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.என்ன பின் வருவது போன்ற கமெண்ட்டைப் பிள்ளையிடம் கேட்க வேண்டியிருக்கும்.(#ஹேண்ட் ரைட்டிங் நல்லால்லைனு மிஸ் திட்டினாங்க. இனிமே கொஞ்சம் நீட்டா எழுதித்தாங்கம்மா என்றாள் என் மகள்). ஆனால் arts and crafts என்று ஒன்று இருக்கிறது. பென்சில் துருவலைப் பயன்படுத்தி பூ செய்யவேண்டும். சாக்லேட் தாளால் கப்பல் செய்யவேண்டும் - அவ்வ்வ்வ்வ்வ்.

இதில் நான் actualஆக சொல்ல நினைத்தது என்னவென்றால், நாங்கள் ஸ்கூல் படித்தபோதெல்லாம் (சுமார் 25 வருடங்களுக்கு முன்) லீவ் போட்டோமென்றால் ப்ரண்ட்ஸ்களின் வீட்டை நோக்கி ஓடுவோம். அவர்களின் நோட்டை வாங்கி விடுபட்ட பாடங்களைக் காப்பி செய்வதற்கு. பாடங்களை எழுதாமல் செல்வோமேயானால் டீச்சர் அடி பின்னி விடுவார்கள் பின்னி. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். நான்கு நாட்கள் விடுமுறைக்குப்பின் பள்ளி சென்ற என் மகள் திரும்பி வந்தபோது அவளுடைய க்ளாஸ் டீச்சரே அனைத்து பாடங்களுக்கான notesஐயும் மற்ற பிள்ளைகளிடம் வாங்கி கொடுத்து விட்டிருந்தார். தயவு செய்து நாளையே காப்பி பண்ணிவிட்டு மற்ற பிள்ளைகளின் நோட்டைக்கொடுத்து விட்டுவிடுங்கள். இல்லன்னா பிரின்ஸிபால் என்னைத் திட்டுவார் என்ற கெஞ்சல் தொனியிலான குறிப்புடன்.

எனக்கு ஆசிரியர்களின் இன்றைய நிலை குறித்து மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் service providerகளாகவும், மாணவர்கள் customer களாகவும் மாறிவிட்டதன் அவலம் இது. குரு என்ற உன்னத ஸ்தானம் இன்று இல்லை. மாணவர்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற கான்சப்ட்டே இன்று இல்லை. எங்க மிஸ்ஸ இன்னக்கி HM திட்டிட்டாங்க. எங்க மிஸ் class cupboardஅ நீட்டாவே வச்சுக்கல - என்று பிள்ளைகள் சொல்வதை சர்வசாதாரணமாக கேட்க முடிகிறது. தன் ஆசிரியை தன் கண் முன்னாலேயே மற்றொருவரால் திட்டப்படுவதைப் பார்க்கும் பிள்ளை எப்படி தன் ஆசிரியரை மதிக்கும்? ஆசிரியர் என்பதற்கான கம்பீரமான பிம்பம் சுக்குநூறாக உடைபடுகிறதல்லவா? சாதித்த நிறைய பேருக்குத் தங்கள் பள்ளி ஆசிரியரே Rolemodel ஆக இருந்திருக்கின்றனர் (உதா. அப்துல்கலாம் - அவரின் பள்ளி ஆசிரியர்தான் அவருடைய role model என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார்). எனக்கும் என் 10ம் வகுப்பு science teacher (உயர்திரு. மஹாலட்சுமி) தான் role model. வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்று எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அவர்தான். அது பற்றி பின்னொரு சமயம் எழுதுகிறேன். இப்படியொரு role model ஆசிரியர்கள் உலகிலிருந்து நம் பிள்ளைகளுக்கு கிடைப்பது இனி சாத்தியமா? அப்படி ஒருவேளை சாத்தியமில்லை என்பது நம் பதிலாய் இருக்குமேயானால் அதற்கு முழுமுதற்காரணமும் நாம்தான். ஆசிரியர்கள் அல்ல.

6 comments:

Deepak Karthik said...

nalla post, enga amma kooda teacher than.. school la HM la teachers ah students munnadi thitrathu ippo romba ordinary ah ayiduchu, neenga sonna marriye, ennoda teacher ah yaaravthu thittunu avangamela irukkura respect poidum !!!

Nall post, rasichu padichen :) naakooda onnu ezhuthalamunu mudivu paniruken.... Tamil la romba azhaga solirikinga poramaya irukku :)

MyKitchen Flavors-BonAppetit!. said...

Enga Amma kuda Teacherthan.role modelaha teachers kidappathu ippo remba kashtamthan.Luvd reading it.Nice write-up.

மாலா வாசுதேவன் said...

vaanga Deepak. Thank u fr ur comments :)

மாலா வாசுதேவன் said...

Thank u fr ur comments. pls continue reading :)

sridev said...

ஆசிரியர்கள் service providerகளாகவும், மாணவர்கள் customer களாகவும் மாறிவிட்டதன் அவலம் - sema point Padma..great thinking..romba anubavichittom la..?

v.Prema said...

Madam,you are exactly right.Private engg college la velai parkra professors m ithil adakkam....another point...doctoral supervisors of deemed university included...chairman therinchu iruntha pothum...guide aa wish kooda panna like panrathila..

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes