Friday, September 3, 2010

புத்தகப் பரிந்துரை

25 வருடங்களுக்கு முன், என் சிறு வயதில் தொலைக்காட்சி ஒரு ஆச்சரியமான விஷயம். எங்கள் தெருவில் 2 வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. எதிர்த்த வீட்டு சிங்கப்பூர் முஸ்லிம் பாய் மற்றும் ஒரு செட்டியார் வீடு. வெளியே ஆடிக் களித்து வீடு திரும்பும் பிள்ளைகள் வீட்டில் புத்தகங்களையே பொழுதுபோக்கிற்கு நம்பி இருந்தோம். அப்படித் துவங்கிய வாசிக்கும் பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு வகையான புத்தகங்கள்பிடித்திருந்தன, வழிநடத்தின. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
6 வயதிலிருந்து - 12 வயது வரை
பூந்தளிர் : இந்தப் புத்தகம் வாரமொருமுறை வந்து கொண்டிருந்தது. காக்கை காளி, கபீஷ் குரங்கு, மதியூகி மந்திரி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, ஹரீஷ், சிறுவர் மலரில் பலமுக மன்னன் ஜோ இந்தக் கதாபாத்திரங்கள் மனதைக் கொள்ளை கொண்டு சென்றன. கோகுலத்தின் 16 பக்க நடுப்பக்க வண்ணக்கதை, ஃபேமஸ் ஆனவர்கள் எழுதிய 'என் குழந்தைப் பருவம்', பின்னர் அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ், அமர்சித்திரக்கதை etc, etc. ஒரு விதத்தில் என் அப்பாவின் அகால மரணம் ஏற்படுத்திய இழப்பின் வலியை இப்புத்தகங்கள் மூலம் மறைத்துக் கொள்ள முயன்றேன் என நினைக்கிறேன்.

பின்னர் டீன் ஏஜில் மில்ஸ் & பூன்ஸ் நாவல்களும், ரமணிச்சந்திரன் நாவல்களில் வரும் கிரேக்க கடவுளை ஒத்த தோற்றத்தையுடைய கதாநாயகனும், குடும்பப்பாங்கான கதாநாயகியும், அவர்களின் காதலும் மனதைக் கவர்ந்தன. இச்சமயத்தில் Kahlil Gibranன் The broken wings என்ற புத்தகம் வாசிக்கக்கிடைத்தது. என்ன ஒரு அருமையான வாசிப்பனுபவம். இது கிப்ரான் 18 வயது இளைஞனாக இருந்தபோது சல்மா என்னும் இளம்பெண்ணோடு ஏற்பட்ட அவருடைய முதல் காதல் பற்றியது.

" In every young man's life there is a Selma who appears to him suddenly in the spring of life and transforms his solitude into happy moments" - ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும் ஒரு சல்மா ஒரு வசந்த காலத்தில் திடீரெனத் தோன்றி அவனுடைய தனிமையை, இனிமையான கணங்களாக மாற்றுகிறாள். அப்படி ஒருத்தி தோன்றுவதற்கு முன்னான தனிமையைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்.

"Solitude has soft, silky hands, but with strong fingers it grasps the heart and makes it ache with sorrow" - தனிமை மென்மையான, பட்டுக்கரங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் அது தனது வலிமையான விரலுகளைக் கொண்டு இதயத்தைப் பற்றி அதனைத் துயரத்தால் வலி கொள்ளச் செய்கிறது. நாம் இதே போன்றதொரு தனிமையை நிச்சயம் கடந்து வந்திருப்போம். ஒரு கிப்ரனோ, சல்மாவோ நம்முடைய வசந்த காலத்தில் தோன்றியிருக்கக் கூடும். இதில் சொல்லப்பட்ட காதல் படிக்கும் எவர் மனதையும் மயக்கியிருக்கும். நான் மட்டும் விரிவிலக்கா?

மற்றொரு புத்தகம் மாக்ஸிம் கார்க்கியின் தாய். இந்தப் புத்தகத்தில் வரும் தாய் கதாபாத்திரம் எந்த அளவு என்னை இம்ப்ரஸ் செய்ததோ அதே அளவு அதில் வரும் பாவெல், அந்திரேயாவின் நட்பு. இந்த இரு நண்பர்களிடையே இருந்த நட்பின் மேன்மை - நாவலில் இடம் பெறும் ஒரு வரி "நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். அங்கே நட்பு ஈருயிரும் ஓருடலுமாகப் பிரகாசித்தது. " இங்கே என் தோழியைப் பற்றி சொல்ல நினைக்கிறேன் - கல்லூரியில் பெண்கள் எப்போதும் தங்கள் தகப்பனாரின் பெருமையைப் பேசுவதில் பெருத்த ஆர்வம் கொண்டிருப்பர். என் தோழி தன் வீட்டில் ஒரே பெண். ரொம்ப செல்லம். அவள் ஒரு முறை கூட தன் அப்பாவைப் பற்றி பேசி நான் கேட்டதில்லை. நான் அவளிடம் கேட்டேன் ' நீ ஏன் உங்கப்பாவப் பத்தி எதுவும் பேச மாட்டேங்குற?' அவள் என்னைத் தட்டிக் கொடுத்து மெலிதாகப் புன்னகைத்தாள். ஒரு நொடியில் எனக்குப் புரிந்தது. என் அப்பாவை நான் நினைத்து ஏங்கி விடக்கூடாது என்ற கரிசனம். நண்பர்களே நிச்சயம் அங்கே நட்பு ஈருடல் ஓருயிராகப் பிரகாசித்தது.

பாரதியின் கவிதைகள் மனதிற்கு வலிமையைக் கொடுத்தன. பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ போன்ற வரிகள் சக்தியைக் குவித்தன. ஜெயகாந்தனின் நாவல்கள் லட்சிய வெறியை ஏற்படுத்தின.

இது ஒரு பருவம். Infatuation stage தாண்டியானது. தோழி அமெரிக்காவில் செட்டிலாகி வருடத்திற்கு ஒரு முறை ஃபோன் என்றாகி விட்டது. ஜெயகாந்தன் வாழ்க்கையோடும், அரசோடும் செய்து கொண்ட compromiseகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்களில் ஆவல் குறைந்தது.

பின்னர் படித்த சுந்தரராமசாமியின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்', பிரபஞ்சனின் வானம் வசப்படும் , மேலாண்மை பொன்னுச்சாமியின் முற்றுகை, டால்ஸ்டாயின் Anna Karenina உள்ளிட்ட நாவல்கள் வேறொரு உலகத்தைக் காட்டின. குடும் பம் என்னும் அழகான அமைப்பு, மனிதத்துவத்தின் மேன்மை இவை குறித்து இந்நாவல்கள் பேசின.

Anna Karenina வின் ஆரம்ப வரி -"All happy families are the same. the unhappy families are unhappy in their own way" . அதாவது அனைத்து சந்தோஷமான குடும்பங்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சந்தோஷமற்ற குடும்பங்கள் தத்தம் வழிகளில் சந்தோஷமற்றிருக்கின்றனர். ஆம் சந்தோஷமான குடும்பங்கள் இப்படித்தான் சந்தோஷமாக இருக்கின்றன - எந்தக் குடும்பத்தில், குடும்பத் தலைவி, கணவனிடம் " உன் காரியம் யாவிலும் நான் கை கொடுப்பேன். உலகை ஜெயித்து வா. உன் வெற்றி தான், என் வெற்றி. நீ காரியங்கள் ஆற்றத் தவறினால் நான் நெறிப்படுத்துவேன். இக்குடும்பம் உன்னைத் தாங்கும்" என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறாளோ, எந்தக் கணவன் தன் மனைவியிடம் "நீயே இக்குடும்பத்தின் ஆணிவேர். நீ இருக்கிறாய் என்ற தைரியத்தில் , உன்னை மையமாக வைத்து தான் நான் இயங்குகிறேன்." என்று தன் மனைவியைப் போற்றுகிறானோ அந்தக் குடும்பமே இனிமையாய் விளங்குகிறது. சுராவின் கு, பெ, ஆணில் வரும் SRS , தன் மனைவி லஷ்மிதான் தன் பலம் என நினைக்கிறார். மாறாக கணவன், மனைவி பரஸ்பரம் ஒருவர் மேலொருவர் மரியாதை இல்லாமல் இருக்கும் சாமுவின் குடும்பம் சீரழிகிறது. மே.பொ வின் கதைகளில் வரும் குடும்பத்தலைவி, தலைவன் மேல் அன்பு செலுத்தி நெறிப்படுத்துகிறாள். வானம் வசப்படுமின் ஆனந்தரங்கப்பிள்ளை பெரிய துபாஷ். அவருக்கும் தன் அரசியல் முடிவுகள் குறித்து தன் மனைவி என்ன நினைக்கிறார் என்பது முக்கியமாக இருந்திருக்கிறது. இந்த mutual respect தான் அன்பிற்கும் காதலுக்கும் அடிப்படை.

நட்பு, காதல், லட்சியம் அனைத்தையும் தாண்டி குடும்பமே ஒருவனுக்குத் தேவையான சகலத்தையும் அளிக்கிறது. I need your opinion on this friends. Also share the books that u enjoyed reading

9 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

6 வயதிலிருந்து - 12 வயது வரை
பூந்தளிர் : இந்தப் புத்தகம் வாரமொருமுறை வந்து கொண்டிருந்தது. காக்கை காளி, கபீஷ் குரங்கு, மதியூகி மந்திரி, சுப்பாண்டி, வேட்டைக்கார வேம்பு, ஹரீஷ், சிறுவர் மலரில் பலமுக மன்னன் ஜோ //

பூந்தளிர் கபீஷ் குரங்கு வாழை எவ்ளோ தூரம் வேணாலும் நீட்டுமே. அந்த படங்களும் கதைகளும் ரொம்ப அழகு. பலமுக மன்னன் ஜோ நம்ம நண்பனாச்சே. இந்த வாரம் சிறுவர் மலர்ல ஜோ எந்த முகத்தை மாத்துவான்னு எதிர்பார்ப்போட இருப்பமே...x-ray கண்ணுல பாக்குற ஒருத்தன் இருப்பானே...

மாலா வாசுதேவன் said...

hi ramesh, i published it bfore completing. read fully n give ur comments agn pls. thank u

Sandy said...

how come u miss out Archie?.

its u who made me crazy abt those fantastic stories.

Tnx for introducing Archie to me.

Sandy said...

and YES! Poonthalir - WoWWW!

but i feel so bad tht our kids are really unlucky to miss them.
however there are books like Tinkle Digest,

Poonthalir equals Poonthalir

லெமூரியன்... said...

பட்டி மன்ற தீர்ப்பு மாதிரி முடிசிருகீங்க..! :)
ஆனா நல்லா இருக்கு...!
நீங்க பட்டியலிட்டதில் சிலவும் பட்டியலில் வராமல் பலவும் என்னுடைய list உள்ளது

Unknown said...

eppo erukera kulanthaikal ellam booku theriyathu...mala.tv than ulagam pogo channel than amma,disney channel than appa,nick than thabi,dora than thangai,animax than thatha.teen agela hannah montana.reading habit eppo erukkera kulanthikal keeta ella.we r lucky mala

Subathra said...

Neenda natkalukku pirahu naam iruvarum inaiathalathin moolam santhikkiroam. vazhthukkal. Puthakathil padithathai palliyil paesikondathu nyabagam vandhadhu. iniya neenaivugalin vasantha kalam avai. anal ondru, ippadi oru yaezhuthattral unnidum olinthukondirupathu indru thaan thaeriyavanthathu. thodarattum intha malar chaendu. meendum vazhthukkal.

Shiva said...

Yes..those charcters made me to recall those nice child hood memories....we even ran a comic library by then among our school friends.....there used to be(and ever) some nice aroma while you open the hot and fresh book that comes to our home (weekly,bi-weekly and monthly)....as some one pointed, I am too the fan of "archie".

Another, thing which many people had commented is very true, the present day kids don't like to read like how we were.... teens don't spend time with family......but I strongly hope that this is the transition time for all of us, getting transformed to some stable state of life style (but can't do much abt this disturbances in the present day life style)...every one of us will get adjusted to the reality in a harmonious way

Anonymous said...

Hi...Very nice and feels nostalgic. Keep writing. I got what you are talking about ! :-)

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes