Tuesday, February 11, 2014

இஸ்லாத்துக்கு மாறிய யுவன் ஷங்கர் ராஜா

யுவன் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.மேலும் ராஜாவுக்கும், யுவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் ஒரு செய்தி உலாவுகிறது.ஏற்கனவே முதல் திருமணம் தோல்வியடைந்த நிலையில், யுவன் இரண்டாம் திருமணமாக ஒரு டாக்டரை மணந்தார். ஆனால் தற்சமயம் மூன்றாவதாக யாரையோ மணக்கவிருக்கிறார் என்றொரு வதந்தி.தாயின் இழப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாராம் யுவன்.

 திட்டமிட்டு செய்யப்படுகின்ற மதமாற்றங்கள் தனி ரகம். அவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களாகவே இருப்பர். ஆனால் அடித்தட்டுக்கு மேற்பட்ட நிலையிலிருக்கும் மக்கள், தாங்களாகவே, யாருடைய வம்படியான போதனையும் இல்லாமல், இப்படி மதம் மாறிக்கொள்ள முடிவெடுக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம் ஏதோவொரு தாங்கவொண்ணா மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்றே பொருள்.ஏதோ ஒரு இறை வடிவில் அவர்கள் மன ஆறுதல் அடைகிறார்கள் என்றால் அது நல்ல விஷயம்தானே. ஏன் அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டும்? இவர்களை, இவர்களின் குடும்பத்தார் ஜட்ஜ் பண்ணாமல், விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். 

யுவன் வேறு எந்த தவறான வழியையும் நாடாமல் (குடிப்பழக்கம் இத்யாதிகள்) தன் ஸ்ட்ரஸ்ஸைப் போக்கிக் கொள்ள இப்படி ஒரு ஆன்மிக வழியைத் தேர்ந்தெடுத்தது வரவேற்கப்படவேண்டிய விஷயம். இதனை அவரது குடும்பத்தார் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவருக்குத் தேவைப்படும் மாரல் சப்போர்ட்டைத் தர வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes