Thursday, April 19, 2012

இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பு கொள்வீர்களா - என்ன சொல்கிறார்கள் வெளிநாட்டவர்கள்

உலகப்பொருளாதாரம் ஆட்டம் கண்ட நிலையில், இந்தியப்பொருளாதாரம் நிலையாகவே இருந்தது. உலகில் பல்வேறு வங்கிகள் மூடப்பட்ட போது எஸ்.பி.ஐ யின் லாபம் உச்சத்திலிருந்தது. இந்த அடிப்படை பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பயன்படுத்தி அன்னிய முதலீட்டாளர்களை நம் பக்கம் ஈர்க்க நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம் - காமன் வெல்த் கேம்ஸ். அது முடிந்து நாம் பட்ட கேவலம் - சந்தி சிரித்தது எல்லாம் பழைய கதை. அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதன் அவசியம் என்ன? காரணம் ரிக் பிர்ச்.

காமன் வெல்த்தின் ஓப்பனிங் செரிமனி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.(www.youtube.com/watch?v=jZOhfEJc2e8 )மிக அருமையான லேசர் ஷோ, வாண வேடிக்கைகள். இதனை வடிவமைத்து செயல்படுத்தியவர்தான் ரிக் பிர்ச். இவர் 6 ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்ச்சிகளை ஆர்கனைஸ் செய்தவர். இவ்வளவு அனுபவம் வாய்ந்த இவரது கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிபிசி ரேடியோ சமீபத்தில் ஒரு கேள்வியை எழுப்பியது - பிஸினஸ் செய்வதற்கு இந்தியா ஒரு மோசமான நாடா? இந்தக்கேள்வி எழும்பும் படியாக ரிக் பிர்ச் சொன்னது - கரஸ்பான்டென்ஸுகளுக்கு முறையான பதில் அளிப்பதில்லை. எனக்கு பாக்கி $ 3,50,000. இது போல் வெளிநாட்டைச் சேர்ந்த 30 கான்டிராக்டர்களுக்கு மொத்த பாக்கி - $ 80 மில்லியன். 2 கான்டிராக்டர்களுக்கு மட்டுமே முழுத்தொகையும் செட்டில் செய்யப்பட்டுள்ளது. INDIA - I'll Never Do it Again இப்படி கூறி முடிக்கிறார் ரிக் பிர்ச். அவமானம்.

பொதுவாக நம் மனப்பான்மை இத்தன்மையாதகவே இருக்கிறது. ஒரு வேலையை முடிப்பதாக நாம் ஒப்புக்கொண்டோமேயானால் அதை தலை போனாலும் செய்து முடிக்கவேண்டும் என்ற சின்சியாரிட்டி எல்லாம் இன்று காணக்கிடைக்காதவை. எங்கள் டீமுக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டது. இதை 10 நாட்களில் முடித்துவிடுவீர்களா என்று கேட்டார் தலைவர். கட்டாயம் முடிப்போம் என்றார் எங்கள் டீம் லீடர். தலைவர் சென்ற பிறகு எப்டிங்க இத 10 நாள்ல முடிக்க முடியும். நீங்க பாட்டுக்கு சொல்லீட்டீங்க என்று என் டீம் லீடரைக் கேட்டேன். சும்மா சொல்ல வேண்டியது தான். 10 நாளுக்கப்புறம் பாத்துக்கலாம் என்றார். ஷாக். இட்ஸ் சீப். இதைத்தான் செய்யமுடியும். இதை செய்யமுடியாது என்று நேரடியாகச் சொல்லக்கூடிய தைரியமும், அடிப்படை நேர்மையும் ஏன் இல்லை? ஒரு பிரச்சினையை அந்த நேரம் தள்ளி வைத்தால் போதுமா? இப்படிப்பட்ட மனப்பான்மை நம் மீதான அடிப்படை நம்பகத்தன்மையைப் பாதிக்கிறதே.

ஒரு ஒப்பந்தந்திற்குள் செல்லும்முன் அதன் எல்லா கூறுகளையும் ஆராய்ந்து பின்னர் ஒப்புக்கொள்வோம். அப்படி ஒப்புக்கொண்டதை எப்பாடுபட்டேனும் செய்து முடிப்போம்.

எண்ணித் துணிகக் கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes