Wednesday, February 15, 2012

டீன் ஏஜ் ப்ரக்னன்ஸியைத் தவிர்க்க இங்கிலாந்து அரசின் திட்டம் - கொதிக்கும் பெற்றோர்

உலக அளவில் டீன் ஏஜ் கருத்தரித்தல் அதிகமாக இருப்பது ஐரோப்பாவில். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் என்கிறது சர்வே. இதைக்குறைப்பதற்காக சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டம் பெற்றோரின் கடும் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.
இங்கிலாந்து சவுத்தாம்ப்ட்டன் பகுதியில் சுமார் 9 பள்ளிகளைச் சேர்ந்த 13வயதான பெண்குழந்தைகளுக்கு கருத்தடை சாதனத்தைப் பொருத்தியுள்ளது அரசு.பெற்றோரிடமும் இது குறித்து தெரிவிக்கவில்லை. தற்செயலாக வெளியே வந்துள்ள அவ்விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீன் ஏஜ் கருத்தரித்தலைக் குறைப்பதற்கு நிச்சயம் இதுவல்ல வழி. முறையான உடலியல் அறிவும், பாலியல் விழிப்புணர்வுமே சரியான வழியாகும். பெற்றோருக்கே தெரியாமல் ஒரு 13 வயது குழந்தைக்கு கருத்தடை சாதனம் பொருத்துவது குழந்தைகளுக்கு எதிரான குரூரமான வன்முறை என்றே கருதுகிறேன். அரசே இப்படியொரு வேலையைச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்க அறிவீனமான செயல். பிள்ளைகளுக்கு வீட்டைத் தவிர வேறு எங்குமே பாதுகாப்பில்லை. குழந்தைகளை அடிக்காதீர்கள், கையால் சாப்பாடு கொடுக்காதீர்கள் என்று அபத்தமாக ரூல்ஸ் பேசுபவர்கள் குழய்தைகளுக்கு கருத்தடை சாதனம் பொருத்துகிறார்கள் - என்ன அறிவு, என்ன மேதைமை அடாடாடா

3 comments:

Dee........ said...

athiradigal thevai thane ? :)

Subathra said...

yaenna kodumai ithu...

எம்.ஞானசேகரன் said...

தங்களின் தளத்தை எனக்குப் பிடித்த தளமாக தேர்வு செய்து 'லீப்ஸ்டர்' விருதை தங்களுக்கு அறிவித்து மகிழ்கிறேன். விபரம் என் இடுகையில்...

http://kavipriyanletters.blogspot.in/2012/02/blog-post.html

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes