Saturday, September 3, 2011

சூப்பர் சீன்ஸ்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் இடம்பெறுபவை காதல் காட்சிகள். இவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை, எப்போது நினைத்து பார்த்தாலும் மனதில் இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும் காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.




நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்


நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்


திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்


சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்


என்று காணுமிடமெல்லாம் தன் காதல்துணையையே காணும் இனிமையன்றோ காதல். கமலஹாசனைக் காதல்மன்னன் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதே எனக்குப்புரியவில்லை. கமல் தன்னுடைய முக்கால்வாசி படங்களில் தன் மேல் காதல் வெறி கொண்ட கதாநாயகிகளுக்கு தமிழ் பண்பாட்டைக் கற்றுத்தருகிறார் அல்லது தன் வேலை எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கு காதலிக்கு தன் ட்ரேட்மார்க் முறையில் சொல்லிக்கொடுக்கிறார் - சகலகலாவல்லவன், காக்கிச்சட்டை, சிங்காரவேலன், குருதிப்புனல், தேவர்மகன், மகாநதி என்று என் நினைவில் தோன்றும் கமலின் அனைத்துப்படங்களிலுமே இதே நிலைதான். விஜயகாந்த், சத்யராஜ் என்று அந்த பீரியட் நடிகர்களின் அனைத்துப்படங்களுக்கும் இது தான் நிலை. கார்த்திக் துறுதுறு காதலனாகத் தோன்றி இளம் மனங்களைக் கொள்ளை அடித்தார்.


விஜய் காதல் காட்சிகளைப் பற்றி பேச ஒன்றுமேயில்லை. பத்தாம்பசலித்தனமான வசனங்களும் காட்சிகளுமே காதல் என்ற பெயரில் இடம் பெறுகின்றன. விஷால், சிம்பு, தனுஷ் முதலிய இன்றைய கதாநாயகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் - நண்பர்களிடம் சவால்விட்டு பெண்களை மடக்குவது போன்ற காட்சிகளைப் பெண்கள் நிச்சயம் ரசிப்பதில்லை.


கம்மிங் டு த பாய்ண்ட் - எனக்குப் பிடித்த காதல் காட்சி - ஜானி திரைப்படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி இடையேயான காட்சி - ரஜினி முதலில் கரும்பு ஜூஸ் 2 டம்ளர் வாங்கி வருவார். ஒரு டம்ளரில் இருப்பது சிந்திவிடும். நிறைய இருக்கும் டம்ளரை ஸ்ரீதேவியிடம் கொடுப்பார். ஸ்ரீதேவி அதை வாங்க மறுத்து குறைவாக இருக்கும் டம்ளரையே தனக்கும் கேட்பார். என்ன ஒரு அருமையான ரொமான்ஸ்.


ஒரு நல்ல, இனிமையான உணவை ரசித்து உண்ணும் போதும், அருமையான புத்தகத்தைப் படித்துக் கரையும்போதும் இதை ரசிக்க நம்மோடு அவன்/ள் வேண்டுமே, இந்த அருமையான உணவின் சுவையை அவனும்/அவளும் சுகிக்க வேண்டுமே என்ற நினைவுதானே, கரிசனம் தானே காதல். தனக்கு குறைவானதை எடுத்துக்கொண்டு நிறைவானதைத் தன் துணைக்குத் தருவது தானே காதல். அதே திரைப்படத்தில் இன்னொரு காட்சி. ஸ்ரீதேவி எதற்கோ அழுவார். அதை ரஜினியால் துளியும் சகித்துக்கொள்ள முடியாது. 'ஏன் ஏன் அழுறீங்க கண்ண தொடச்சிக்கோங்க" - தன் மனதிற்கினியவள் துயருறும் போது அதைக் காணவும் சகியாத மனம் தானே காதல் நிறைந்தது. அந்தக்காட்சியில் நீங்க அழுதா என்னால தாங்க முடியாது என்று வசனம் பேசியிருந்தால் that scene would have fell flat. எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியுமா? பேசாத வெற்றிடத்தையும் நிரப்புவது தானே காதல். இதற்கு இணையான ஒரு காதல் காட்சியை இன்று வரை நான் காணவில்லை. அதே படத்தின் சென்யோரிட்டா பாடலில் கற்பனை காகம் கதாநாயகியின் மேல் அசிங்கம் செய்துவிடும். ரஜினி அதை துரத்துவார். அதில் தெரியும் அக்கறை - சான்ஸே இல்லை. இன்னொன்றையும் இவ்விடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். ரஜினி போல் பவர்ஃபுல் ஸ்கிரீன் பிரஸன்ஸ் கொண்ட நடிகர் இன்று வரை யாரும் இல்லை. power packed performance என்பார்களே அது - மற்றும் அந்த manliness. அதனால் தான் அவர் அன்றும் இன்றும் என்றும் SuperStar.


முன்னால் கண்ணாடிக்கதவைத்திறந்து கொண்டு கணவன் கடைக்குள் நுழைய பின்னால் குழந்தையுடன் வரும் மனைவி கதவைப்பிடிக்கத் தடுமாறுவதை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன். அக்கறைதான் காதல், பகிர்தல் தான் காதல். இதை அருமையாக சித்தரித்த ஜானிக்கே என் ஓட்டு.

7 comments:

கும்மாச்சி said...

எனக்கும் பிடித்த நடிகரும் அவர்தான். சான்சே இல்லை. முள்ளும் மலரும் பார்த்து ஒரு பதிவு போட்டிருக்கேம் படிச்சுட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

http://www.kummacchionline.com/2011/09/blog-post.html

மாலா said...

கட்டாயம் கும்மாச்சி. கமெண்ட்ஸுக்கு நன்றி :)

Anonymous said...

Dear Padma mala, your writings are very good.Even today we can see some good romances in the movies. But they are very few. I wish to share one such romance. In VARANAM AYARAM, Gautam Menon movie both Father Surya and Simran were sitting in the Sofa their son Surya and his friends play music in the guitar .Simran start dancing for that.After that she sit in the sofa at that time her husband hold her feet and give gentle press. There we can see his concern that is love. I really loved that scene. Good day.

மாலா said...

i definitely agree vth u priye. i too njoyed dat scene very much. bt i dnt know y - all d time my mind goes back n long fr those days - may be getting old :)

Anonymous said...

No No.we usally dont forget the past. That age we were with no commitments and that time what we saw, what we talked, played, we never forget. yr mother wont forget 1960s. Hope this is true. dont have tamil font if it is,i will express it nicely. Mother tongue is mother tongue. I think new topic is ready for you to write.

மாலா said...

i understang wat u mean to say rampriya. also as u hav pointed out, it gives me a theme for my next blog. thank u fr reading n commenting. it encourages me a lot

sridev said...

I also like that scene in Varanam aayiram, which is explained by Priya..happy to see people whose thoughts coincide with ours..

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes