Tuesday, August 17, 2010

விலைவாசி

நேற்று நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல நண்பர்களே. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்துவிட்டேன். மேட்டர் இதுதான் - அனைத்து ரெஸ்ட்டாரண்ட் பார்க்கிங் ஏரியாவிலும் ஒரு செக்யூரிட்டி நிற்பார் - மிகவும் வயதான, மிக மிக ஒல்லியாக, பொருந்தாத அளவில் யூனிபார்ஃம் அணிந்து கொண்டு நிற்பவரைக் கட்டாயம் நீங்கள் எந்த ரெஸ்ட்டாரண்ட்டின் அல்லது ஸூப்பர் மார்க்கெட் வாசலிலும் பார்க்கலாம். பார்க்கவே மனதுக்கு கஷ்டமாக இருக்கும். நம் வண்டியை எடுக்க உதவி செய்வது போல் ஏதோவொன்று செய்து கொண்டிருப்பார். (நிச்சயம் அவரில்லாமலேயே நம்மால் வண்டியை எடுத்துக் கொள்ள முடியும்). ஆனாலும் வயதானவர்கள் இப்படி ஏதாவது வேலை செய்வதைப் பார்க்கும் போது முகம் தெரியாத அவர்களின் பிள்ளைகளைத் திட்டத் தோன்றும். கைக்கு அகப்படும் சில்லறையை அவர்கள் கையில் தந்து விட்டு வருவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறே செய்ய நினைத்து பையைத் துழாவியதில் ரூ.2 மட்டுமே அகப்பட்டது. கொடுக்க நினைத்த போது அந்த செக்யூரிட்டி பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆளிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. எங்களுக்கு முன்னால் வண்டியை எடுத்துச் சென்றவரைப் பற்றிய விமர்சனம் - 'என்னை பிச்சைக்காரன்னு நெனச்சானா? 5 ரூவா குடுத்துட்டுப் போறான்'. ரூ.2ஐத் திரும்ப பையில் போட்டுக் கொண்டேன். உள்ளே ரூ.10 டிப்ஸூக்கு சர்வர் என்ன திட்டு திட்டிக் கொண்டிருப்பாரோ???!!!

1 comments:

aparnaa said...

LOL!!

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes