Monday, November 17, 2014

அப்பாக்களின் செல்ல மகள்கள்

காலையில் கல்லூரிக்கு பஸ்ஸில் பயணம் செய்வது ஒரு இனிய அனுபவம். முதிராத காலை (6.30), இதமான காற்று, ப்ரஷ்ஷான சக பயணிகள் அருமை. இந்தப் பயணத்தில், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் இருக்கிற அப்பாக்களையும், மகள்களையும் பார்ப்பது எனக்கு ஒரு இனிய பொழுதுபோக்கு. அவர்களது உடைகளும், வாகனங்களும், வீடுகளும் வேறு விதமாக இருந்தாலும் அடிப்படையில் அனைத்து அப்பாக்களும் மகள்களை ஒரே விதத்தில்தான் டீல் செய்கின்றனர்.  1. அப்பார்ட்மென்ட் வாசலில், அரைக்கால் சட்டையோடு, ஒரு தோளில் புத்தகப்பை மற்றும் வாட்டர்பேக், மற்றொரு கையில் சாப்பாட்டுக்கூடையோடு நிற்கும் அப்பா - ஏற்கனவே நான்காக மடித்ததைப் போல் இருக்கும் குட்டி கர்ச்சீப்பை எட்டாக மடித்து, மெலிதாக விசிறியபடி இருக்கும் டீன் ஏஜ் மகள் அல்லது பொறுப்பாக நொண்டி விளையாடிக்கொண்டிருக்கும் ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைத்த  ஸ்கூல் போகும் மகள். 2. ஒரு...

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய பிரபலங்கள் - சிம்பு

ஐயாம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று ஆடிப்பாடிய அந்த சின்னக் குழந்தையை ரசிக்காதவர்கள் அன்று தமிழகத்திலேயே கிடையாது. பின்னர் பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி என்று 10 வயது சிறுவனாக சிம்பு ஆடியபோது தியேட்டரே சாமி வந்து ஆடியது. சிம்புவுக்குப்பின் எந்தக் குழந்தை நட்சத்திரமும் அவ்வளவு பிரபலமாக ஆகவில்லை.(மே பி, எந்தக் குழந்தையையும் வைத்து அவன் அப்பா படம் இயக்கி, தயாரிக்கவில்லை என்று நினைக்கிறேன்).  என்ன தான் அப்பா படத்தில் நடித்தாலும் கூட, சிம்பு வெளிப்படுத்திய திறமை அசாத்தியமானது. வசன உச்சரிப்பு, அருமையான டான்ஸ் ஆடும் திறன், உணர்வுகளை வெளிப்படுததும் நடிப்புத்திறன் என்று அசரடித்தார்.சில வருடங்களுக்கு முன் ஒரு முன்னணி கதாநாயகனின் மகன், தன் தந்தையோடு ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடினார். பதட்டத்தோடு, மாஸ்டர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே ஆடிவிடவேண்டும் என்ற முனைப்புதான்...

Friday, November 14, 2014

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய பிரபலங்கள் - செல்வராகவன்

         இந்த எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய பிரபலங்கள் தொடர் பதிவில், இன்று செல்வராகவனைப் பற்றிப் பார்க்கலாம்.      இவரது முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை.(அபிஷியலாக காதல்கொண்டேன்) துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் இயக்குனர் கஸ்தூரிராஜா என்று கேட்டபோது வித்தியாசமாக இருந்தது. எட்டுப்பட்டி ராசா, கும்மிப்பாட்டு, கரிசக்காட்டுப்பூவே போன்ற படங்களின் இயக்குனரா இந்தப்படத்தையும் இயக்கினார் என்று ஆச்சர்யம் + சந்தேகப்பட்டபோது, இதை இயக்கியவர் அவரது மூத்த மகன் செல்வராகவன் என்று தெரிய வந்தது.  இப்படம் நன்றாகவே ஓடியது. யுவனின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட். கதாநாயகி ஷெரினும் பெரிதும் பேசப்பட்டார்.            தொடர்ந்து காதல் கொண்டேன். தனுஷின் மிரட்டலான நடிப்பு, சோனியா அகர்வாலின் பிரமாதமான அறிமுகம், அழகான ஒளிப்பதிவு, இனிமையான...

Friday, August 15, 2014

உங்களுக்கு எத்தனை நண்பர்கள்?

கொஞ்ச நாட்களுக்கு முன் திடீரென்று ஒரு நாள் கல்லூரி முன்னிருக்கும் வளையல் கடையில் கலர் கலராக கயிறுகள் தொங்கிக்கொண்டிருந்தன. என்ன விசேஷமென்று க்ளாஸில் பிள்ளைகளிடம் கேட்டபோது ஃப்ரண்ட்ஸ் டே மேம் என்றார்கள். ஒரு காலத்தில் எவ்வளவோ முக்கியமாகத்தோன்றிய ஒரு தினம் இன்று என்ன விசேஷமென்று கேட்கும் நிலையிலிருக்கிறது. நட்பென்பது எவ்வளவு அழகானது. என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்று தெரியாமலே இரவு 2 மணியாவதும், மறு நாள் காலை க்ளாஸில் தூங்குவதும், ரெஸ்ட்டாரண்ட்டில் சாப்பிட்டு முடித்து பே பண்ணி முடித்துவிட்டு, சர்வர் வந்து இந்த டேபிளுக்கு ஆள் வராங்க, கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க என்று சொல்லும் வரையில் பேசிக்கொண்டே அமர்ந்திருப்பதும், க்ளாஸை பங்க் பண்ணிவிட்டு வெளியே சுற்றுவதும்................... எந்த நொடியில் இதெல்லாம் நம் வாழ்விலிருந்து காணாமல் போகிறது? எப்போது துரோகங்களும் பொய்களும் நட்புக்குள் ஆரம்பிக்கின்றன?...

யுவனின் இரண்டாம் திருமணமும் பிரிவை நோக்கி......

இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கரின் பேட்டி சமீபத்தில் சென்னை டைம்ஸில் வந்திருந்தது. பெர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார் இந்த ராஜா வீட்டு `இளைய` ராஜா. 25 வயதில் நடைபெற்ற முதல் திருமணம் 3 மாதங்களில் பிரிவை நோக்கி சென்றிருக்கிறது. 30 வயதில் நடைபெற்ற இரண்டாம் திருமணமும் தோல்வியடைந்திருக்கிறது. இதே நேரத்தில் தன் தாயையும் இழந்திருக்கிறார் இவர். உறவுகளின் பிரிவு ஆறாத்துயரைத் தரக்கூடியது. குறிப்பாக வாழ்க்கைத்துணை. என்ன தான் தம்பதியருக்குள் சண்டை வருவது சாதாரண நிகழ்வாக இருந்தாலும், தன் கணவன் அல்லது மனைவியோடு போட்ட ஒரு சாதாரண சண்டை அன்றைய தினத்தின் அழகையே சிதைத்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் டைவர்ஸை நோக்கி செல்லும் சண்டைகள் எத்தனை மனக்காயங்களையும், வடுக்களையும் விட்டுச்செல்லும்??!!! இந்த மாதிரி சமயங்களில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகள் கூட வேண்டாம் - வெறும் அருகாமையே...

Sunday, June 8, 2014

80களின் குழந்தைகள் Versus தற்சமயக் குழந்தைகள்

80களின் மற்றும் தற்சமயக்குழந்தைகளுக்கு இடையே நான் பார்க்கும் ஸ்டீப் வித்தியாசங்கள் இவை: 1. 80களில் யாராவது சிட்டியிலிருக்கும் பெரிய அண்ணா அல்லது மாமா மட்டுமே கேமரா வைத்திருப்பார்கள். அவர்கள் ஊரிலிருந்து வரும்போது வீட்டிலிருக்கும் எல்லாக்குட்டிப்பிள்ளைகளையும் வரிசையாக நிற்க வைத்து ஃபோட்டோ எடுப்பார்கள். எல்லோரும் அடித்துப்பிடித்துக்கொண்டு லைனாக நிற்போம் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு. தற்சமயப் பிள்ளைகளை எந்தவொரு எக்ஸாட்டிக் இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாலும் ஏய் நில்லு நில்லு ஒரே ஒரு போட்டோ எடுத்துக்குறேன். கொஞ்சம் சிரியேன் என்று நம்மைக் கதற விடுவார்கள். மேற்கொண்டு இன்னொரு போட்டோ என்று சொன்னால் ஓ, நாட் அகைன் என்பார்கள். 2.  தீபாவளி, பொங்கல், பிறந்த நாளுக்கு மட்டுமே புது டிரெஸ் கிடைக்கும். எப்படா போட்டுக்கொள்வோம் என்று தவித்துக்கொண்டிருப்போம். இப்போது புது டிரெஸெல்லாம் பிள்ளைகளுக்கு...

Sunday, June 1, 2014

என்ஜினியரிங் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு எப்படி நடக்கின்றன இன்டர்வியூக்கள்???

ஏப்ரல், மே மாதங்களில் என்ஜினியரிங் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர் பணிக்கு எக்கச்சக்க வான்ட்டட் வரும். நாமும் சலிக்காமல் அப்ளை செய்து, எல்லா நேர்முகத் தேர்வுகளையும் அட்டண்ட் செய்து கொண்டிருப்போம். இன்ட்டர்வியூவில் சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள் நிறைய - ஒரே செட் ஆஃப் ஆட்களுக்குத்தான் வெவ்வேறு பல்கலைகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து அழைப்பு வந்திருக்கும். இந்த இன்ட்டர்வியூக்கள் குறித்த நெருடலை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.  நெருடல் - இன்ட்டர்வியூ அட்டண்ட் பண்ண வருபவர்களை இவர்கள் ட்ரீட் பண்ணும் முறை. சமீபத்தில் ஒரு பிரபல கல்விக்குழுமத்தின் இன்ட்டர்வியூ அட்டண்ட் செய்துள்ளார் என் முன்னாள் மாணவர் ஒருவர். இந்தக்கல்விக் குழுமத்திற்கு ஏகப்பட்ட கல்லூரிகள் உள்ளன - ஒரு டீம்ட் யுனிவர்சிட்டி உட்பட. ஒரு கல்லூரி மூத்த மகனுக்கு, ஒரு கல்லூரி இளைய மகனுக்கு மற்றுமொரு கல்லூரி மகளுக்கு, பல்கலை அவருக்கு என்று...

Thursday, May 29, 2014

நிஜமாகவே எல்லாம் அவன் செயலா?

நிஜமாகவே எல்லாம் அவன் செயல்தானா? நாம் நம் வாழ்க்கையில் பல சமயங்களில் நல்ல வேள, By God's grace தப்பிச்சேன். ஒரு அரை மார்க் குறைஞ்சிருந்தா அவ்ளோதான், வேலை போயிருக்கும், மெடல் போயிருக்கும் ஆர்டர் கெடச்சிருக்காது, ப்ராஜக்ட் கெடச்சிருக்காது, அந்த வீடு அமையாம போயிருந்திருக்கும்.......................... இப்படி பல பல சந்தர்ப்பங்கள், சம்பவங்களில் கடவுள் கருணையுள்ளவர் என்பதைச் சொல்லியிருப்போம். என்னுடைய இன்றைய வாழ்க்கை வரை எக்கச்சக்க முறை கடவுளின் கிருபையால் என்ற வார்த்தையை வெவ்வேறு சூழ்நிலைகளில்,  பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலான சமயங்களில் என் அறிவு, என் திறமை போன்ற நினைவுகளை ஒரு போலியான பெருந்தன்மையுடன் கஷ்டப்பட்டு பின்தள்ளிவிட்டு (அப்புறம் சாமி கண்ணக் குத்திரும் என்ற பயத்துடன் ;) )  By God's grace என்று சொல்லிக்கொள்வேன். என்ன தான் கடவுள் இருந்தாலும் என் அறிவால்தானே இந்த...

Tuesday, April 1, 2014

கலை வளர்க்கும் எத்திராஜ் கல்லூரி

          எத்திராஜ் மகளிர்க் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் இன்டர்-காலேஜ் ஃபெஸ்டிவல் சிருஷ்டி-14 கோலாகலமாக நடந்தேறியது. ஜெயம் ரவி, சமுத்திரக்கனி,ஆச்சி மனோரமா, சேரன், ஜீ.வி.ப்ரகாஷ், விவேக் என ஏகப்பட்ட சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள்.         இதில் என்னைக் கவர்ந்த விஷயம் என்னவென்றால்,ஃபேஷன் ஷோவில் அல்ட்ரா மாடர்னாகவும், வெஸ்டர்ன் டான்ஸ், ம்யூசிக்கில் இளையதலைமுறையின் பல்ஸுக்கேற்ப அசத்தும் மாணவியர், அதே அளவு உற்சாகத்துடனும் ஆதன்ட்டிசிட்டியுடனும் பரதநாட்டியத்திலும், கர்னாடக சங்கீதத்திலும் ஜொலிக்கின்றனர்.      இது வரை நான் பார்த்த பரதநாட்டியங்களில் - ஸ்கூல் ஸ்டேஜில் வெள்ளையாக இருக்கும் ஒரு குட்டிப்பெண்ணிற்கு தாவணியெல்லாம் கட்டிவிட்டு, குஞ்சம் வைத்து, ரோஸ் கலர் பவுடர், லிப்ஸ்டிக்கெல்லாம் அப்பிவிட்டு - ஒரு நாலைந்து பாட்டுகளுண்டு...

Friday, February 14, 2014

லேடீஸ் காலேஜ் வாட்ச்மேன்கள்

          அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல நான் படித்த மற்றும் வேலை பார்த்த, பார்க்கின்ற பெண்கள் கல்லூரி வாட்ச்மேன்கள் அனைவருமே மிகவும் கண்டிப்பானவர்களாக, அதே நேரம் அக்கல்லூரியைச் சார்ந்த அனைவராலும் விரும்பப்படுகிறவர்களாகவே இருக்கின்றனர்.          ஹோலிகிராஸ் சேஷு அண்ணா முதல் எத்திராஜ் அண்ணாதுரை அண்ணா வரை இவர்கள் கண்களில் தப்பி ஈ, காக்காய் கூட உள்ளே நுழைய முடியாது. அதுவும் ஒரு முறை சேஷு அண்ணா, காலேஜுக்கு ஒரு ஃபங்ஷனுக்கு வந்த சீஃப் கெஸ்ட்டை வெளியே நிறுத்தி புண்ணியம் கட்டிக்கொண்டார். என்னடா இன்னும் சீஃப்கெஸ்ட்டைக் காணோம் என்று கேட்டுக்கு வந்து பார்த்தவர்கள், அப்புறம் அவரை சேஷு அண்ணாவிடமிருந்து மீட்டு உள்ளே கூட்டிச் சென்றார்கள். (செல்போனெல்லாம் அப்போது கிடையாது).      ஸ்டூண்ட்ஸும் ஆசிரியர்களிடமிருந்து கூட கல்லூரி நேரத்தில்...

Tuesday, February 11, 2014

இஸ்லாத்துக்கு மாறிய யுவன் ஷங்கர் ராஜா

யுவன் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.மேலும் ராஜாவுக்கும், யுவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் ஒரு செய்தி உலாவுகிறது.ஏற்கனவே முதல் திருமணம் தோல்வியடைந்த நிலையில், யுவன் இரண்டாம் திருமணமாக ஒரு டாக்டரை மணந்தார். ஆனால் தற்சமயம் மூன்றாவதாக யாரையோ மணக்கவிருக்கிறார் என்றொரு வதந்தி.தாயின் இழப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாராம் யுவன்.  திட்டமிட்டு செய்யப்படுகின்ற மதமாற்றங்கள் தனி ரகம். அவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களாகவே இருப்பர். ஆனால் அடித்தட்டுக்கு மேற்பட்ட நிலையிலிருக்கும் மக்கள், தாங்களாகவே, யாருடைய வம்படியான போதனையும் இல்லாமல், இப்படி மதம் மாறிக்கொள்ள முடிவெடுக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம் ஏதோவொரு தாங்கவொண்ணா மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்றே பொருள்.ஏதோ ஒரு இறை வடிவில் அவர்கள் மன ஆறுதல் அடைகிறார்கள் என்றால் அது...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes