Saturday, December 24, 2011

சென்னை ஐஐடி கேம்பஸ் இன்டர்வ்யூ - மாணவனின் சம்பளம் வருடத்திற்கு 64 லட்சம் - எந்த துறை சார்ந்த நிறுவனத்தில்?

இந்த வருடம் எக்கனாமிக் ஸ்லோடவுன் இருக்கும் என்று உலகப்பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஐஐடி சென்னை மாணவன் ஒருவர் வருடத்திற்கு 64 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். இந்நிறுவனம் எத்துறையைச் சார்ந்தது? பேங்க்கிங், பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி போன்ற எந்தத் துறையும் இல்லை. மாதம் சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு ஆள் எடுத்துள்ள நிறுவனம் - பாக்கெட் ஜெம்ஸ். இந்நிறுவனம் செல்போன் கேம்ஸ் டெவலப் செய்யும் நிறுவனம். மேலும் பேஸ்புக் வருடத்திற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐஐடி பாம்பே மாணவருக்கு வேலை அளித்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட பொழுதுபோக்கு துறையைச் சார்ந்தவை. ஏன் ஓடுகிறோம்? நம்முடைய இலக்கு என்ன என்பது தெரியாமலே ஒரு மிகப்பெரிய ஓட்டப்பந்தயத்தில் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இருக்கும் இடத்தைத்...

Thursday, December 22, 2011

ஆ.ராசாவின் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரியின் 4 லட்சம் மதிப்புள்ள செல்போன்

2 ஜி வழக்கில் ஆ.ராசாவின் முன்னாள் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரி கோர்ட்டில் ராசாவிற்கு எதிராகத் தன்னுடைய சாட்சியத்தை அளிக்கத் துவங்கியிருக்கிறார். அவரைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருப்பவர் கனிமொழிக்காக ஆஜராகியிருக்கும் ராம் ஜெத்மலானி. நேற்றைய விசாரணையில் ஆச்சாரியின் செல்போனைப் பற்றி விசாரித்திருக்கிறார் ஜெத்மலானி. அதன் மதிப்பு ரூ2.5 லட்சம் முதல் ரூ 4 லட்சத்திற்குள் இருக்கும் என்பது அவரது எஸ்டிமேஷன். இந்த போன் உங்களுக்கு எப்படி கிடைத்தது? அதன் விலை என்ன? என்று ஆச்சாரியைக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இந்த போன் என் மனைவிக்குப் பரிசாகக் கிடைத்தது. எனவே அதன் விலை எனக்குத் தெரியவில்லை என்றிருக்கிறார். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு அவர்மேல் தொடர சிபிஐ காத்திருக்கிறது.இந்நிலையில் அந்த செல்போனின் விலையைப் பில்லோடு இன்று கோர்ட்டில் நிரூபித்திருக்கிறார் ஆச்சாரி. அந்த செல்போனின் உண்மையான...

Tuesday, December 20, 2011

தமிழ் கேபிசியின் ஹோஸ்ட் யார் - இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்

மிகப்பிரபலமான கேபிசி நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் நாளை முதல் விஜய் டிவியில் வரவிருக்கிறது. இதை நடத்தப்போவது சூர்யா (நன்றி டைம்ஸ் ஆ்ப் இண்டியா). நேருக்கு நேர் படத்தில் ஆட வேண்டிய நேரத்திலும் ஓடிக்கொண்டேயிருந்த அந்த இளைஞனின் வளர்ச்சி ஆச்சரியத்தைத் தருகிறது. தமிழில் இது போன்ற ஒரு ஷோவை நடத்திய சரத்குமார் அவ்வளவு பிரமாதமாகச் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. சூர்யா எப்படி நடத்தப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளே...

என் பாடல்களை தனுஷ் பாடலோடு ஒப்பிடாதீர்கள் - உலகமகா தமிழ்ப்பாடலாசிரியர் சிம்பு

இப்பலாம் யார் வேணாலும் தமிழ் சினிமால பாட்டெழுதலாம்னு ஆயிருச்சு. சும்மா எதையாவது வார்த்தைய சேத்துப்போட்டு பாட்டுன்னு சொல்றாங்க. என் பாட்ட இனிமே தனுஷ் பாட்டோட கம்ப்பேர் பண்ணாதீங்க - என்கிறார் லூஸுப்பெண்ணே லூஸுப்பெண்ணே போன்ற மனதை வருடும் காதல் பாடல்களையும், எவன்டி ஒன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் போன்ற உயர்தர, காலத்தால் வெல்ல முடியாத தத்துவப்பாடல்களையும் படைத்த மகாக்கவிஞர் சிலம்பரசன். இவரது லேட்டஸ்ட் படமான ஒஸ்தியிலும் ஒரு மிக அருமையான பாடல் - வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, எழுதியிருக்கிறார். அதன் வரிகள் - அடாடா - எதாவது கோயில் வாசல் கல்வெட்டுல எழுதி இவர் அது பக்கத்துலயே உக்காந்துக்கலாம். நமக்கு பின்னால வர்ற சந்ததிகள் அதப்படிச்சு, நம்மள பத்தி தெரிஞ்சுக்க வசதியாயிருக்கும். வரலாறு ரொம்ப முக்கியம் சிம்பு ;) கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் இன்ன பிறரும் போட்ட ராஜபாட்டையில் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கும்...

Friday, December 16, 2011

கொலவெறி இசையமைப்பாளரின் இன்றைய நிலை

கொலவெறி பாடல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்பற்றாளர்கள் கொலைவெறியோடு சுற்றுகிறார்கள் பாடலாசிரியரைப் பின்ன வேண்டுமென்று (நம்ம தனுஷ்தான்). இந்த ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடும், கலாச்சாரம் தகர்ந்துவிடும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. தமிழ் மொழி இந்த மைனர் glitches க்கெல்லாம் தகர்ந்துவிடக்கூடிய பலவீன மொழியல்ல. விஷயம் இப்பாடலின் இசையமைப்பாளருக்கு நம் தமிழ் திரையுலகம் தந்துள்ள cold response ஐப் பற்றியது. ஆனந்த விகடன் பேட்டியில் அவ்விசையமைப்பாள இளைஞன் தெரிவித்துள்ளார் தமிழ்த்திரையிசையுலகில் இருந்து யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ பாராட்டவோ இல்லை என்று. ஒரு இளைஞன் தன் முதல் பாடலின் இசையிலேயே உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளான் என்பது நிச்சயம் அங்கீகரிக்கப்படவேண்டிய விஷயம். தகவல் தொடர்பு மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்ட இக்காலத்தில் ஒரு எஸ்எம்எஸ்...

Friday, December 9, 2011

சாப்ட்வேர் இன்ஜினியர்களின் வித்தியாச ஆன்சைட்

சென்னை பல்கலைக்கழத்தில் செமஸ்டர் எக்ஸாம்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அங்கு சூப்பர்விஷன் செல்ல நேரிட்டது. எக்ஸாம் ஹால் சூப்பர்விஷன் என்பது நான் ஏற்கனவே முன்னொரு பதிவில் சொல்லியிருந்ததைப்போல எனக்கு மிகவும் பிடிக்காத மொக்கை வேலை. வேறு வழியேயில்லாமல் சென்றேன். பார்வையற்ற மாணவர்களுக்கான ஹாலில் எனக்கு சூப்பர்விஷன் அலாட் செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட அனுபவம் எனக்கு முதன்முறையாகக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு உதவியாளர் வந்து மாணவர்கள் சொல்லச் சொல்ல எழுதிக்கொடுக்கின்றனர். அவர்களுக்கு ஸ்க்ரைப் என்று பெயர். பொதுவாக எக்ஸாம் ஹால்கள் மௌனத்தில் வெடித்துச்சிதறும். ஆனால் சலசலவென்று சத்தத்தோடு ஒரு எக்ஸாம் ஹால் இதுவே. ஸ்க்ரைப்களாக வந்திருந்தவர்களில் காதில் எதுவும் அணியாமல் Swatch Watch, Puma bag உடன் வந்திருந்த பபிள்கம்மை மென்று மென்று மென்று கொண்டிருந்த இளம் பெண், தலையெல்லாம் பரட்டையாக...

Friday, December 2, 2011

பொன்னியின் செல்வன் வாசக வெறியர்களுக்கு ஒரு அதிர்ச்சி

பொன்னியின் செல்வனை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதும் தமிழர் அனேகம். வந்தியத்தேவனின் குதிரையை மனதால் பின்தொடர்ந்தோர் கணக்கில் அடங்காதவர். அனிருத்தப்பிரம்மராயரின் அறிவுத்திறனையும், குருவை மிஞ்சிய சிஷ்யனான ஆழ்வார்க்கடியானையும் விரும்பாதவர் யார்? பூங்குழலியின் நுண்ணறிவோடு கூடிய விளையாட்டுத்தனம், ஆதித்த கரிகாலனின் வீரம் மற்றும் வேகம், ராஜராஜனின் தியாகம், சேந்தன் அமுதனின் பக்தி, குந்தவையின் ஆளுமைத்திறன், நந்தினியின் மயக்கும் அழகு மற்றும் தீராக்கோபம், மதுராந்தகனின் கோழைத்தனம், துரோகம் என அப்புதினத்தில் இடம்பெறாத மனித உணர்ச்சிகளே இல்லை எனலாம். இங்கு ஆதித்த கரிகாலனின் மரணம் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. யார் அவரைக்கொலை செய்தது என்பதை கல்கி பூடகமாகவே விட்டிருப்பார். பாண்டியனின்...

Monday, November 28, 2011

ஃபேஸ்புக்கின் கதை - தி சோஷியல் நெட்வொர்க்

சோனி பிக்ஸ் சேனலில் The Social Network திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. 17.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்ததன் பின்னால் உள்ள அபாரமான மூளைத்திறனும், தொலைநோக்கும், நட்பும், நம்பிக்கை துரோகமும், ஐடியா திருட்டும், காத்திருந்து ஆளைக்கவிழ்க்கும் சதிகளும் - மார்வலஸ்.ஃபேஸ்புக்கை உருவாக்கியதன் பின்னணி கதை இது. நம்மூரைப்போல் இத்திரைப்படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே - யாரையும் குறிப்பிடுபவையல்ல என்ற முன்னுரையெல்லாம் இல்லாமல், அனைத்து பாத்திரங்களையும் அதே உண்மைப்பெயர்களோடு உலாவ விட்டிருக்கின்றனர். facebook ன் founderஆக வரும் கதாபாத்திரம் திரைப்படத்திலும் அப்படியே, அதே பெயரோடுதான் வருகிறார்.கதை இதுதான். zuckerberg ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மாணவர் (சைக்காலஜி மற்றும் கணினித் துறை). 2004ம் ஆண்டு தன் ரூம்மேட்ஸ் மற்றும்...

Friday, November 25, 2011

"ஏம்ப்பா நான் சரியாத்தான பேசுறேன்?"சந்தேகங்கள் :)

சில நேரங்களில், சில விஷயங்களில் நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனா, எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா, நான் மட்டும்தான் இப்படி பண்றேனா என்று சந்தேகங்கள் ஏற்படுவது உண்டு. அப்படிப்பட்டவற்றை இங்கு சொல்கிறேன். நீங்களும் அப்படித்தானா என்பதைச் சொல்லுங்கள் ப்ளீஸ்.With all due respect to Dr.A.P.J.Abdul Kalam (no offense intended). சத்தியமா எனக்கு அக்னிச்சிறகுகள் படிக்கும் போது இம்ப்ரெஸ்ஸிவாகவே இல்ல. இந்தியா 2020 புத்தகத்தை என்னால் படித்து முடிக்கவே முடியல. செமயா தூக்கம் வந்துருச்சு. ஒரே போரான நடை - உங்களுக்கு?முன்பே வா என் அன்பே வா பாடலை எல்லோரும் சூப்பர் பாட்டு என்கிறார்கள். எனக்கு அந்தப்பாட்டு செம மொக்கயா தெரியுது. அதே மாதிரி ராவணன் படத்தில் கள்வரே பாட்டு - ஐய்யய்யயோ அதல்லாம் பாட்டான்னு தோணுது. (இந்த மாதிரி பெரிய்யய லிஸ்ட்டே இருக்குப்பா)இதச்சொன்னா நம்மள கேவலமா பாக்குறாங்கப்பா.அப்புறம் மைக்ரோவேவ்...

Sunday, November 20, 2011

பழசை நோக்கி ஓடும் மனம்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருவதும், இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லாததாய் தோன்றுவதும் நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே அனேக நேரங்களில் அப்படித்தான் இருக்கிறது. ஏன் இந்த மனம் என்றும் பழசை நோக்கியே பாய்கிறது? ஆசிரியையாக வகுப்பின் முன் நிற்கும்போதும் ஏன் மாணவியாக benchல் அமர்ந்திருந்த நாட்களைநோக்கி மனம் பின்னால் பாய்கிறது?பருகுவதற்கு மிக இனிமையான Greams' Road Fruitshopன் freshஆன பழச்சாறுகள், MarryBrownன் மில்க் ஷேக்குகள், எக்கச்சக்க சாக்லேட் வெரைட்டிகள், ஐஸ்க்ரீம்கள், கேக்குகள், பிட்ஸாக்கள் இவற்றில் எதை பருகினாலும், உண்டாலும் ஏன் இந்த மனம் பழைய சூடமிட்டாயை, கல்கோனாவை நினைத்து ஏங்குகிறது? ஏன் கோல்ட்ஸ்பாட் படத்தைப் பார்த்தாலே தொண்டை அடைத்து மனம் வாடுகிறது?அது ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ் இல்லாத காலம். அப்போது நமக்கு ஏதும் பொறுப்புகள் கிடையாது....

Wednesday, November 9, 2011

4 நாட்கள் லீவ் போட்ட 2ஆம் வகுப்பு பிள்ளை

பிள்ளைகளுக்கு எதிர்பாராமல் ஒரு 4 நாட்கள் ஸ்கூலுக்கு லீவ் எடுக்கும்படி நேர்ந்துவிட்டது. 2ம் வகுப்பு பிள்ளை 4 நாட்கள் லீவ் எடுத்தால் நமக்கு கை கிட்டத்தட்ட ஒடிந்துவிடும். 7 subject (English, Tamil, EVS, Hindi, GK, Maths, Arts & Craft) - ஒவ்வொரு subjectஇலும் 10 பக்கம் எழுத வேண்டியிருக்கும். அதையாவது எழுதிக்கொடுத்து விடலாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.என்ன பின் வருவது போன்ற கமெண்ட்டைப் பிள்ளையிடம் கேட்க வேண்டியிருக்கும்.(#ஹேண்ட் ரைட்டிங் நல்லால்லைனு மிஸ் திட்டினாங்க. இனிமே கொஞ்சம் நீட்டா எழுதித்தாங்கம்மா என்றாள் என் மகள்). ஆனால் arts and crafts என்று ஒன்று இருக்கிறது. பென்சில் துருவலைப் பயன்படுத்தி பூ செய்யவேண்டும். சாக்லேட் தாளால் கப்பல் செய்யவேண்டும் - அவ்வ்வ்வ்வ்வ்.இதில் நான் actualஆக சொல்ல நினைத்தது என்னவென்றால், நாங்கள் ஸ்கூல் படித்தபோதெல்லாம் (சுமார் 25 வருடங்களுக்கு முன்) லீவ் போட்டோமென்றால்...

Friday, October 21, 2011

சென்னை MRTS திருவான்மியூர் ஸ்டேஷனில் ஒரு நாள்

காலையில் அரக்க பரக்க பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி அனுப்பிவிட்டு, தங்கள் பிரேக்ஃபாஸ்ட்டைச் சின்ன மூடி போட்ட கிண்ணங்களில் எடுத்து வந்து ரயிலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவியர், கையடக்கப் புத்தகங்களிலிருந்து ஸ்லோகங்களையோ, கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களையோ படித்துக்கொண்டிருக்கும் பெண்கள், லஷ்மி கடாட்சம் பெறுவது எப்படி என ஆன்மிக மலரிலிருந்து வாசித்துக்கொண்டிருக்கும் நீட்டான பேண்ட் சர்ட் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டிருக்கும் வினோதமான கெட்டப்பில் நடுத்தர வயது ஆண்கள், நின்றபடியே ஹிண்டு படிப்பவர் எனக் கலந்து கட்டி கம்பார்ட்மென்ட் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. என்னருகில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார் செல்போனைக் குடைந்தபடி. வேளச்சேரியிலிருந்து வண்டி லேசாக வேகமெடுத்து திரும்பவும் வேகத்தைக்குறைத்து மீண்டும் புறப்பட்டது. (யாராவது ட்ரெய்னைப் பிடிக்க...

Friday, October 14, 2011

அழகிய பிட்கெய்ர்ன் தீவு - பெண் குழந்தைகளின் பாலியல் நரகம்

ஒரு காலத்தில் தென் பசிபிக் பகுதியின் தனிமை சொர்க்கமாக கருதப்பட்ட பிட்கெய்ர்ன் தீவின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பெண் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தற்சமயம் வெளிவந்துள்ளன.பிட்கெய்ர்ன் தீவு பெருவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் அமைந்துள்ள உலகின் மிகத்தனிமையான, குறைவான மனிதர்களே வசிக்கும் ஒரு அழகிய தீவாகும். இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வரும் தீவாகும். இத்தீவின் தனிமையே இதன் மிகப்பெரிய அட்ராக்ஷனாகவும் இருக்கிறது. கடினமான பாறைகளும், அடர்ந்திருக்கும் மரங்களும், அலைகளின் தாலாட்டும், ஆளரவமற்ற தனிமையும் இங்கு முதலில் 1790ஆம் ஆண்டு ஃப்ளெட்சர் க்றிஸ்டியனின் தலைமையின் கீழ் வந்தடைந்த HMS Bounty கப்பலில் இருந்தவர்களுக்கு ஒரு சொர்க்கத்தை வந்தடைந்த உணர்வைத் தந்தது. இத்தீவின் தனிமை அவர்களுக்கும்,...

Friday, October 7, 2011

இந்தியா திரும்புவீர்களா NRI இன்ஜினியர்ஸ்?

சமீபத்தில் ஒரு நீண்ட ரயில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தது. பிள்ளைகள்வளர்ந்து விட்டதனால் அவர்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியமில்லாமல் பிரயாணத்தை ரசிக்க முடிந்தது. மிதமான ஏசி, சுவையான சரவணபவன் உணவு வகைகள் மற்றும் அருமையான புத்தகங்கள். ஒரு ரயில் பயணத்தை உபசொர்க்கமாக மாற்ற இவை போதுமல்லவா?வழியில் பெயர் தெரியாத சின்ன சின்ன ஊர்கள் ஓடி மறைந்து கொண்டிருந்தன. அந்த நிலையங்களில் காணப்பட்ட செடி கொடிகள் படர்ந்த உடைந்த பெஞ்சுகள் என் நினைவுகளை வேறெங்கோ இழுத்துச் சென்றன. அந்த நிலையங்களில் எந்த ரயில் நிற்கும் என்றே தெரியவில்லை. எதற்கு தன்னந்தனி காட்டுக்குள் இப்படியொரு ஸ்டேஷன்? அங்கிருந்து ஒடி மறையும் மண் சாலைகள் எங்கு செல்கின்றன? புரியவில்லை. அந்த பாழடைந்த தோற்றம் இங்கு தனிமையிலிருக்கும் பெற்றோரை ஏனோ எனக்கு நினைவுறுத்தியது.நான் என் நண்பர்கள் அல்லது பிள்ளைகளோடில்லாத...

Saturday, September 17, 2011

பாலுமகேந்திராவின் மனைவி

நான் என் மனைவிக்கே விசுவாசமாக இல்லை. இப்படிச் சொல்லிக்கொள்வதில் எந்த வருத்தமும் இல்லை - படப்பெட்டி சினிமா இதழ் வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா வெளியிட்டுப் பேசியது.தமிழ்நாட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்; தனது பெரும்பான்மையான படங்களில் (மீண்டும் கோகிலா, மறுபடியும், ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி) கணவன் வேறொரு பெண்ணை நாடிச் செல்லுவதில் உள்ள சிக்கல்களையும், மனைவிக்கு அதனால் ஏற்படும் மன உளைச்சலையும், நியாயமான கோபத்தையும் அழகுற, ஆழமாக காட்சிப்படுத்தியவரின் இப்படியொரு ஸ்டேட்மெண்ட் அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு கணவன் தன்னைவிட்டு வேறொரு பெண்ணை நாடும்போது அந்த மனைவி எவ்வளவு வருத்தமுறுகிறாள் என்பதை மிக நன்றாக ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து புரிந்து கொண்டு அதை மிகச்சரியாகவும் படம் பிடித்த ஒரு ஆண்மகன் தன் மனைவியை அதே போன்றதொரு சோகத்தில் ஆழ்த்துவது எப்படி சாத்தியம்? படைப்புகள் என்பவை ஒரு படைப்பாளனின்...

Friday, September 16, 2011

வேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன் - பார்ட் II

வேளச்சேரியில் உள்ள உணவகங்களின் சுவை, சர்வீஸ் மற்றும் விலை பற்றிய தொடர் பதிவு இது. முதலில் 100 அடி ரோட்டில் உள்ள சங்கீதா வெஜ் ரெஸ்ட்டாரண்ட். பொதுவாக எங்கள் வீட்டில் யாரும் வெஜ் ரெஸ்ட்டாரண்ட்டை, ரெஸ்ட்டாரண்ட்டாகவே கருதுவதில்லை ;). இருப்பினும் அந்த ஏரியாவின் மற்ற நான்-வெஜ் ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போக அன்று மனதில் தெம்பு இல்லாததால் (ஹிஹிஹி) இங்கு சென்றோம். சும்மா சொல்லக்கூடாது - நல்ல ஆம்பியன்ஸ். சீட்டிங் அரேன்ஜ்மென்ட்டும் வசதியாக உள்ளது. ஒரே டேபிளில் இந்தப்பக்கம் ஒரு குடும்பத்தையும் அந்தப்பக்கம் மற்றொர் முன்பின் தெரியாத குடும்பத்தையும் அமர வைப்பதில்லை. நாம் சென்று அமர்ந்தவுடன் ஒரு பெரிய பவுல் நிறைய சின்ன அப்பளம், வடகம் கொண்டு வந்து வைக்கிறார்கள். பிள்ளைகளுக்கு ஜாலிதான். starter க்கு சில்லி பன்னீர் க்ரேவி, மஷ்ரும் 65 ஆர்டர் செய்து கொண்டோம். மிக சாஃப்ட்டான...

Wednesday, September 14, 2011

விருதுநகர் புரோட்டா சால்னா

ஆரம்பிக்கும் முன் ஒரு சின்ன க்விஸ். கீழ்க்காணும் விருதுநகர் புரோட்டாவில் காணப்படும் பிழைகள் என்ன? விடைகள் கடைசியில்.விருதுநகர் காமராஜர் பிறந்த ஊர் என்பதற்கு அடுத்தபடியாக அதன் புரோட்டா சால்னாவிற்குத்தான் ஃபேமஸ். 60 வருடங்களுக்கு முன் தெப்பத்தை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தால், சுற்றியுள்ள புரோட்டா கடைகளில் ஊர் முதலாளிகள் (TKSP, VVR, MSP - ஊர் பெரிய மனிதர்களின் பெயர்ச்சுருக்கம்) அனைவரையும் பார்த்துவிடலாம் என்பார்கள் எங்கள் வீட்டுப் பெரியவர்கள். ஒரு காலத்தில் பெரிய மனிதர்களின் ஏகபோக உரிமையாக இருந்த புரோட்டா சால்னா இப்போது அனைவரும் புசிக்கக் கூடியதாக மாறிவிட்டது. சாயங்காலம் 5 மணி முதல் எல்லா புரோட்டா கடைகளிலும், புரோட்டா கிடைக்கத் துவங்கும். முன்பெல்லாம் பெண்கள் கடைக்குச் சென்று சாப்பிடமாட்டார்கள். வீட்டு ஆண்கள் வாங்கி வருவதற்காகக் காத்திருக்க வேண்டும்....

Tuesday, September 13, 2011

குட்டி பிள்ளைகளின் சுட்டி ரெஸ்பான்ஸ்கள்

பின் வருபவை 6 வயது அக்கா மற்றும் 4 வயது தம்பியின் பதில்கள், விளக்கங்கள் ;)காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் கேள்விக்கணைகள் - மீன் பல் தேய்க்குமா?; ரைனோசரஸுக்கு வால் இருக்குமா? (அவன் கேட்டவுடன் எனக்கே சந்தேகம் வந்துவிடும்); மழை பெய்யும்போது வானத்தில் ஏரோப்பிளேன் நனையுமே! யார் குடை பிடிப்பா?; tenக்கு அப்புறம் tenone தானே, ஏன் elevenனு சொல்றீங்க(பிள்ளை கேட்பதும் correct தானங்க. twentyக்கப்புறம் twentyone தான?) - இப்படி இடைவிடாத கேள்விகளில் நாம் பொறுமையிழந்து தொண தொணன்னு கேள்வி கேக்காதடா என்று அலறும் போது அக்குழந்தை உண்மையிலேயே குழம்பி - நான் கேள்வி கேக்கல அம்மா. பதில் கேக்குறேன் - என்று சொல்லும் குழந்தைத்தனத்தில் இறைவனைக் காணலாம்.Chips packet ஐ தலைகீழாக கவிழ்த்து விளையாடும் பிள்ளையிடம், ஏய் என்ன பண்ணிக்கிட்டிருக்க? அறிவு கெட்டது - என்று சொன்னவுடன் - நான் அறிவு கெட்டது இல்லம்மா - அறிவு நல்லது என்று...

Saturday, September 3, 2011

சூப்பர் சீன்ஸ்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் இடம்பெறுபவை காதல் காட்சிகள். இவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை, எப்போது நினைத்து பார்த்தாலும் மனதில் இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும் காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன் நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன் திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன் சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன் என்று காணுமிடமெல்லாம் தன் காதல்துணையையே காணும் இனிமையன்றோ காதல். கமலஹாசனைக் காதல்மன்னன் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதே எனக்குப்புரியவில்லை. கமல் தன்னுடைய முக்கால்வாசி படங்களில் தன் மேல் காதல் வெறி கொண்ட கதாநாயகிகளுக்கு தமிழ் பண்பாட்டைக் கற்றுத்தருகிறார் அல்லது தன் வேலை எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கு காதலிக்கு தன் ட்ரேட்மார்க் முறையில் சொல்லிக்கொடுக்கிறார் - சகலகலாவல்லவன், காக்கிச்சட்டை, சிங்காரவேலன், குருதிப்புனல்,...

Wednesday, August 31, 2011

ஆசிரியர்கள் உலகின் 5 ரகசியங்கள்

மாணவப்பெருமக்களே, ஆசிரியர்கள் உங்களுக்கு இதுவரை சொல்லியிராத இனிமேலும் சொல்லப்போகாத ரகசியங்கள் பின் வருபவை: ஆசிரியர்களுக்கு நீங்கள் nick name வைப்பதைப் போல அவர்களும் உங்களுக்கு nickname வைப்பதுண்டு. அப்பெயரை வைத்து தான் நீங்கள் departmentல் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் முன்னாள் மாணவராய் இருந்தால் உங்கள் டீச்சரிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் பெயர் என்னவென்று. Bit அடிக்கும் மாணவனைப் பிடித்த பின்பு எங்களுக்கும் (அதாவது ஆசிரியர்களுக்கும்) பயமாக இருக்கும் - பையன் பொன்னம்பலம் சைசில் இருப்பான். பத்திரமாக வீடு போய் சேர வேண்டுமே :) வகுப்பறையில் தூங்கும் மாணவனை அந்நேரம் திட்டினாலும் மனதிற்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் இருப்போம். departmentன் அன்றைய காமெடி பீஸ் அவன்தான் உங்களிடம் Take a paper - surprise test என்று சொன்னால் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு முந்தின நாள் guest வந்தார்கள். அதனால் prepare...

Sunday, August 28, 2011

ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை

நாம் மனிதர்களையும் அவர்கள்பால் நாம் கொள்ளும் உறவுகளையும் கையாள்வதில் என்றும் உணர்ச்சிவயப்பட்டவர்களாகவே இருக்கிறோம். பெண் என்னும் தனி மனுஷியை நமக்கு ஒன்று தெய்வமாக சித்தரிக்கவேண்டும் அல்லது பேயாக கேவலப்படுத்த வேண்டும். கணவனைக் கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுவாள் - டைப்பாக இருக்கவேண்டும். ஆசிரியர்களை mr அல்லது mrs என்ற அடைமொழியோடு பெயரிட்டு கூப்பிடுவதை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அதே போல் நண்பர்களையும், நட்பையும் ஒரு pedestalல் கொண்டு வைத்தபின் தான் நாம் ஓய்கிறோம். friendshipக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று பேசுபவரை திரைப்படத்தில், வகுப்பறையில், ஆஃபிஸில் எங்கும் காணலாம். போன வாரம் ஸ்கூலில் இருந்து வீடு திரும்பிய என் மகளின் கைகளில் காயம். என்னவென்று விசாரித்ததில் ஹரிணி கிள்ளிவிட்டதாகச் சொன்னாள். நீ miss கிட்ட சொல்லி வேற place போக வேண்டியது தான என்றேன்....

Monday, August 8, 2011

டப்பர்வேர் தோழிகள் ??!!

கல்லூரிப்பருவம் முடிந்த பின்னர் திருமணமானவுடன் தோழிகளோடு செலவிட பெண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. திருமணமான முதல் வருடம் தம்பதியருக்குள் ஒருவரின் குறை மற்றவருக்குத் தெரிவதில்லை. எனவே முதல் வருடம் இனிதே கழிகிறது. அடுத்த 3 வருடங்கள் ஒரே தலை போகிற சண்டை (ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கிறோமாம் ;) ). நீங்க ஏன் உங்க அம்மாக்கிட்ட அப்படி சொன்னீங்க? நீ மட்டும் அப்டி செய்யலாமா - இத்யாதிகள். அடுத்து ஒரு ஸ்டேஜ் - வாழ்க்கைத்துணை செய்யும் ஏதோ ஒரு செயல் மனவருத்தத்தைத் தருகிறது - ஆமா சொல்லி சண்ட போட்டானாப்ல என்ன ஆயிரப்போகுது என்ற மனப்பக்குவமும், தெளிவும் ஏற்பட்டுவிடும் ;)பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்லத் துவங்கிவிடுவர். இந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. கல்லூரித் தோழிகளின் நினைவு வருகிறது. இச்சமயத்தில் அக்கம்பக்கம் யாராவது நம்மோடு பழகமாட்டார்களா? ஏதாவது ப்ரண்ட் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. இப்படி...

Monday, August 1, 2011

ரியலிசப் படங்கள்

நீண்ட நாட்களுக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்சமய ட்ரெண்டான ரியலிச படங்களைப் பற்றி நான் நினைப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அங்காடித்தெரு, கற்றது தமிழ், நந்தலாலா, உன்னைப்போல் ஒருவன், தெய்வத்திருமகள் - இந்தப்படங்களின் க்ளிப்பிங்சைப் பார்க்கும் போதே மனதை ஒரு பதட்டம் ஆக்கிரமிக்கிறது. இவற்றின் இயக்குனர்கள் ஒரே குரலில் சொல்லும் செய்தி - உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இப்படத்தை எடுத்தேன். இவர்கள் சொல்வது நிச்சயம் சரிதான். ஒரு முறை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தோம் (இனிமேல் ஏழேழு ஜென்மத்துக்கும் அங்கு செல்ல மாட்டேன், அனைத்துப் பொருட்களையும் இலவசமாகக் கொடுத்தாலும் கூட). வழக்கம் போல் என் மகளுக்கு பாத்ரூம் வந்துவிட்டது. அங்கு இருந்த லேடீஸ் டாய்லெட் - தனியாக கதவுடன் இருக்கக்கூடியவை 6 இருந்திருக்கலாம் மற்றவை வெட்டவெளி. உள்ளே ஒரு பெருங்கூட்டம். தனி டாய்லெட்டுக்கு காத்திருப்பதெல்லாம் நிச்சயம்...

Sunday, January 16, 2011

ஏற்பது இகழ்ச்சி

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இனி தமிழ்நாட்டின் அடுத்த திருவிழா தேர்தல்தான். இப்போதே கருணாநிதியின் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் குவியத்துவங்கிவிட்டன - 1.75லட்சம் கோடியைச் செலவழிக்க வேண்டாமா? இதில் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற மொக்கை அறிவிப்பு வேறு. புல்லரிக்குது போங்க. சென்னையின் பெரும்பாலான ஏரியாக்களில் TV இலவச Door delivvery. நீங்கள் இதைப் பெற்றுக்கொள்வதற்கு எங்கும் போய் வரிசையில் காத்திருக்க வேண்டாம். சில மாதங்களுக்கு முன் இதைப்பெற்றுக்கொள்ள நீங்கள் அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல நேர்ந்திருக்கும். வேளச்சேரியில் இந்த இலவச தொலைக்காட்சியைப் பெற்றுக் கொள்ள Ford Ikon , Santro க்களில் வந்திருந்தார்களாம் மக்கள் (நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா). நீங்கள் எதற்கு இதை வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு என் வீட்டில் வேலை செய்பவருக்குக் கொடுக்க என்றார்களாம். இப்படிப்பட்ட...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes