Wednesday, January 23, 2013

குழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு?

        கோலாகலமாக நடந்து முடிந்து கொண்டிருக்கிறது புத்தகத்திருவிழா (இன்றே கடைசி). பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை. இந்த முறை சின்ன பிள்ளைகளுக்கான தமிழ்ப் புத்தகங்கள் ஆப்பிள் பிரசுரத்தால் மிகவும் சிறப்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ரீஸனபிள் விலை, மிக அழகான படங்கள், க்வாலிட்டி பேப்பர் - சுருக்கமான கதைகள். பிள்ளைகளால் மிக எளிதாகப் படிக்க முடிக்கிறது. இதைத்தான் நான் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
                  அதாவது, சின்னப் பிள்ளைகளுக்குரிய தமிழ்ப்புத்தகங்கள் (7 மற்றும் 5 வயது) அவர்களை வசீகரிக்கும் வண்ணம் இருந்ததேயில்லை - படமேயில்லாத மிக நீண்ட கதைகள், மொழி நடை வயதுக்கேற்றார் போல் இல்லாமல் - இப்படித்தான் இதுவரையில் கடந்த 4 வருடங்களாக நான் புத்தகச் சந்தையில் பார்த்தேன். ஆனால் இம்முறை அந்தக்குறையை ஆப்பிள் பிரசுரம் போக்கிவிட்டது. குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையான தரத்துடனும், சுவாரசியத்துடனும் தமிழ்ப்புத்தகங்கள் - Im impressed to the core. குழலினிது யாழினிது என்பர் தங்கள் பிள்ளைகள் தமிழ்ப்புத்தகங்கள் (அதாவது தாய்மொழியில் உள்ள புத்தகங்கள் ) படித்து இன்புறுவதைக் கேட்டு மகிழாதவர். ஜென்ம சாபல்யம் அடைந்தேன் ;)
மேலும் AGS.மணி என்பவர் ஒரு பிரசுரம் நடத்தி வருகிறார். சின்ன பிள்ளைகளுக்கான க்ளாசிக் வரிசை  தமிழில் (ஆலிஸ் இன் வெண்டர்லேண்ட், தீக்குச்சி விற்ற பெண்....) ஒரு புத்தக விலை ரூ.12. இதுவும் மிக நன்றாக இருந்தது. பேப்பர் அவ்வளவு தரமில்லை. ஆனாலும் பரவாயில்லை. இது ஒரு நல்ல முயற்சி.
           அப்புறம் இருக்கவே இருக்கிறது நம் அமர்சித்திரக்கதை. காக்கை காளி, சுப்பாண்டி, தந்திரி மந்திரி - பூந்தளிரில் நாம் ரசித்து ரசித்து ரசித்த கேரக்டர்கள் - ஆங்கிலத்தில் தொகுப்பாக வெளியிடுகின்றனர். இதைத் தமிழிலும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். என்ன தான் என் பிள்ளை இதை ஆங்கிலத்தில் சிரித்துச் சிரித்துப் படித்தாலும், அவள் (ன்) தமிழில் படிப்பதையே நான் மிகவும் ரசிக்கிறேன். குரங்கு கபீஷை ஏனப்பா ஆங்கிலத்தில் கூட வெளியிட மறுக்கிறீர்கள்???
            நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்திலும் நான் மேற்சொன்ன வயது குழந்தைகளுக்கான சில தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கின்றன.இன்னொரு இனிய காட்சி - நான் எந்த ஸ்டாலில் எல்லாம் சின்ன பிள்ளங்க தமிழ் புக், சின்ன பிள்ளங்க தமிழ் புக் என்று தேடிக்கொண்டிருந்தேனோ அங்கெல்லாம் இன்னொரு அப்பா (பிள்ளைகள் 5 மற்றும் 3 வயது) சின்ன பிள்ளங்க தமிழ் புக் தேடிக்கொண்டிருந்தார். அப்புறம் ஸ்டால் எண் டிப்ஸெல்லாம் பரிமாறிக்கொண்டோம்.  பிரசுரகர்த்தாக்களே நீங்கள் வெளியிடுங்கள் - நாங்கள் வாங்குவோம் கட்டாயம்.
              மற்றும் க்ராஸ்வேர்ட், விடுகதைகள் ..... (ஆங்கிலத்தில்தான்) - இவ்வாறு எங்கள் குடும்பத்தின் புத்தகக்கண்காட்சி இனிதே முடிந்தது.
எனக்கு வாங்கிய புத்தகப்பட்டியல் பின்னொரு பதிவில் :)
 
 

Tuesday, January 15, 2013

பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கு்ம் பாலமேடு ஜல்லிக்கட்டு - வசந்த் டிவி நேரடி ஒளிபரப்பு

வசந்த் டிவியில் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது - உண்மையில் செம த்ரில். மாடு பிடிப்பவருக்கு பரிசுகள் பீரோ, சைக்கிள், பாவாடை (???), தங்கக்காசு, வேட்டி, அண்டா, குடம். வாடிவாசலின் இருபுறமும் சைக்கிள், பீரோக்களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். வாடிவாசலின் மேல் சிறிய மூங்கில் மேடை கட்டி ஊர்க்காரர் ஒருத்தர் லைவ் காம்ப்பியர் பண்ணிக்கொண்டிருக்கிறார் (மேடை ஒரு டைப்பாக இருக்கிறதே  - விழுந்துவிடாதா?).  டிவி சார்பாக பட்டு சேலை கட்டி ஒரு பெண் மற்றும் வேட்டி சட்டையில் ஒரு ஆண் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் இருவரின் வர்ணனை ஒரு சாம்பிள் -
பட்டு வேட்டி சேலை ஆண் பெண் 
                மீன் கிடைக்காத போது சும்மா நின்று கொண்டிருக்கும் கொக்கு மீனைப் பார்த்தவுடன் பாயும் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க வீரர்கள் மாடு வந்தவுடன் பாயக் காத்திருக்கிறார்கள். காளையா வீர மாலையா என்று வீரர்கள் வீறு கொண்டு நிற்கிறார்கள். நம் கண்களும் வாசலைப்பார்த்து கண்கள் ஆயிரம் பூக்களைப் பூத்து நிற்கிறது. அதோ ஒரு வீரர் மாட்டை அடக்கி விட்டார் - கீழே விழுந்து விட்டார் - மருத்துவக்குழு வந்து தூக்கிவிட்டது.
நம் ஊர்க்கார காம்ப்பியரர் 
               ஏம்ப்பா மாடு பிடிக்க வந்திகளா, சும்மா நிக்க வந்திகளா?. மாட்ட புடிங்கப்பா. பூரா ப்ரைஸூம் மாட்டுக்காரந் தான் வாங்கிட்டுப் போறான். காசு கீசு வாங்கிட்டியா. ஏ யாரப்பா டிஷர்ட் (மாடு பிடிப்பவர்கள் அணிவது) போட்டுக்கிட்டு டிராக்டர் கீழ உக்காந்துருக்கிறது? சாப்பாடு கொண்டாரச்சொல்லவா. எந்திருச்சு மாட்டப் பிடியப்பா. மாட்டத்தொட்டாலாம் பரிசு கெடயாது, புடிக்கணும். ஏ சிங்கம்டா நீ - அது பிடிமாடு. வந்து பரிச வாங்கிட்டுப்போ. அது சின்ன அடிதான் வுடு சரியாப் போவும்.
எது போட்டியின் போக்கை அழகாகத் தெரிவிக்கிறது - Choice left to u to decide

Saturday, December 15, 2012

ரியல் அஞ்சாநெஞ்சன் அஜித்

                              வயதும் புறத்தோற்றமும்  பிரதானமான விஷயங்களாக இருக்கும் திரைத்துறையில் அஜித் ஒரு ஆச்சர்யம். அவருடைய சால்ட் அன் பெப்பர் லுக்கைப் பார்க்கும் போது உண்மையில் ஆச்சர்யமாக இருக்கிறது. வயதை இவ்வளவு வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடிகரும் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். விக்ரமிடம் ஒரு பேட்டியில் அவர் வயதைக் கேட்டபோது தெரிவிக்க மறுத்துவிட்டார். இது வரையில் அவர் பிள்ளைகளின் போட்டோவையும் வெளியிட்டதில்லை (உத்தேசமாக அவர் வயதைக் கணக்கிட்டு விடலாம் அல்லவா). 
                            இந்திய காஸ்மட்டிக் சந்தையின் மதிப்பு பல்லாயிரம் கோடி என்கின்றனர். சில பல மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்தினால்தான் நீ தேறுவாய் என்று மீடியாக்கள் அலறுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் நாம் நாமாக இருப்பதற்கு அசாத்தியமான தன்னம்பிக்கை தேவையாக இருக்கிறது. மேக்கப் இல்லாமல் உங்கள் முகத்தைக் காட்டத் துணிவீர்களா? என்று கேட்கிறது ஒரு சோப் விளம்பரம். நம்முடைய பலங்களை நாம் அறிந்திருந்தோமென்றால், நம்முடைய தோற்றம் பலவீனமாய் இருக்கும் பட்சத்தில் அதை பொருட்படுத்தாமல் இருக்கக் கூடிய மன திடம் நமக்கு வாய்க்கும். எங்கள் வகுப்புத்தோழர்களில் அனேகருக்கு ரோல்மாடலாக, இன்பிரேஷனாக (நான் உட்பட) இருந்தவர் எங்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பேராசிரியர்  டாக்டர்.மகிழ் கார். There is nothing spectacular about his looks. ஆனால் அவரின் அறிவு - சான்ஸே இல்லை.
                          நாம் என்ன தான் மேக்கப்பெல்லாம் போட்டுக்கொணாடாலும் கடைசியில் நாம் யார் என்பதற்காகத்தான் நாம் மதிக்கப்படப்போகிறோம் - நாம் எப்படி தோற்றமளிக்கிறோம் என்பதற்காக அல்ல. எல்லா சாயமும் ஒரு நாள் வெளுத்துவிடும்.

A thing of beauty is a joy forever;
A thing of truth is a thing of beauty.

உண்மையே அழகு.

Friday, November 30, 2012

மனீஷா கொய்ராலாவிற்கு கான்சர்

பிரபல நடிகை மனீஷா கொய்ரலாவிற்கு கான்சர். சில நாட்களுக்கு முன் ஒரு சமூக வலைத்தளத்தில் புட் பாய்சனிங்கால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தான் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டிற்காக நேபாளில் தங்கியிருக்கும் மனீஷா இரு தினங்களுக்கு முன் சுயநினைவை இழந்து கீழே விழுந்திருக்கிறார். அது வரை புட் பாய்சனிங் என்று நினைத்துக்கொண்டிருந்த அவரின் குடும்பத்தார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக அவரை மும்பை கொண்டு வந்திருக்கின்றனர். ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுள்ள அவர், இச்செய்தியை மிகத் தைரியமாக எதிர்கொண்டதாக அவரின் தோழி தெரிவிக்கின்றார். விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

கௌதம் மேனன், மணிரத்னத்துக்குப் படம் எடுக்கத் தெரியாது - தயாரிப்பாளர்கள் பாய்ச்சல்

சமீபத்தில் மணிரத்னத்தின் பல்வேறு பேட்டிகள் ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டியில் தான் இயக்கியதில் தனக்குப் பிடிக்காத படம் இதயக்கோயில் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் கோவைத்தம்பி டென்ஷனாகிவிட்டார். முதல் படம் தோல்வியடைந்த ஒரு புது இயக்குனருக்கு, அடுத்த படம் வாய்ப்புக் கொடுக்க எந்த தயாரிப்பாளர் முன்வருவார்? அந்த நிலையில் இருந்த மணிரத்னத்திற்கு அவர் வாய்ப்பு கொடுத்ததே பெரிய விஷயம்.  Beggars cannot be choosers என்பதை உணர்ந்துதான் மணிரத்னமும் இன்னொருவரின் கதையை இயக்கித்தருவதற்கு ஒப்புக்கொண்டிருப்பார். அப்போது அவருக்கு அந்த வாய்ப்பே பெரிய விஷயமாக இருந்திருக்கும். இதே போல்தான் கௌதம் மேனனும். லேப்டாப்பை வைத்துக்கொண்டு கதை சொல்வதற்கே தடுமாறியதாக காக்க காக்க திரைப்படத்தின் தயாரிப்பாளர் சொல்கிறார். ஆனால் படம் வெற்றியடைந்த பிறகு தயாரிப்பாளரைபற்றி எக்கச்சக்க குறை சொல்லி பேட்டி தருகிறார் கௌதம். தயாரிப்பாளரிடம் குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் நன்றி மறப்பது நன்றன்று. விக்ரமுக்கு நீண்ட வருடங்களுக்குப்பின் சேது ஹிட். அதற்கு அடுத்து அவர் நடித்த படம் விண்ணுக்கும் மண்ணுக்கும். கதையை ஓகே செய்து, வாய்ப்பை ஒப்புக்கொண்டு, நடித்து முடித்துப், பின் படம் சரியாக ஓடாத போது இயக்குனரைப் பற்றி அளவில்லாத குறை சொன்னார் விக்ரம். முதலில் ஏன் ஒப்புக்கொண்டீர்கள் Vikram?
நாம் ஒரு புது இடத்தில் வேலைக்குச் சேரும்போதோ, புது ஏரியாவில் குடி போகும்போதோ, அங்கே இருக்கும் மற்றவர்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத ஒருவர் நம்முடன் பழகி நம்மைப் புதிய சூழலுக்கு  familiarise பண்ணி விடுவார். முதலில் நமக்கும் அந்த நட்பு மிகத்தேவையாக இருக்கும். பின்னர் நாம் மற்றவருடன் பழகியவுடன் நாமும் அந்த முதல்வரைக் கண்டுகொள்ளமாட்டோம். இது சர்வசாதாரணமாக எல்லா இடங்களிலும் நடப்பதுதான். அட்லீஸ்ட் பின்னொரு நாளில் அவர்களைப் பற்றி குறை சொல்லாமலாவது இருப்போம்.
காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

Saturday, November 17, 2012

சொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி சொல்வது சரியா?

ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பெர்சனல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்கிறார் நிர்மலா பெரியசாமி. இந்நிகழ்ச்சியில் வரும் முக்கால்வாசி பிரச்சினைகள் முறையற்ற காதல் என்று சொல்லப்படுபவைதான். முறையற்ற காதல் என்று சொல்லப்படுவது எது? ஒரு திருமண பந்தத்தில் இருக்கும் ஆண் அல்லது பெண், வேறொரு பெண் அல்லது ஆணின்பால் ஈர்க்கப்படுவதை முறையற்ற / கள்ளக்காதல் என்கிறோம்.  இதனால் ஏற்படும் பிரச்சனைகளும் மன உளைச்சல்களும் ஏராளம். அந்த ஷோவுக்கு வந்த ஒரு பெண் சொல்கிறார் தன் கணவரைப்பற்றி - தினமும் தண்ணி போடுறார்ம்மா. வீட்டுக்கு, பிள்ளைகளுக்குச் செலவுக்குக் காசே குடுக்குறதில்ல. எந்த நேரமும் அடி, உதைதான். (இன்னொரு ஆணைச் சுட்டிக்காட்டி) அந்த நேரம் இவரு தான்ம்மா ஆறுதலா இருந்தாரு. இந்த ஷோவுக்கு வரும் பெண்கள் சொல்லும் சில விஷயங்களை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு வக்ரங்கள், குரூரங்கள். இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனை விட நல்லவனாக, ஆறுதலாக இருக்கும் ஒரு ஆண்மகன்பால் ஈர்க்கப்படுவது இயல்புதானே.
  மனிதமனம் என்பது ஒரு பலவீனமான, காற்றில் ஆடும் கொடியைப்போன்றது. தான் பற்றிக்கொண்டிருந்த கொழுக்கொம்பு பயனற்றதாகும் போது தன் ஆயிரம் கரங்களைக் காற்றில் வீசி வேறோர் கொம்பைப் பற்றிக்கொள்வது தான் அதன் இயல்பு. சில ஆண்கள் படும் துயரங்களும் பெண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. வாய் ஓயாமல் திட்டிக்கொண்டேயிருக்கும் மனைவியை முதல் மரியாதை படத்தில் பார்த்த போது மிகைப்படுத்தல் - ரொம்ப ஓவரா காட்டுறார். இப்டிலாம் இருப்பாங்களா என்றே நினைத்தேன். இதெல்லாம் சாதாரணம் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு மனைவிமார்களை நிஜத்தில் பார்த்தாயிற்று.
 இந்த மாதிரியான உறவுச்சிக்கல்களுக்கு நிர்மலா பெரியசாமி சொல்லும் தீர்வு - நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது. இந்த மாதிரி நெலம வேற ஒருத்தர்க்கு வரக்கூடாது. ஆனா முதல் கல்யாணத்த சட்டப்பூர்வமா முடிச்சுட்டு, இன்னொரு உறவுக்குள்ள போங்க. அதான் முறையானது. - என்கிறார். அதே நேரத்தில் தன் வாழ்க்கை சரியில்லையென்று சொல்லிக்கொண்டு, ஏற்கனவே நல்லவொரு திருமண பந்தத்தில் இருப்பவர்களின் மனதைக் கலைத்து தன் பக்கம் ஈர்ப்பவர்களைக் கடுமையாகக் கண்டித்து சம்பந்தப்பட்ட இருவர்மேலும் போலீஸ் நடவடிக்கை எடுக்கச் செய்கிறார்.
இது மிகச்சரியான தீர்வு என்றே எனக்குப் படுகிறது. நல்ல திருமண வாழ்க்கை அமையப்பெற்றவர்கள் பாக்கியவான்கள். இவர்களால் சிக்கலான திருமணத்தில் இருப்பவர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். தெரு நாய்களுக்காகக் கவலைப்படும் காரில் போகும் கனவான்களின் மனநிலை தான் இவர்களுக்கு இருக்கும். பிள்ளையோடு தெருவில் நடக்கும்போது 4 நாய்கள் சூழ்ந்து கொண்டு கிர்ரென்று கூரிய பற்களைக் காட்டும் பயங்கரத்தை இவர்கள் அறிய மாட்டார்கள்.  உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மேல் கல்லெறியட்டும் என்றார் ஒரு மகான். கல்லெறியும் முன் யோசிப்போம்.
Happiness in marriage is entirely a matter of chance - Jane Austen. இது காலங்களைக் கடந்த உண்மை.

Friday, November 16, 2012

லக்சுரி அப்பார்ட்மென்ட் வாங்குவது புத்திசாலித்தனமா?

ரியல் எஸ்டேட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் - லக்சுரி அப்பார்ட்மெண்ட்ஸ். ஓஎம்ஆரில் லொக்கேட்டட்; ஜிம், ஸ்விம்மிங் பூல், க்ளப் ஹவுஸ், ஜாகிங் ஏரியா, டென்னிஸ் கோர்ட், பிள்ளைகளுக்குப் ப்ளே ஏரியா எல்லாம் இருக்கு என்று கேட்கும்பொதே மெய் சிலிர்த்து விடும் நம் மேல் மத்திய தர வர்க்கத்தினருக்கு. நாம் அனுபவிக்காததை நம் பிள்ளைகள் அனுபவிக்கட்டும் என்று தான் நாம் முக்கால்வாசி விஷயங்களை வாங்குகிறோம்.
       ஆனால் லக்சுரி அப்பார்ட்மெண்ட்டுகளின் மெயின்டெனென்ஸ் காஸ்ட்டைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறோம். சுமாராக 5200 ரூபாய் வரை ஒரு 1200 ச.அடி ப்ளாட்டுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதாவது ரூ.3.50 ச.அடிக்கு + வாட்டர் ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட்டுக்கு ரூ.600 + குடிநீருக்கு ரூ.400. க்ளப்ஹவுஸ் இருந்தால் இதோடு சேர்த்து ரூ.1500. மொத்தம் ரூ.7000.
   ரூ.60000 டேக்ஹோம் பே உள்ள ஒருவர் 30 லட்சம் லோன் போட்டு இப்படி ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினால், மாதாமாதம் ரூ.32000 ஈ.எம்.ஐ + ரூ.7000 மெயின்டெனென்ஸ் கொடுத்தால் மிச்சம் ரூ.21000 த்தைக் கொண்டு பிற செலவுகள் அனைத்தையும் சமாளிக்க வேண்டும். இவ்வளவு மெயின்டனென்ஸ் காஸ்ட் கொடுப்பது வொர்த் தானா? மிஞ்சி மிஞ்சி போனால் வாரத்தில் 2 நாள் ஸ்விம் பண்ணுவோம் (அதுவும் சந்தேகம்தான்). வாக்கிங்காவது, ஜாகிங்காவது. அப்புறம் - யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆத்துவது? பேசாமல் இந்த ப்ரில்ஸ் இல்லாத நல்ல அப்பார்ட்மெண்ட்டாக வாங்கி, ரூ.2 மெயின்டெனென்ஸ் கொடுத்து சந்தோஷமாக வாழ்வோம்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes