ஜெயமோகன் எழுதிய - சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - என்ற புத்தகத்தை இந்த விடுமுறையில் படித்தேன். ஒரு மிகப்பெரிய ஆளுமையின் அருகிலிருந்து ரத்தமும், சதையுமாக அவர் வாழ்வதை அவதானிப்பது ஜெயமோகன் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன். ஜெயமோகனின் இந்தப் புத்தகம் சுராவைப் பற்றிய, சமரசங்களற்ற ஒரு பதிவு.
மூன்று பெண்களின் தந்தையும், மூன்று சகோதரிகளின் இடையே வளர்ந்தவருமான சுரா, பெண்கள் பற்றி கொண்டிருந்த உண்மையான கருத்து, தனக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கற்பனை அழுத்தத்தில் இருந்த சுரா, கறாரான, அவர் கடையில் வேலை பார்ப்பவர்களால் திட்டப்பட்ட வியாபாரியான சுரா, மாற்றுக்கருத்துக்களை மறுத்த சுரா, பொய் சொன்ன சுரா, இந்தியா பற்றிய சிறிய எள்ளலும், அமெரிக்கா மீதான மோகமும் கொண்ட சுரா போன்ற சுந்தர ராமசாமியின் நினைத்துக்கூட பார்க்க முடியாத முகங்கள். நான் - குழந்தைகள், பெண்கள், ஆண்கள் - பாலுவின்...