Tuesday, December 31, 2013

சுரா பற்றி ஜெயமோகன்,சுஜாதாவைப் பற்றி சுஜாதாவின் மனைவி

ஜெயமோகன் எழுதிய - சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - என்ற புத்தகத்தை இந்த விடுமுறையில் படித்தேன். ஒரு மிகப்பெரிய ஆளுமையின் அருகிலிருந்து ரத்தமும், சதையுமாக அவர் வாழ்வதை அவதானிப்பது ஜெயமோகன் செய்த பாக்கியம் என்றே கருதுகிறேன். ஜெயமோகனின் இந்தப் புத்தகம் சுராவைப் பற்றிய, சமரசங்களற்ற ஒரு பதிவு.  மூன்று பெண்களின் தந்தையும், மூன்று சகோதரிகளின் இடையே வளர்ந்தவருமான சுரா, பெண்கள் பற்றி கொண்டிருந்த உண்மையான கருத்து, தனக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கற்பனை அழுத்தத்தில் இருந்த சுரா,  கறாரான, அவர் கடையில் வேலை பார்ப்பவர்களால் திட்டப்பட்ட வியாபாரியான சுரா, மாற்றுக்கருத்துக்களை மறுத்த சுரா, பொய் சொன்ன சுரா, இந்தியா பற்றிய சிறிய எள்ளலும், அமெரிக்கா மீதான மோகமும் கொண்ட சுரா போன்ற சுந்தர ராமசாமியின் நினைத்துக்கூட பார்க்க முடியாத முகங்கள். நான் - குழந்தைகள், பெண்கள், ஆண்கள் - பாலுவின்...

Friday, November 15, 2013

ஆசிப் ப்ரதர்ஸின் அசத்தல் பிரியாணி

இந்த சனி, ஞாயிறில் தம்பிமார்கள் பாலாவும், கார்த்தியும் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை ஹோட்டலில் சாப்பிடுவோம் என்று முடிவாகியது. எங்கு சாப்பிடுவது என்ற பேச்சு கிளம்பியது. வாசு ஃபார்ச்சூன் அல்லது பார்பிக்யூ நேஷன் போவோம் என்றார். பாலாவுக்கு 2.30க்கு ட்ரெயின். அதனால் அவன் வீட்டிலிருந்து 1 மணிக்கு கிளம்ப வேண்டும். ஃபார்ச்சூன் எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் அதிகம். 1 மணிக்குள் வீடு திரும்ப முடியாது. எனவே அந்த ஆப்ஷன் ட்ராப். அடுத்ததாக பார்பிக்யூ நேஷன். பேரைச் சொன்னவுடன் எங்கள் மகன் எக்சைட் ஆகிவிட்டான். டேபிளிலேயே இருக்கும் க்ரில், பச்சைக்கொடி, சிகப்புக்கொடி என்று அவர்கள் போடும் சீனுக்கு என் மகன் அடிமை ;). ஆனால் அவர்களின் டைமிங்ஸ் எங்களுக்கு செட்டாகவில்லை.  ஆப்பக்கடைகள், செட்டிநாடு ஹோட்டல்களில் சாப்பிட மனதில் தெம்பில்லை. எனவே ஆசிப் ப்ரதர்ஸ்...

Thursday, November 14, 2013

Asif Brothers' asathal biriyani

It was an anticipated weekend with both my brothers, Bala and Karthi, along with their wives turned up to our home for a week end bash all the way from Bangalore. My children were head over heels with the arrival of their mamas and athais. We planned for a brunch out as both my brothers were not ready to eat whatever I offered to cook. Next came the part of deciding the restaurant.My husband suggested two places - Fortune or BBQ nation. Bala's return train was by 2.30. So he had to leave for the station by 1.30. This constraint was to be taken into consideration before choosing a restaurant. Fortune is a bit far away from our place. So rejected. BBQ nation is a major attraction for my son with all its grill over the table, green flag, red flag etc. But they start a bit late which means Bala...

Friday, November 8, 2013

தீபாவளி விற்பனை 334 கோடி

தீபாவளியை ஒட்டிய 3 நாட்களில் டாஸ்மாக்கின் விற்பனை 334 கோடியாம். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இது பல மடங்கு அதிகமாம். 2002-2003ன் போது இருந்த டாஸ்மாக்கின் விற்பனை அளவு, கடந்த பத்து ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளி விவரம். பள்ளிச்சிறார்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்களாம். காலை 7 மணி போல் கல்லூரிக்குச் செல்லும் போது, நடைபாதைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் விழுந்து கிடக்கும் ஆண்களைப்பார்க்கும் போது, அவர்களின் மனைவியரும், பிள்ளைகளும் என்ன வேதனையில் இருப்போர்களோ என்ற நினைப்பு மனதை அழுத்துகிறது. மதியம் 3 மணியின் போதே இதே போன்ற காட்சிகளைக் காண முடியும். உழைக்க வேண்டிய வயதில், தன்னையும், குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டிய பருவத்தில் இப்படி குப்புறடித்துக்கிடக்கிறது தமிழ்ச்சமூகம். அன்று மதியம் 2.30 மணி இருக்கும். பேருந்தில், பெண்கள் இருக்கையில்...

ராகுல் காந்திக்கு சேத்தன் பகத் கொடுக்கும் ஐடியா

சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸின் நட்சத்திரப்பேச்சாளராக ராகுல் காந்தி பிரமோட் செய்யப்படுகிறார். பாஜக சார்பாக நரேந்திரமோடி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். இப்பதிவில் எந்தக்கட்சி நல்ல கட்சி, யார் சிறப்பாகப் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்று ஆராயப்போவதில்லை. இது அரசியல் சார்ந்தது அல்ல. மாறாக, தலைவர்களின் லீடர்ஷிப், கரிஸ்மா, மேனரிசம் இவற்றைப்பற்றி இப்பதிவு பேசப்போகிறது. ராகுல் காந்தியின் உரைகளை முன்பு கட்சிப்பிரமுகர்கள் தயார் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார்களாம். ஆனால் இப்போது தானாகவே தயார் செய்து கொள்கிறாராம். நரேந்திரமோடி மேடை மேடையாக உறுமிக்கொண்டிருக்கிறார். அவரது உரையின் முன், ராகுலின் `என் பாட்டி, என் அப்பா, என் தாயின் அழுகை` போன்ற பேச்சுகள் எடுபடவேயில்லை. சிங்கத்தின் முன் பூனை மியாவ் மியாவ் என்பது போல் இருக்கிறது. அவருடைய...

Tuesday, October 1, 2013

புதிய வக்ரங்களை நோக்கி ஜீ டிவி சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி துவக்கத்தில் மாமியார் மருமகள் பிரச்சினை, கணவன் மனைவியிடையே வரும் ஈகோ பிரச்சினை, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே இருக்கும் சிறு சிறு மனத்தாங்கல்கள் என இவ்வகை பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லிக்கொண்டிருந்தனர். அனேக எபிசோடுகள் நன்றாக இருந்தன.  அப்படியே மெதுவாக கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு கொண்டான், மனைவி வேறொருவனோடு கள்ளத்தொடர்பு என்று ஆரம்பித்து, மகளிடம் தவறாக நடக்கும் தந்தை, மகனுடைய தோழனோடு உறவு கொள்ளும் தாய் என்று மூன்றாம், நான்காம் தர ஆபாச வெப்சைட் மற்றும் பத்திரிக்கைகளின் உள்ளடக்கத்தைப்போல சொல்லவும், நினைக்கவும் மனம் கூசும் விதமான வக்ரங்களை ஒளிபரப்பி வருகின்றனர். இவற்றுக்குக் கட்டாயமாக ஒரு சென்சார் தேவை.  இருப்பதைத்தானே காட்டுகிறோம் என்பது ஒரு அபத்தமான வாதம். இருப்பதையெல்லாம்  காட்டிவிட முடியுமா? அப்படி காட்ட வேண்டியதன் அவசியம்தான் என்ன? விழிப்புணர்வை...

Thursday, August 29, 2013

தனுஷ் படத்தில் சிம்பு - பழம் விட்டாச்சு

தனுஷ், சிம்பு கொஞ்ச வருடங்களுக்கு முன் மோதிக்கொண்டிருந்தாலும் இப்போது நண்பர்களாகவே வெளியில் காட்டிக்கொள்கின்றனர். தற்சமயம் வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து தயாரிக்கும் காக்கா முட்டை படத்தில் ஒரு பாடலை, சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரைப்பாடித் தருமாறு தனுஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார். சிம்புவும் ஒப்புக்கொண்டு சந்தோஷமாகப் பாடித் தந்ததாகக் கேள்வி. ஒருவரை வெறுப்பேற்ற வேண்டுமென்றால் அவருக்குப் பிடிக்காதவரிடம் நாம் ஒட்டி உறவாடலாம். என்ன நடக்குது தனுஷ் இங்க - வீட்ல எல்லாரும் சுகம் தானே???? ...

Wednesday, August 28, 2013

ஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்

சுமார் 20 வருடங்களுக்கு முன், எம்.சி.ஏ சீட் கிடைத்தவர்கள், கடவுளர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். முடித்தவுடன், அரசுக்கல்லூரிகளில் பெர்மணன்ட் வாத்தியார் வேலைக்குச் சென்றவர்களும், ஐ.டி. துறையில் வேலைக்குச் சென்றவர்களும் பிழைத்தனர். மாறாக, ப்ரைவேட் என்ஜினியரிங் கல்லூரிகளில் வேலைக்குச் சென்ற வாத்தியார்களின் நிலை தான் இப்பதிவின் பாடுபொருள். முதலில், தகுதியற்றவர்கள் தான் வாத்தியார் வேலைக்கு வருவார்கள் என்ற பிம்பத்தை எப்பாடுபட்டும் உடைக்க இயலாது. நீங்கள் பல்கலைக்கழக முதல் மாணவராக இருந்தாலும் சரி, வாத்தியார் வேலைக்கு வந்து விட்டால் நீங்கள் மக்குதான். சரி அதாவது பரவாயில்லை. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். தற்சமயப் பிரச்சினை என்னவென்றால், எம்.சி.ஏ கோர்ஸிற்கு மாணவர்கள் சேர்வதேயில்லை. 120 சீட் இருக்கும் கல்லூரியில் 20 பேர் சேர்கிறார்கள்....

Tuesday, August 27, 2013

மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டுத் தீர்மானம் - தமிழ் மென்பொருட்களைப் பயன்படுத்துவோம்

மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து உலகத்தமிழ் இணைய மாநாட்டை மலேயா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 15-18 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். உயர்திரு. அனந்தகிருஷ்ணன், டைரக்டர், ஐ.ஐ.டி கான்பூர், அவர்களும் உயர்மட்டக்குழுவின் ஒரு உறுப்பினர். தமிழில் உள்ள மென்பொருட்கள், இன்னும் புதிய தமிழ் மென்பொருட்கள் உருவாக்க வேண்டியதன் அவசியம், இருக்கும் தமிழ் மென்பொருட்களின் தரம், அவை இன்னும் அப் டி த மார்க் இல்லாமல் இருப்பதன் காரணங்கள் முதலியவற்றை விரிவாக அலசினார். தமிழில் இருக்கும் மென்பொருட்களை நாம் முதலில் பயன்படுத்துகிறோமா? என்னென்ன மென்பொருட்கள் தமிழில் இருக்கின்றன என்பது முதலில் நமக்குத்தெரியுமா? இப்போதைய தொழில்நுட்ப யுகத்தில், ஒரு மொழி சர்வைவ் செய்ய வேண்டுமென்றால் அது தன்னை மொழித்தொழில் நுட்பத்துக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழுக்குத் தன்னார்வலர்கள் பலர் சிறப்பான மென்பொருட்களைத் தயாரித்துள்ளனர்....

Monday, August 19, 2013

மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு

மலேசியாவில் மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து நடத்திய உலகத்தமிழ் இணைய மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை மலேயா பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். ஒரு சிறு பயணக்குறிப்பு இதோ. டிப்பெண்டன்ட் விசாவில் இல்லாத முதல் வெளிநாட்டுப்பயணம் என்பதால் மிகவும் எக்ஸைட்டடாக இருந்தது. மாநாட்டின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒரு புறம் இருக்கட்டும் (பின்னொரு பதிவில்). இப்பதிவில் நான் வேறு சிலவற்றைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். முதலில் உணவு. காலை உணவில் விதவிதமான நூடுல்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒல்லியான, பட்டையான, உருண்டையான என்று வித விதமான வடிவங்களில், முக்கியமாக மீன் சேர்க்கப்பட்டவை.இவர்களின் நூடுல்ஸ் மசாலா வித்தியாசமாக, மிகச்சுவையாக இருக்கிறது.  அப்புறம் சம்பல் - இந்த மீன் குழம்பு சான்ஸே இல்லை. சூப்பர். முக்கியமாக கவனிக்க வேண்டியது...

Wednesday, July 17, 2013

தமிழ் நாட்டு மக்களின் டாப் 10 டெரர்கள்

நம்ம தமிழ் மண்ணுக்குன்னே சில குணம் இருக்கு. அந்த குணத்தால பல நேரம் மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம தடுமார்றது நம்ம ப்ளட்லயே இருக்கு. அதுல முக்கியமான 5 இதோ - 1. மாடி வீட்டு அங்கிளாவது, ஆன்ட்டியாவது நம்ம வீட்டு பிள்ளங்க அல்லது மனைவி கூட வாசல்ல நின்னு பேசிக்கிட்டு இருந்தா, விரல் நகம் கூட வெளிய தெரிஞ்சிராம, நல்லா தள்ளி உக்காந்து ஒளிஞ்சுக்கிறது. 2. மேல பாத்த இந்த குணம், நம்ம அப்பார்ட்மென்ட்டோட நிக்கிறது இல்ல. கடல் தாண்டி போனாலும், யாராவது தமிழ்க்காரன்னு தெரிஞ்சுட்டா அப்டியே எங்கயாவது போய் பதுங்கிர்றது. லண்டன் ஐ-ய ஒரு நிமிஷம் நிறுத்தி, அதுல இருக்குற தமிழ்க்காரங்கள மட்டும் கவுன்ட் பண்ணா, நிச்சயம் ஒரு 50 பேராவது இருப்போம். ஆனா யாரும் யார்கூடவும் பேசிக்க மாட்டோம். (மலையாளிகள் மலையாளியான்னு? அப்டின்னு உடனே ஆரமிச்சிருவாங்க) 3. பெரிய ஸ்வீட் ஸ்டாலுக்குப் போய் கிலோ ரூ.680 விக்கிற ஏதாவது...

Wednesday, June 26, 2013

மணிவண்ணனைத் திட்டித் தீர்த்த பாரதிராஜா

ஆனந்தவிகடனில் பாரதிராஜா வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். மணிவண்ணன் பற்றிய ஒரு கேள்விக்கு மிகக் கடுமையாக, தரக்குறைவாக பதில் அளித்திருக்கிறார் பாரதிராஜா.  ஈழத்தமிழர் பிரச்சினை, காவேரிப் பிரச்சினை போன்றவற்றில் இவர்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. மாற்றுக்கருத்தே இருக்கக்கூடாத அளவுக்கு பாரதிராஜா மானுடப்பிறப்புக்கு  அப்பாற்பட்டவரா என்ன? அவன் முழி திருட்டு முழி, நான் தான் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் - இத்யாதிகள். கருத்துக்கு பதில் கருத்தை முன் வையுங்கள் பாரதிராஜா. பர்சனல் விமர்சனங்களை அல்ல. பாரதிராஜாவின் பேட்டி வெளி வந்த 3 நாட்களில் மணிவண்ணன் மரணமடைந்து விட்டார். அவன் வாயத்திறந்தா பொய்தான் வரும் என்று சொன்ன பாரதிராஜா வாயைத் திறந்ததால் ஒரு உயிர்  ஆறாத மனக்காயத்துடன் மரணத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறதே. இதற்கு பாரதிராஜா என்ன நியாயம் கற்பிக்கப்போகிறார்....

Wednesday, June 12, 2013

இந்தக் கேள்விய எங்கிட்ட கேக்காதீங்க - டென்ஷனாகும் இளையராஜா

நம்ம தமிழ்நாட்ல பொதுமக்களுக்கும், ஜர்னலிஸ்ட், மத்த ஊடகத்துக்காரங்க எல்லார்கிட்டயும் ஒரு செட் ஆஃப் கொஸ்ட்டின்ஸ் இருக்கு. சம்மந்தப்பட்ட ஆள் சிக்கும்போது அந்தக்கேள்வியக் கேக்காம விடவே மாட்டாங்க. இதோ அந்த லிஸ்ட் -  சிம்பு கிட்ட - எப்ப கல்யாணம்? ஷூட்டிங்ல என்ன பிரச்சினை? தனுஷ்கிட்ட - சூப்பர் ஸ்டார நீங்க எப்படி கூப்பிடுவீங்க? (எப்டி கூப்ட்டா என்ன - ஏம்ப்பா உசுர வாங்குறீங்க) அஜித் கிட்ட - பிரியாணி நல்லா செய்வீங்களாமே? ரஜினி கிட்ட - இது உலகத்துக்கே தெரியும்ப்பா - இன்னொரு தடவ அந்தக்கேள்விய டைப் பண்ணவே எனக்குப்பிடிக்கல கமல்கிட்ட - மருதநாயகம் ஏன் நின்னுச்சு? விஷால் கிட்ட - யாரு அந்தப் பொண்ணு? த்ரிஷா கிட்ட - உங்களுக்கும் ராணாவுக்கும் நடுவுல என்ன? இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா கிட்ட - உங்க கூட்டணி திரும்ப வருமா? (ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா - வந்தா வரட்டும் வராட்டி போகட்டும் ஏம்ப்பா டார்ச்சரக்...

Tuesday, April 30, 2013

விஜய் டிவியில் கமல் சொன்ன அறம்

விஜய் டிவி நீவெஒகோ (இங்கிலிஷ்ல மட்டும் தான் கேபிசியா? நாங்களும் சுருக்குவோம்ல) ஷோவில் கமல் கலந்து கொண்ட நிகழ்ச்சி வழக்கம்போல் கான்ட்ரவர்ஸியில் சிக்கிக்கொண்டுள்ளது - ஆனாலும் ஷோவில் பெண்கள் கொஞ்சம் ஓவராகத்தான் செய்தார்கள். கமல் அதில் ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற புத்தகத்தைப்பற்றி தெரிவித்தார். கண்களில் நீர்மல்க படித்த ஒரு புத்தகம் என்றார். உடனே வாங்கினேன் (டயல்ஃபார்எபுக் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றனர்). உண்மையில் கரைந்து போனேன். பொதுவாக இப்போதைய பிரபல எழுத்தாளர்கள் சாருநிவேதிதா,எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்றோரின் எழுத்துக்கள் என்னைக் கவரவில்லை, அனேக எழுத்துக்கள் எனக்குப் புரியவும் இல்லை.  தேவனும் அசுரனும் கலந்தவன் மனிதன். நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சிறிய உரசலிலும் நம்முள் இருக்கும் அசுரன் தலை காட்டி விடுகிறான். கோபம், பொறாமை, கீழான இச்சைகள், மனக்கசப்பு இத்தியாதிகள். ஆனால்...

Friday, April 26, 2013

அமெரிக்க H1B விசா வாங்க யாரை அணுகுவது?

ஹெ1பி விசா இந்த வருடம் குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் இவ்விசாவிற்கான விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே. நான் விசா வாங்க யாரை அணுகுவது என்பதைப்பற்றி இப்பதிவில் பேசப்போவதில்லை. மாறாக ஏன் விசா வாங்க வேண்டும் என்றே பேசப்போகிறேன்.  இப்போதும் நம் இளைய சமுதாயம், அமெரிக்காவுக்குப்போய் சம்பாதிப்பதுதான் லட்சியம் எனவும், அங்கு போய் சம்பாதித்தவர்கள் தான் வாழ்க்கையில் வென்றவர்கள் என்றும் நினைக்கின்றனர். இதைத்தான் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு வலியுறுத்துகின்றனர். பொருளாதார ரீதியாகப் பெறும் வெற்றிதான் வெற்றியா? இல்லை - நிச்சயமாக இல்லை.ஆனால் துரதிர்ஷடவசமாக இக்கருத்துக்கு வலிவூட்டும் விதமான ஒரு ஐடியலிஸ்ட்டிக் மனிதனை அருகில் பார்க்கக்கூடிய வாய்ப்பு இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு...

Thursday, April 18, 2013

நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் இளைஞரா - இதைப் படியுங்கள் முதலில்

     முதலில் உங்கள் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். எப்படியும் உங்களுக்குச் சமமாகப் படித்த, வேலை பார்க்கும் பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். சமீபத்தில் நான் பார்த்த வரை, அழகிய தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து மனைவியைத் தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது. தவறில்லை - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை, கனவு. ஆனால் பெண்களின் உடலியல் கூறுகள் பற்றிய சில அறிவியல்பூர்வமான தகவல்களையும், பெண்களின் மனவியல் பற்றியும் சில தகவல்களை அறிந்து கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் அவசியம். பார்ப்பதற்குக் குடும்பப்பாங்கா இருக்கணும் என்று நீங்கள் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த பெண் பார்ப்பதற்கு சினேகா போலோ அல்லது மவுன ராகம் ரேவதி போலவோ இருக்கலாம். ஆனால் மவுனராகத்தில் ரேவதி சொல்வது - எனக்கு ரொம்ப பிடிவாதம் உண்டு, முன்கோபம் உண்டு,சொன்ன பேச்சு கேட்கமாட்டேன் - இதுவே நிஜம். சினேகா போல் சிரித்துக்கொண்டே...

Friday, April 12, 2013

பல்கலைக்கழகத் துணைவேந்தரின் துணிச்சல்

மேற்கு வங்கத்தில் Students' Federation of India வின் தலைவர் 22 வயது சுதிப்தா குப்தா போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். இம்மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையொட்டி மேற்கு வங்க நிதியமைச்சர் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினால் தாக்கப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கொடியை ஏந்திய சிலர் பிரசிடன்சி பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு பயிலும் மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலையில், அப்பல்கலையின் துணைவேந்தர் மாளபிகா சர்க்கார் அளித்துள்ள பேட்டி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. அவர் மீடியாக்களில் தெளிவாக நடந்ததை அப்படியே தெரிவித்துள்ளார். கையில் கட்சிக்கொடி ஏந்திய குண்டர்கள், பல்கலைக்கழகத்தின் லேபுகள், பிற பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கின்றனர் என்றார்....

Thursday, March 14, 2013

சூப்பர் சிங்கரில் நித்யஸ்ரீ மகாதேவன்

                  திரையிசை மற்றும் கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயை மீண்டும் சங்கீத மேடைகளில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் அவருடைய கணவர் திரு. மகாதேவன் தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று, நித்யஸ்ரீயின் மாமியார் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவர் வீட்டிலிருந்து மாமியாரைக் கவனித்துக்கொள்ளவில்லையாம். இதனால் அவருடைய கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தாயாரின் மறைவுக்குப்பின் அம்மனவுளைச்சல் அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு ரூமர்.                            இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். இசை...

Wednesday, January 23, 2013

குழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு?

        கோலாகலமாக நடந்து முடிந்து கொண்டிருக்கிறது புத்தகத்திருவிழா (இன்றே கடைசி). பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை. இந்த முறை சின்ன பிள்ளைகளுக்கான தமிழ்ப் புத்தகங்கள் ஆப்பிள் பிரசுரத்தால் மிகவும் சிறப்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ரீஸனபிள் விலை, மிக அழகான படங்கள், க்வாலிட்டி பேப்பர் - சுருக்கமான கதைகள். பிள்ளைகளால் மிக எளிதாகப் படிக்க முடிக்கிறது. இதைத்தான் நான் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.                   அதாவது, சின்னப் பிள்ளைகளுக்குரிய தமிழ்ப்புத்தகங்கள் (7 மற்றும் 5 வயது) அவர்களை வசீகரிக்கும் வண்ணம் இருந்ததேயில்லை - படமேயில்லாத மிக நீண்ட கதைகள், மொழி நடை வயதுக்கேற்றார் போல் இல்லாமல் - இப்படித்தான் இதுவரையில் கடந்த 4 வருடங்களாக நான் புத்தகச் சந்தையில்...

Tuesday, January 15, 2013

பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கு்ம் பாலமேடு ஜல்லிக்கட்டு - வசந்த் டிவி நேரடி ஒளிபரப்பு

வசந்த் டிவியில் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது - உண்மையில் செம த்ரில். மாடு பிடிப்பவருக்கு பரிசுகள் பீரோ, சைக்கிள், பாவாடை (???), தங்கக்காசு, வேட்டி, அண்டா, குடம். வாடிவாசலின் இருபுறமும் சைக்கிள், பீரோக்களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். வாடிவாசலின் மேல் சிறிய மூங்கில் மேடை கட்டி ஊர்க்காரர் ஒருத்தர் லைவ் காம்ப்பியர் பண்ணிக்கொண்டிருக்கிறார் (மேடை ஒரு டைப்பாக இருக்கிறதே  - விழுந்துவிடாதா?).  டிவி சார்பாக பட்டு சேலை கட்டி ஒரு பெண் மற்றும் வேட்டி சட்டையில் ஒரு ஆண் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் இருவரின் வர்ணனை ஒரு சாம்பிள் - பட்டு வேட்டி சேலை ஆண் பெண்                  மீன் கிடைக்காத போது சும்மா நின்று கொண்டிருக்கும் கொக்கு மீனைப் பார்த்தவுடன் பாயும்...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes