Saturday, December 24, 2011

சென்னை ஐஐடி கேம்பஸ் இன்டர்வ்யூ - மாணவனின் சம்பளம் வருடத்திற்கு 64 லட்சம் - எந்த துறை சார்ந்த நிறுவனத்தில்?

இந்த வருடம் எக்கனாமிக் ஸ்லோடவுன் இருக்கும் என்று உலகப்பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஐஐடி சென்னை மாணவன் ஒருவர் வருடத்திற்கு 64 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். இந்நிறுவனம் எத்துறையைச் சார்ந்தது? பேங்க்கிங், பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி போன்ற எந்தத் துறையும் இல்லை. மாதம் சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு ஆள் எடுத்துள்ள நிறுவனம் - பாக்கெட் ஜெம்ஸ். இந்நிறுவனம் செல்போன் கேம்ஸ் டெவலப் செய்யும் நிறுவனம். மேலும் பேஸ்புக் வருடத்திற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐஐடி பாம்பே மாணவருக்கு வேலை அளித்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட பொழுதுபோக்கு துறையைச் சார்ந்தவை. ஏன் ஓடுகிறோம்? நம்முடைய இலக்கு என்ன என்பது தெரியாமலே ஒரு மிகப்பெரிய ஓட்டப்பந்தயத்தில் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இருக்கும் இடத்தைத்...

Thursday, December 22, 2011

ஆ.ராசாவின் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரியின் 4 லட்சம் மதிப்புள்ள செல்போன்

2 ஜி வழக்கில் ஆ.ராசாவின் முன்னாள் செக்ரட்டரி ஆசிர்வாதம் ஆச்சாரி கோர்ட்டில் ராசாவிற்கு எதிராகத் தன்னுடைய சாட்சியத்தை அளிக்கத் துவங்கியிருக்கிறார். அவரைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருப்பவர் கனிமொழிக்காக ஆஜராகியிருக்கும் ராம் ஜெத்மலானி. நேற்றைய விசாரணையில் ஆச்சாரியின் செல்போனைப் பற்றி விசாரித்திருக்கிறார் ஜெத்மலானி. அதன் மதிப்பு ரூ2.5 லட்சம் முதல் ரூ 4 லட்சத்திற்குள் இருக்கும் என்பது அவரது எஸ்டிமேஷன். இந்த போன் உங்களுக்கு எப்படி கிடைத்தது? அதன் விலை என்ன? என்று ஆச்சாரியைக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இந்த போன் என் மனைவிக்குப் பரிசாகக் கிடைத்தது. எனவே அதன் விலை எனக்குத் தெரியவில்லை என்றிருக்கிறார். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு அவர்மேல் தொடர சிபிஐ காத்திருக்கிறது.இந்நிலையில் அந்த செல்போனின் விலையைப் பில்லோடு இன்று கோர்ட்டில் நிரூபித்திருக்கிறார் ஆச்சாரி. அந்த செல்போனின் உண்மையான...

Tuesday, December 20, 2011

தமிழ் கேபிசியின் ஹோஸ்ட் யார் - இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்

மிகப்பிரபலமான கேபிசி நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் நாளை முதல் விஜய் டிவியில் வரவிருக்கிறது. இதை நடத்தப்போவது சூர்யா (நன்றி டைம்ஸ் ஆ்ப் இண்டியா). நேருக்கு நேர் படத்தில் ஆட வேண்டிய நேரத்திலும் ஓடிக்கொண்டேயிருந்த அந்த இளைஞனின் வளர்ச்சி ஆச்சரியத்தைத் தருகிறது. தமிழில் இது போன்ற ஒரு ஷோவை நடத்திய சரத்குமார் அவ்வளவு பிரமாதமாகச் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. சூர்யா எப்படி நடத்தப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளே...

என் பாடல்களை தனுஷ் பாடலோடு ஒப்பிடாதீர்கள் - உலகமகா தமிழ்ப்பாடலாசிரியர் சிம்பு

இப்பலாம் யார் வேணாலும் தமிழ் சினிமால பாட்டெழுதலாம்னு ஆயிருச்சு. சும்மா எதையாவது வார்த்தைய சேத்துப்போட்டு பாட்டுன்னு சொல்றாங்க. என் பாட்ட இனிமே தனுஷ் பாட்டோட கம்ப்பேர் பண்ணாதீங்க - என்கிறார் லூஸுப்பெண்ணே லூஸுப்பெண்ணே போன்ற மனதை வருடும் காதல் பாடல்களையும், எவன்டி ஒன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் போன்ற உயர்தர, காலத்தால் வெல்ல முடியாத தத்துவப்பாடல்களையும் படைத்த மகாக்கவிஞர் சிலம்பரசன். இவரது லேட்டஸ்ட் படமான ஒஸ்தியிலும் ஒரு மிக அருமையான பாடல் - வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, எழுதியிருக்கிறார். அதன் வரிகள் - அடாடா - எதாவது கோயில் வாசல் கல்வெட்டுல எழுதி இவர் அது பக்கத்துலயே உக்காந்துக்கலாம். நமக்கு பின்னால வர்ற சந்ததிகள் அதப்படிச்சு, நம்மள பத்தி தெரிஞ்சுக்க வசதியாயிருக்கும். வரலாறு ரொம்ப முக்கியம் சிம்பு ;) கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் இன்ன பிறரும் போட்ட ராஜபாட்டையில் செல்வதாக நினைத்துக்கொண்டிருக்கும்...

Friday, December 16, 2011

கொலவெறி இசையமைப்பாளரின் இன்றைய நிலை

கொலவெறி பாடல் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்பற்றாளர்கள் கொலைவெறியோடு சுற்றுகிறார்கள் பாடலாசிரியரைப் பின்ன வேண்டுமென்று (நம்ம தனுஷ்தான்). இந்த ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடும், கலாச்சாரம் தகர்ந்துவிடும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. தமிழ் மொழி இந்த மைனர் glitches க்கெல்லாம் தகர்ந்துவிடக்கூடிய பலவீன மொழியல்ல. விஷயம் இப்பாடலின் இசையமைப்பாளருக்கு நம் தமிழ் திரையுலகம் தந்துள்ள cold response ஐப் பற்றியது. ஆனந்த விகடன் பேட்டியில் அவ்விசையமைப்பாள இளைஞன் தெரிவித்துள்ளார் தமிழ்த்திரையிசையுலகில் இருந்து யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ பாராட்டவோ இல்லை என்று. ஒரு இளைஞன் தன் முதல் பாடலின் இசையிலேயே உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளான் என்பது நிச்சயம் அங்கீகரிக்கப்படவேண்டிய விஷயம். தகவல் தொடர்பு மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்ட இக்காலத்தில் ஒரு எஸ்எம்எஸ்...

Friday, December 9, 2011

சாப்ட்வேர் இன்ஜினியர்களின் வித்தியாச ஆன்சைட்

சென்னை பல்கலைக்கழத்தில் செமஸ்டர் எக்ஸாம்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் அங்கு சூப்பர்விஷன் செல்ல நேரிட்டது. எக்ஸாம் ஹால் சூப்பர்விஷன் என்பது நான் ஏற்கனவே முன்னொரு பதிவில் சொல்லியிருந்ததைப்போல எனக்கு மிகவும் பிடிக்காத மொக்கை வேலை. வேறு வழியேயில்லாமல் சென்றேன். பார்வையற்ற மாணவர்களுக்கான ஹாலில் எனக்கு சூப்பர்விஷன் அலாட் செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட அனுபவம் எனக்கு முதன்முறையாகக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு உதவியாளர் வந்து மாணவர்கள் சொல்லச் சொல்ல எழுதிக்கொடுக்கின்றனர். அவர்களுக்கு ஸ்க்ரைப் என்று பெயர். பொதுவாக எக்ஸாம் ஹால்கள் மௌனத்தில் வெடித்துச்சிதறும். ஆனால் சலசலவென்று சத்தத்தோடு ஒரு எக்ஸாம் ஹால் இதுவே. ஸ்க்ரைப்களாக வந்திருந்தவர்களில் காதில் எதுவும் அணியாமல் Swatch Watch, Puma bag உடன் வந்திருந்த பபிள்கம்மை மென்று மென்று மென்று கொண்டிருந்த இளம் பெண், தலையெல்லாம் பரட்டையாக...

Friday, December 2, 2011

பொன்னியின் செல்வன் வாசக வெறியர்களுக்கு ஒரு அதிர்ச்சி

பொன்னியின் செல்வனை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதும் தமிழர் அனேகம். வந்தியத்தேவனின் குதிரையை மனதால் பின்தொடர்ந்தோர் கணக்கில் அடங்காதவர். அனிருத்தப்பிரம்மராயரின் அறிவுத்திறனையும், குருவை மிஞ்சிய சிஷ்யனான ஆழ்வார்க்கடியானையும் விரும்பாதவர் யார்? பூங்குழலியின் நுண்ணறிவோடு கூடிய விளையாட்டுத்தனம், ஆதித்த கரிகாலனின் வீரம் மற்றும் வேகம், ராஜராஜனின் தியாகம், சேந்தன் அமுதனின் பக்தி, குந்தவையின் ஆளுமைத்திறன், நந்தினியின் மயக்கும் அழகு மற்றும் தீராக்கோபம், மதுராந்தகனின் கோழைத்தனம், துரோகம் என அப்புதினத்தில் இடம்பெறாத மனித உணர்ச்சிகளே இல்லை எனலாம். இங்கு ஆதித்த கரிகாலனின் மரணம் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. யார் அவரைக்கொலை செய்தது என்பதை கல்கி பூடகமாகவே விட்டிருப்பார். பாண்டியனின்...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes