Monday, August 7, 2017

லீவுக்கு எங்க போகலாம்

இந்த மாதம் லாங் வீக் எண்ட் 2,3 வருகிறது. Trip advisor, trivago எல்லா siteகளிலும் ஆஃபர் மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பத்தாததற்கு SOTC, Mahindra holidays என்று package offer பண்ணும் நிறுவனங்கள் ஜஸ்ட் 2 லட்ச ரூபாயில் ஐரோப்பாவின் லண்டன் பாரீஸ் என்ற விளம்பரங்கள். நம் பிள்ளைகள் பக்கத்து வீட்டு அனந்த் சம்மர் லீவுக்கு சைப்ரஸ் போறாங்க (எங்கய்யா இருக்கு இந்த சைப்ரஸ்). பிஸினஸ் க்ளாஸ்ல போறாங்களா-அதனால அவங்கள பிக்கப் பண்ண ஆடி கார் வந்துச்சு. நம்மளும் ஒரு தடவயாவது பிஸினஸ் க்ளாஸ்ல போகணும். (டேய் உன் வயசுல நான் ஏரோப்ளேன் பாத்தது கூட இல்லடா. கருடா கருடா பூப்போடுன்னு பருந்து பின்னாடி அண்ணாந்து பாத்துக்கிட்டே ஓடியிருக்கோம். அவ்வளவுதான்). துபாய், தாய்லாந்து, மொரிஷியஸ் அடேங்கப்பா. அட்வன்ச்சர் டூரிஸம், டார்க் டூரிஸம் etc etc.

டூர் போயே ஆக வேண்டும். இந்த சோஷல் மீடியாக்கள் வருகைக்குப்பின் டூர் போவது ஒரு கட்டாயம். Travelling to NJ from Mumbai airport என்று fb ஸ்டேட்டஸ் போடுவதில் ஆரம்பித்து, checked in at ……., sipping coffee in the snow, enjoying local delicacies என்று status போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அந்த local delicacy உங்கள் டேஸ்ட்டுக்கு செட்டே ஆகாவிட்டாலும் பரவாயில்லை, வயிறு பிரச்சனை பண்ணினாலும் பரவாயில்லை. அதுவா முக்கியம். ஃபோட்டோ அழகாக இருக்க வேண்டும். லைக்குகள் குவிய வேண்டும். அட்வென்ச்சர் டூர் என்று பலூனில் பறந்து, பங்கி ஜம்ப் பண்ணி ஸ்ஸ்ஸ்ஸஸஸஸப்ப்ப்பாஆஆஆஆ கண்ணக்கட்டிருச்சு.

அடுத்த வீட்டு ஆன்ட்டி சி4ல லீவுக்கு சிங்கப்பூருக்கு இன்னிக்கு போறாங்க. நீங்க எங்கயாவது போறீங்களா அப்டின்னு கேட்டாங்க. ஆமா போறோம். எங்க அப்படினாங்க. எங்க ஊருக்கு. ஒங்க ஊரா ன்னு கேக்கும் போது அவங்க expression அ பாக்கணுமே. ஊருக்குப்போறது இவ்ளோ கேவலமா எப்ப மாறுச்சுன்னு I was wondering. ஒரு காலத்துல லீவ் விட்டா சொந்த ஊருக்குப் போவோம். அங்க செய்றதுக்கும் பெருசா ஒண்ணும் இருக்காது. சும்மா we will be unwinding. That’s it. No pressure to jump from somewhere, eat some atrocious dishes. இல்லன்னா ஒரு vanல எல்லாரையும் அடச்சு கோயிலுக்குக் கூட்டிட்டுப்போவாங்க. முடிஞ்சது லீவு.


இப்பலாம் லீவே pressure தான். Pressure to prove something. பாவம் இவர்கள்.

2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்துகட்டி எழுதுவதை தவிர்த்தால்
இன்னமும் ரசித்திருப்பேன்

மாலா வாசுதேவன் said...

வாசித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி. சாதாரணமாக நாம் பேசுவதையே எழுதினேன். வலிந்து திணிக்கப்பட்டதல்ல.பின்னூட்டம் ஊக்கத்தைத் தருகிறது. நன்றி

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes