Friday, August 15, 2014

உங்களுக்கு எத்தனை நண்பர்கள்?

கொஞ்ச நாட்களுக்கு முன் திடீரென்று ஒரு நாள் கல்லூரி முன்னிருக்கும் வளையல் கடையில் கலர் கலராக கயிறுகள் தொங்கிக்கொண்டிருந்தன. என்ன விசேஷமென்று க்ளாஸில் பிள்ளைகளிடம் கேட்டபோது ஃப்ரண்ட்ஸ் டே மேம் என்றார்கள். ஒரு காலத்தில் எவ்வளவோ முக்கியமாகத்தோன்றிய ஒரு தினம் இன்று என்ன விசேஷமென்று கேட்கும் நிலையிலிருக்கிறது. நட்பென்பது எவ்வளவு அழகானது. என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்று தெரியாமலே இரவு 2 மணியாவதும், மறு நாள் காலை க்ளாஸில் தூங்குவதும், ரெஸ்ட்டாரண்ட்டில் சாப்பிட்டு முடித்து பே பண்ணி முடித்துவிட்டு, சர்வர் வந்து இந்த டேபிளுக்கு ஆள் வராங்க, கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க என்று சொல்லும் வரையில் பேசிக்கொண்டே அமர்ந்திருப்பதும், க்ளாஸை பங்க் பண்ணிவிட்டு வெளியே சுற்றுவதும்................... எந்த நொடியில் இதெல்லாம் நம் வாழ்விலிருந்து காணாமல் போகிறது? எப்போது துரோகங்களும் பொய்களும் நட்புக்குள் ஆரம்பிக்கின்றன?...

யுவனின் இரண்டாம் திருமணமும் பிரிவை நோக்கி......

இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கரின் பேட்டி சமீபத்தில் சென்னை டைம்ஸில் வந்திருந்தது. பெர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார் இந்த ராஜா வீட்டு `இளைய` ராஜா. 25 வயதில் நடைபெற்ற முதல் திருமணம் 3 மாதங்களில் பிரிவை நோக்கி சென்றிருக்கிறது. 30 வயதில் நடைபெற்ற இரண்டாம் திருமணமும் தோல்வியடைந்திருக்கிறது. இதே நேரத்தில் தன் தாயையும் இழந்திருக்கிறார் இவர். உறவுகளின் பிரிவு ஆறாத்துயரைத் தரக்கூடியது. குறிப்பாக வாழ்க்கைத்துணை. என்ன தான் தம்பதியருக்குள் சண்டை வருவது சாதாரண நிகழ்வாக இருந்தாலும், தன் கணவன் அல்லது மனைவியோடு போட்ட ஒரு சாதாரண சண்டை அன்றைய தினத்தின் அழகையே சிதைத்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் டைவர்ஸை நோக்கி செல்லும் சண்டைகள் எத்தனை மனக்காயங்களையும், வடுக்களையும் விட்டுச்செல்லும்??!!! இந்த மாதிரி சமயங்களில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகள் கூட வேண்டாம் - வெறும் அருகாமையே...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes