3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனுபவிக்க நேரும் திகில் நிமிடங்கள் இவை.1. சாயங்காலம் 5 மணிக்குப் பிள்ளை தூங்கத் துவங்கும் போது நமக்கு வயிற்றுக்குள் பயப்பட்டாம் பூச்சிகள் பறக்கும். ஏனெனில் மாலை 5 மணிக்குத் தூங்கும் பிள்ளை இரவு 12 மணிக்கு ஃப்ரஷ்ஷாக எழுந்து தோசை அல்லது சப்பாத்தி கேட்கும். அப்புறம் காம்ப்ளான் கேட்கும். அப்புறம் ஒரு round toilet போய் முடிக்கும். பிறகு உற்சாகமாக விளையாடத் துவங்கும். மறுபடி அவர்கள் தூங்க நள்ளிரவு 2 ஆகிவிடும்.நாமும் 2 மணிக்குத் தூங்கி, காலை 6 மணிக்கு எழுந்து - அப்பா சொல்லும் போதே கண்ணக் கட்டுதே2. கடையில் நாம் interestஆக shopping செய்து கொண்டிருக்கும் போது பிள்ளைகளுக்கு bathroom வரும் போது - ஏனெனில் நாம் toilet எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடித்து போவதற்குள் வழியிலேயே எல்லாம் ஆகிவிடுமோ என்று. (ஏம்ப்பா கடை முதலாளிகளே, அது ஏன் toiletஐ உங்கள் கடையின் பிரம்மாண்டமான...