Monday, August 30, 2010

என்ஜினியரிங் காலேஜ்

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டு ஆரம்பம். முதல் நாள் வகுப்பு எடுத்து முடித்து விட்டு வெளியே வந்தேன். மணிப்பிரவாள நடை மாணவர்களின் கவனத்தைப் பாடத்தில் குவியச் செய்யும் என்பதால் தமிழும், ஆங்கிலமும் கலந்து பாடம் எடுப்பது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். வகுப்பு முடிந்து வெளியே வந்தவுடன் ஒரு மாணவர் அவசரமாக என்னைப் பின்தொடர்ந்து வெளியே வந்தார். 'மேடம் தமில் டோனோ. ஒன்லி இங்கிலிஸ் (Tamil don't know, only english)' என்றார். "Ok. I will take only in English hereafter" என்று சொல்லிவிட்டு வந்தேன். அதே போல் செய்தேன். முதல் internal பரிட்சை முடிந்தது. அப்போது தான் தெரிந்தது அந்த மாணவனுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை என்பது. டிபார்ட்மென்ட்டிற்கு அழைத்துப் பேசினேன். மிகவும் பிற்பட்ட ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர். தமிழ் தெரியாது. பிராந்திய மொழியில் பள்ளி வகுப்புகளை முடித்திருக்கிறார். எனவே ஆங்கிலமும்...

Friday, August 27, 2010

பொழுது போகாத பொம்மு

எதிர்பாராவிதமாக எனக்கு ஒன்றரை மாதம் விடுமுறை கிடைத்தது. ஒரு வார விடுமுறை எதிர்பார்த்ததுதான். ஆனால் அது ஒன்றரை மாதமாக நீண்டு விட்டது. முதல் ஒரு வாரம் பிரமாதமாக கழிந்தது. காலை எட்டரை மணிக்குள் கணவன், பிள்ளைகள் அனைவரும் கிளம்பி விடுவர். பின்னர் நீண்டு கிடக்கும் பகல் பொழுது முழுவதும் எனக்கே எனக்கு. நிதானமாக 10.30 மணிக்கு டிஃபன், சாப்பிட்டானதும் மீண்டும் ஒரு காஃபி, குறுக்கீடுகள் ஏதுமின்றி தொலைக்காட்சி - என் கையில் ரிமோட்டுடன். என் இஷ்டம் போல் சேனல் மாற்றி மாற்றி என்ஜாய் செய்து கொண்டிருந்தேன். பின்னர் சமையல் குறிப்புகளைப் பார்த்து வெரைட்டி சமையல். மதியம் மகன் வந்தவுடன் அவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்கப் பண்ணிவிட்டு மீண்டும் தொ.கா. ஒரு குட்டித் தூக்கம். இப்படியாக ஒரு உப சொர்க்கத்தைச் சிருஷ்டித்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஒரு வாரம் முடிந்தது. சேனல்கள் கடுப்படித்தன. டாக் ஷோக்களில்...

நன்றி

என் வலைப்பதிவுகளை வாசித்து கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாசித்து, உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறே...

முதல் மனைவிகளும் அவர்களின் குழந்தைகளும்

சென்ற வார இறுதியில் பிரகாஷ்ராஜ், போனிவர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியதாம். அவர்கள் இருவரும் Made for each other ஆக காட்சி அளித்தார்களாம் (நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்). விஷயம் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியின் குழந்தைகள் பற்றியது. இரு குழந்தைகளும் அங்கு ஆஜர். ஒரு மாதிரி அரைப்புன்னகை புரிந்தபடி மூத்த மகள். என்ன உணர்வை வெளிப்படுத்தவென்று தெரியாத குழப்பம் அந்த முகத்தில். ஒரு 15, 16 வயது பிள்ளையிடம் 'இவர் தான் உன் புதிய தாய்' என்று அறிமுகப்படுத்துதல் என்ன மாதிரியான மனப்பாதிப்பை ஏற்படுத்தும்?? வற்புறுத்தி வரவழைக்கப்பட்ட சோகமோ என சந்தேகிக்க வைக்கிறது அந்த குழந்தையின் முகபாவம். இதே போல் மற்றொரு செய்தி - பிரபுதேவாவின் மகன் 'அப்பா அம்மாவைக் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று கதறல்' (நன்றி - குமுதம்). இந்த செய்தியைப் படிக்கும் போது அந்தக்குழந்தையின் மனநிலை எனக்குப் பதற்றத்தைத்...

Tuesday, August 24, 2010

சில சந்தேகங்கள்

எனக்கு பிள்ளைகள் (வயது 3 மற்றும் 5 ) விஷயத்தில் சில சந்தேகங்கள் உள்ளன. யாராவது தீர்க்க முடியுமா? இதோ சந்தேகங்கள்1. பள்ளி செல்ல வேண்டிய தினங்களில் காலை 7.45 வரை தூங்கி நம்மை டென்ஷனாக்கும் பிள்ளைகள் எப்படி சனி,ஞாயிறு அன்று நாம் எழுப்பாமலேயே 6 மணிக்கு எழுகிறார்கள்?2. 2 வருடங்களுக்கு முன்னால் வாங்கப்பட்ட, உடைந்த, எதற்கும் உதவாத , ஒரு மூலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பொம்மை எப்படி இரு பிள்ளைகளுக்கும் ஒரே சமயத்தில் கட்டாயம் தேவைப்பட்டு சண்டை ஏற்படுகிறது? 3. எப்படி நாம் ஃபோன் பேசும் போது அல்லது சாப்பிடும் போது அல்லது யூனிபார்மை மாட்டிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு டாய்லெட் வருகிறது?4. காலை முழுவதும் நாம் தேடி, நம்மால் கண்டுபிடிக்க இயலாத பென்சில் சீவும் ஷார்ப்பான கத்தி எப்படி மாலையில் இளைய பிள்ளையின் (3 வயது) கையில் விளையாடக் கிடைக்கிறது?5. நாமெல்லாம் படிக்கும் போது பள்ளிக்கூடம் முழுநேரம் தானே??? இப்போது...

Thursday, August 19, 2010

என் மகன் படிக்கும் Pre.K.G

மகளுக்கு மன்த்லி டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்து விட்டது. கணக்கில் நூற்றுக்கு நூறு. பந்தா பண்ணுகிறேன் என்று எண்ணி விடாதீர்கள் நண்பர்களே. அதே மகள் ஹிந்தி டிக்டேஷனில் பத்துக்குப் பூஜ்யம். (அவளுடைய தாத்தா - என் மாமனார், அந்நாள் தி.மு.க அபிமானியாம். ஒரு வேளை ஹிந்தி எதிர்ப்பு அவள் ரத்தத்திலேயே இருக்கிறதோ ;) ). வாசு கணக்கில் மகள் எடுத்த மார்க்குக்கு கிஃப்ட் வாங்கித் தருவோம் என்றார். ஒரு கொலுசு வாங்குவோம் என்றேன் நான். யார் சொன்னார், 'இந்த விலைக்குத் தங்கம் விற்றால் மக்கள் எப்படி வாங்குவார்?' என்று. கூட்டமோ கூட்டம் நகைக்கடையில். கஸ்டமரைக் கவனியுங்கள் என்று சூப்பர்வைஸர் சொல்லி அந்தப் பக்கம் சென்றவுடன் சேல்ஸ் பெர்ஸன் வெறியோடு நம்மைக் கடித்துக் குதறுகிறார். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீண்ட வேலை நேரம், குறைந்த இடைவேளை மற்றும் சம்பளம். அவர்களால் அப்படித்தான் நடந்து கொள்ள இயலும். கொலுசைத் தேர்ந்தெடுத்து வாங்கி...

Wednesday, August 18, 2010

மகள்

வாசுவுக்கு 2 கால்களிலும் வலி. காலைத் தரையில் ஊன்றவே முடியவில்லை. ankleல் வலி. டாக்டரைப் பார்க்கச் சென்றோம். வலி எந்த இடத்தில் என்று அழுத்திப் பார்த்தார். சரியான இடத்தில் அழுத்திய போது வலியில் துடித்து விட்டார். டாக்டரைத் திட்ட முடியாமல் உர்ரென்று நின்று கொண்டிருந்தேன். பொதுவாக இந்த வலி ஸ்போர்ட்ஸ் பெர்ஸன்ஸுக்குத்தான் வரும் என்றார் டாக்டர். குறிப்பாக அத்லெட்ஸ். இவருக்கு எப்படி வரும் என்று யோசிக்கிறேன். ஒரு வேளை டிவியில் சேனல்க்குச் சேனல் தாவுகிறாரே அதனால் இருக்குமோ??? நீளம் தாவுதல் போல, அதுவும் தாவுதல் தானே ;). கம்மிங் டு தி பாயிண்ட் - டாக்டர் அறையில் நாங்கள் அமர்ந்திருக்கும் போது ஒரு ஆக்சிடென்ட் கேஸ். டாக்டர் உடனடியாக அடிபட்டவரைக் கவனிக்கச் சென்றார். 55-60 வயது மதிக்கக்கூடிய ஒரு பெண்மணி, டிவிஎஸ் எக்ஸலில் சென்று கொண்டிருந்த போது ட்ரக் மோதிவிட்டது. ஹாஸ்பிட்டலுக்கு மிக அருகில் தான் ஆக்சிடென்ட்....

Tuesday, August 17, 2010

விலைவாசி

நேற்று நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல நண்பர்களே. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்துவிட்டேன். மேட்டர் இதுதான் - அனைத்து ரெஸ்ட்டாரண்ட் பார்க்கிங் ஏரியாவிலும் ஒரு செக்யூரிட்டி நிற்பார் - மிகவும் வயதான, மிக மிக ஒல்லியாக, பொருந்தாத அளவில் யூனிபார்ஃம் அணிந்து கொண்டு நிற்பவரைக் கட்டாயம் நீங்கள் எந்த ரெஸ்ட்டாரண்ட்டின் அல்லது ஸூப்பர் மார்க்கெட் வாசலிலும் பார்க்கலாம். பார்க்கவே மனதுக்கு கஷ்டமாக இருக்கும். நம் வண்டியை எடுக்க உதவி செய்வது போல் ஏதோவொன்று செய்து கொண்டிருப்பார். (நிச்சயம் அவரில்லாமலேயே நம்மால் வண்டியை எடுத்துக் கொள்ள முடியும்). ஆனாலும் வயதானவர்கள் இப்படி ஏதாவது வேலை செய்வதைப் பார்க்கும் போது முகம் தெரியாத அவர்களின் பிள்ளைகளைத் திட்டத் தோன்றும். கைக்கு அகப்படும் சில்லறையை அவர்கள் கையில் தந்து விட்டு வருவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறே செய்ய நினைத்து பையைத் துழாவியதில் ரூ.2 மட்டுமே அகப்பட்டது....

Monday, August 16, 2010

வீக் எண்ட்

ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு கட்டாயம் ரெஸ்ட்டாரண்ட்டில் தான். வேளச்சேரியில் உள்ள ஒரு சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட் எங்கள் குடும்பத்தின் ஃபேவரிட் ஸ்பாட். சென்று அமர்ந்தவுடன் டேபிளில் ஏறி அமர்ந்த என் மகன், பெப்பர் பாட்டிலைத் தண்ணி டம்ளருக்குள் போட்டு ஆர்க்கிமிடிஸ் ப்ரின்ஸிப்பிளைச் சரி பார்த்தான். பின் ஃபோர்க்கை எடுத்து அப்பாவைக் குத்தி ரியாக்ஷன் பார்த்தான். ஸ்டார்ட்டர் வந்தவுடன் அதைக் குத்தி எடுத்து பாதியைக் கீழே போட்டு, அதை எடுக்கிறேன் பேர்வழி என்று டேபிளுக்கு அடியில் குனிந்து, நிமிரும் போது என் கையில் இருந்த சூப்பைத் தட்டி விட்டு டேபிளில் முட்டி - அப்பா, ஒரு நிமிடம் வெயிட் ப்ளீஸ் - எனக்கு மூச்சு வாங்குகிறது. ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்தோம் என்று வையுங்களேன். சென்ற மாத வுமன்ஸ் ஈராவில் (Woman's Era) படித்திருந்தேன் - கவுரவமான டிப்ஸ் என்பது பில் தொகையின் 10% - 15% என்று. ரூ.600ன் 10% எவ்வளவு என மனதுக்குள்...

Saturday, August 14, 2010

நேற்று பீட்ஸா ஆர்டர் செய்து கொண்டோம். வாரம் ஒரு முறை ஜங்க் ஃபுட் அலவ்ட். அவர்கள் ஒரு ஆஃபர் தருகிறார்கள். அதாவது ரூ.400க்கு பீட்ஸா வாங்கி, ரூ.39க்கு பாஸ்டா வாங்கி, ரூ.20க்கு குளிர்பானம் வாங்கினால் ரூ.25 மதிப்புள்ள கேக் ரூ.15க்குத் தரப்படுமாம். என்ன ஒரு ஆஃபர் ;). இதற்கு நான் ரூ.25 மதிப்பு கேக்கையே வாங்கிருவேனே என்கிறான் என் தம்பி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்??? இதே போல் ஜவுளிக் கடல்கள் ஆடி சேலுக்குச் சென்றோம். ஷாப்பிங் என்றவுடன் என் மகன் வர மறுத்துவிட்டான் (வயது மூன்று ;) ). இந்த ட்ரஸ்ஸை அடுப்புத்துணியாகக் கூட பயன்படுத்த முடியாது வகையறாக்களுக்கு 50% தள்ளுபடி. மற்றவைக்கு 5% தள்ளுபடி. தெரிந்தே சில ஆயிரங்களுக்கு ஏமாந்துவிட்டு வந்தோ...

Friday, August 13, 2010

மற்றும் ஒரு நாள். குழந்தைகள் பள்ளி சென்று விட்டனர். வாசு (என் கணவர்) ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். பழைய மாவை இரண்டு தோ்சையாக ஊற்றி வேலைக்காரம்மா வரும்முன் பாத்திரத்தை விலக்கப் போட்டுவிட்டேன். காலிங்பெல் ஓசை. ஒரு வயதான பெண்மணி நின்று கொண்டிருந்தார்-சுத்தமாக, நேர்த்தியாக ுடை அணிந்து. பசிக்கிறது என்றார். தோசை சாப்பிடுகிறீர்களா என்றேன். சரி என்றார். ஊற்றி வைத்திருந்த தோசையைக் கொண்டு கொடுத்தேன். போர்ட்டிகோவில் அமர்ந்து சாப்பிடவா எனக் கேட்டார். ஹவுஸ் ஓனர் என்ன சொல்வாரோ என நினைத்து எதிர் மரத்தடியைக் காண்பித்து அங்கே உட்காரச் சொன்னேன். போகும் முன் மாற்று சேலையில்லை. ஒன்று வேண்டும் எனக் கேட்டார். சாப்பிட்டு வாங்க எடுத்து வைக்கிறேன். சேலை ஒன்றைக் கண்டுபிடித்து வைத்து சாப்பிட்டானதும் கொடுத்தேன். நல்லா இருக்கணும் என வாழ்த்திச் சென்றார். அதற்குள் வாசு ஆபிஸிற்குத் தயார். தோசை ஊற்றவா என்றேன். வாயெல்லாம்...

Thursday, August 12, 2010

வணக்கம்

தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம்! இன்று ஆடிப்பூரம். காலை குழந்தைகளையும், கணவரையும் வழியனுப்பிவிட்டு, புவனேச்வரி அம்மனைத் தரிசித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தால் - ஓ மை காட்! வேலைக்காரம் மா பூட்டிய வீட்டைப் பார்த்துவிட்டு திரும்பி விட்டார்களாம் - பக்கத்து வீட்டு பாய் வீட்டம்மா தெரிவித்தார்கள். தாயே புவனேச்வரி உன் பக்தைக்கு நேர்ந்த சோதனை. பாத்திரம் துலக்குவது அப்படியொன்றும் கடினமில்லையெனினும் ஏனென்று புரியவில்லை வேலைக்காரம்மா வராவிட்டால் 'நான் இளிச்சவாய் அதான் என்னை டபாய்க்கிறார்' என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் ஏற்படுகிறது. உங்களுக்கும் அப்படி தோன்றுமா? சொல்லுங்கள...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes