Thursday, April 18, 2013

நீங்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் இளைஞரா - இதைப் படியுங்கள் முதலில்

     முதலில் உங்கள் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். எப்படியும் உங்களுக்குச் சமமாகப் படித்த, வேலை பார்க்கும் பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். சமீபத்தில் நான் பார்த்த வரை, அழகிய தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து மனைவியைத் தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது. தவறில்லை - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை, கனவு.
ஆனால் பெண்களின் உடலியல் கூறுகள் பற்றிய சில அறிவியல்பூர்வமான தகவல்களையும், பெண்களின் மனவியல் பற்றியும் சில தகவல்களை அறிந்து கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் அவசியம்.

பார்ப்பதற்குக் குடும்பப்பாங்கா இருக்கணும் என்று நீங்கள் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த பெண் பார்ப்பதற்கு சினேகா போலோ அல்லது மவுன ராகம் ரேவதி போலவோ இருக்கலாம். ஆனால் மவுனராகத்தில் ரேவதி சொல்வது - எனக்கு ரொம்ப பிடிவாதம் உண்டு, முன்கோபம் உண்டு,சொன்ன பேச்சு கேட்கமாட்டேன் - இதுவே நிஜம். சினேகா போல் சிரித்துக்கொண்டே நீங்கள் சொன்னதெற்கெல்லாம் சரி சொல்வாள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். விஜய் டிவி நீயா நானாவில் பெண்கள் வன்மம் வைத்து பழி வாங்குவது குறித்துப்பேசிய போது ஆண்கள் அதிர்ந்து விட்டனர். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இது கூடவா ஆண்களுக்குத் தெரியாது என்பதுதான். பெண்களின் வன்மம் குரூரமானது. அவர்கள் கோல்ட் பிளட்டட் ஆக எளிதில் செயல்படுவார்கள் . பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களை நம் இ\ஷ்டத்துக்கு வளைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் - உஷார்.

இன்னொரு முக்கியமான விஷயம் - நீங்கள் செய்த, சொன்ன விஷயத்தை ஒரு நாள் சாதாரணமாக எடுத்துக்கொண்டவர்கள் வேறொரு நாள் அதே போன்ற ஒரு விஷயத்துக்காக சண்டையிடலாம். குழம்பிவிடாதீர்கள்.பெண்களுக்கு பி.எம்.எஸ் என்று ஒரு பிரச்சினை உண்டு. இது மாதா மாதம் அவர்களின் உடல் நலம், மன நலம் இரண்டையுமே பாதிக்கிறது. பெண்களின் பீரீயட்ஸ் நாட்களுக்கு 4 நாட்கள் முன்பிருந்தே அவர்களுக்கு தீடீர்க்கோபம், திடீர் அழுகை, டிப்ரஷன் போன்றவை வர ஆரம்பிக்கின்றன. இது அனேக ஆண்களுக்குத்தெரிவது இல்லை. ஏன் காரணமில்லாம அழறா? பொம்பளங்க மனச புரிஞ்சுக்க முடியாது - என்று பத்தாம் பசலித்தனமாக யோசிக்காதீர்கள். இது போன்ற சமயங்களில் அவர்களை சமைக்கவோ, வேறு வேலைகள் செய்யவோ வற்புறுத்தாதீர்கள். வெளியே பார்ப்பதற்கு அவர்கள் நலமாய் இருப்பது போல் தான் உங்களுக்குத்தெரியும். ஆனால் அவர்களுக்குள் உடல் மன ரீதியாகப் பிரளயம்தான் நடந்து கொண்டிருக்கும். இது போன்ற சமயங்களில் அவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு சின்ன உதவியும், உங்கள் மீதான அன்பையும், காதலையும், மரியாதையையும் பன்மடங்கு அதிகரிக்கும். மாறாக உங்களது சிறிய உதாசீனமும் உங்கள் மேல் வெறுப்பை விஷவிருட்சம் போல் வளர்க்கும். ஏற்கனவே நான் சொன்ன பெண்களின் வன்மத்தை நீனைவில் கொள்க. 
தற்போதைய பெண்கள் உங்கள் அம்மாக்கள் போல் கிடையாது. பொருளாதார ரீதியாக சப்போர்ட் பண்ணுவதிலும், குழந்தைகளை அறிவுச்சுடராக வளர்ப்பதிலும் உங்கள் அம்மா வை விட உங்கள் மனைவி பன்மடங்கு உயர்ந்து இருக்கப்போகிறாள் - அவளின் படிப்பு மற்றும் எக்ஸ்போஷர் காரணமாக. அதே நேரம் உங்களின் அர்த்தமற்ற அடக்குமுறைகளை ரிஜக்ட் செய்வதிலும் அவள் உங்கள் அம்மாவிடமிருந்து வேறுபடத்தான் போகிறாள். 

Friday, April 12, 2013

பல்கலைக்கழகத் துணைவேந்தரின் துணிச்சல்

மேற்கு வங்கத்தில் Students' Federation of India வின் தலைவர் 22 வயது சுதிப்தா குப்தா போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். இம்மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையொட்டி மேற்கு வங்க நிதியமைச்சர் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினால் தாக்கப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கொடியை ஏந்திய சிலர் பிரசிடன்சி பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு பயிலும் மாணவிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.

இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலையில், அப்பல்கலையின் துணைவேந்தர் மாளபிகா சர்க்கார் அளித்துள்ள பேட்டி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. அவர் மீடியாக்களில் தெளிவாக நடந்ததை அப்படியே தெரிவித்துள்ளார். கையில் கட்சிக்கொடி ஏந்திய குண்டர்கள், பல்கலைக்கழகத்தின் லேபுகள், பிற பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கின்றனர் என்றார். அவர்கள் கட்சிக்காரர்கள் தானா அல்லது வேறு யாராவது கட்சியைக் களங்கப்படுத்துவதற்காக கட்சிக்கொடியைக் கையில் வைத்துக்கொண்டு அப்படிச் செய்தார்களா என்று நிருபர் எடுத்துக்கொடுத்த லீடுக்கு வளவள கொழகொழ பதிலைச் சொல்லாமல் அதைத் தீர்மானிக்க வேண்டியது காவல்துறை என்றார் கம்பீரமாக.
இத்துணைவேந்தரை நியமித்தது மம்தா பானர்ஜி.பேஸ்புக் கார்ட்டூனுக்கு லைக் கொடுத்ததற்காக கைது செய்யப்படுவது வங்கத்தில் புதிதல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தான் பார்த்ததை, தான் அநியாயம் என்று எண்ணுவதைத் தைரியமாக எந்தவித காம்ப்ரமைஸூம் இல்லாமல் எடுத்துச்சொன்ன இப்பெண்மணியின் நெஞ்சுரமும், நேர்மைத்திறமும் என்னை வியப்பிலாழ்த்துகிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான அபத்தங்களையும்,
 மேலிடத்தில் இருப்பவர்களின் அர்த்தமற்ற கோபங்களையும், செயல்களையும் - சர்வைவல் பிரச்சினை என்று கூறிக்கொண்டு மென்று முழுங்கிக் கொண்டு , சகிக்க முடியாமல் சகித்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். ஏன் நம் மாநிலத்திலேயே கிட்டத்தட்ட 160 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு பெரும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் தான் பேசும் அனைத்து மேடைகளிலும், தான் சார்ந்துள்ள ஒரு கட்சித்தலைவரையும், அவர் குடும்பத்தாரையும் காது கூசும் அளவிற்குப் புகழ்ந்து தன்னை அவர் காலடியில் அமர்ந்திருப்பேன் என்று கூறித் தரைமட்டமாகத் தாழ்த்திக்கொண்ட உரையை எவ்வளவோ முறை கேட்டிருக்கிறோம். அவரின் இத்தகைய `தன்னடக்க` பேச்சை விகடன் கூட சிறிய எள்ளலோடு வெளியிட்டிருந்தது.
     இப்படிப்பட்ட அடிவருடித்தனம் இல்லாமல், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட உயர்திரு.மாளபிகா சர்க்கார் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். We admire you Dear Madam

Thursday, March 14, 2013

சூப்பர் சிங்கரில் நித்யஸ்ரீ மகாதேவன்

                  திரையிசை மற்றும் கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயை மீண்டும் சங்கீத மேடைகளில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் அவருடைய கணவர் திரு. மகாதேவன் தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று, நித்யஸ்ரீயின் மாமியார் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவர் வீட்டிலிருந்து மாமியாரைக் கவனித்துக்கொள்ளவில்லையாம். இதனால் அவருடைய கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தாயாரின் மறைவுக்குப்பின் அம்மனவுளைச்சல் அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு ரூமர். 

                          இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். இசை என்பது கடவுள் கொடுக்கும் வரம். எல்லோருக்கும் அவ்வரம் கிட்டுவதில்லை. சமீபத்தில் விஜய் டீவி-யில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ஓம் சிவோஹம் பாடலைக் கேட்டபோது Knowledge Surpassing Peace என்பார்களே - அது போன்ற அறிவெல்லாம் கடந்த இறை அமைதி மனதை நிறைத்தது. இப்படிப்பட்ட மன அமைதியை எத்தனை பேரால் பிறருக்கு வழங்க முடியும்? இது ஒரு மிகப்பெரிய வரமல்லவா?

                        இப்படிப்பட்ட ஒரு வரம் கிடைக்கப்பெற்ற நித்யஸ்ரீ, அதை பிறருக்கும் வழங்குவதே நியாயம். தன் தாயாரை ஒரு வேலையாளை அமர்த்திப் பார்த்துக்கொண்டிருக்கலாமே திரு.மகாதேவன்? இதற்காக அவர் தன்னையும் வருத்தி, காலமெல்லாம் தன் மனைவியும், பிள்ளைகளும் வருந்தும் படி செய்தது தவறல்லவா? 

 'இது ஒரு புதுவித பரவசம் - மயக்குது இசையென்னும் அதிசயம்............



இவ்வதிசயத்தைக் கைக்கொண்ட எல்லோரும் மானுடத்தை வசப்படுத்தட்டும்.

Wednesday, January 23, 2013

குழந்தைகளுக்குப் புத்தகத் திருவிழாவில் இம்முறை என்ன சிறப்பு?

        கோலாகலமாக நடந்து முடிந்து கொண்டிருக்கிறது புத்தகத்திருவிழா (இன்றே கடைசி). பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை. இந்த முறை சின்ன பிள்ளைகளுக்கான தமிழ்ப் புத்தகங்கள் ஆப்பிள் பிரசுரத்தால் மிகவும் சிறப்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ரீஸனபிள் விலை, மிக அழகான படங்கள், க்வாலிட்டி பேப்பர் - சுருக்கமான கதைகள். பிள்ளைகளால் மிக எளிதாகப் படிக்க முடிக்கிறது. இதைத்தான் நான் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
                  அதாவது, சின்னப் பிள்ளைகளுக்குரிய தமிழ்ப்புத்தகங்கள் (7 மற்றும் 5 வயது) அவர்களை வசீகரிக்கும் வண்ணம் இருந்ததேயில்லை - படமேயில்லாத மிக நீண்ட கதைகள், மொழி நடை வயதுக்கேற்றார் போல் இல்லாமல் - இப்படித்தான் இதுவரையில் கடந்த 4 வருடங்களாக நான் புத்தகச் சந்தையில் பார்த்தேன். ஆனால் இம்முறை அந்தக்குறையை ஆப்பிள் பிரசுரம் போக்கிவிட்டது. குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையான தரத்துடனும், சுவாரசியத்துடனும் தமிழ்ப்புத்தகங்கள் - Im impressed to the core. குழலினிது யாழினிது என்பர் தங்கள் பிள்ளைகள் தமிழ்ப்புத்தகங்கள் (அதாவது தாய்மொழியில் உள்ள புத்தகங்கள் ) படித்து இன்புறுவதைக் கேட்டு மகிழாதவர். ஜென்ம சாபல்யம் அடைந்தேன் ;)
மேலும் AGS.மணி என்பவர் ஒரு பிரசுரம் நடத்தி வருகிறார். சின்ன பிள்ளைகளுக்கான க்ளாசிக் வரிசை  தமிழில் (ஆலிஸ் இன் வெண்டர்லேண்ட், தீக்குச்சி விற்ற பெண்....) ஒரு புத்தக விலை ரூ.12. இதுவும் மிக நன்றாக இருந்தது. பேப்பர் அவ்வளவு தரமில்லை. ஆனாலும் பரவாயில்லை. இது ஒரு நல்ல முயற்சி.
           அப்புறம் இருக்கவே இருக்கிறது நம் அமர்சித்திரக்கதை. காக்கை காளி, சுப்பாண்டி, தந்திரி மந்திரி - பூந்தளிரில் நாம் ரசித்து ரசித்து ரசித்த கேரக்டர்கள் - ஆங்கிலத்தில் தொகுப்பாக வெளியிடுகின்றனர். இதைத் தமிழிலும் வெளியிட்டால் நன்றாக இருக்கும். என்ன தான் என் பிள்ளை இதை ஆங்கிலத்தில் சிரித்துச் சிரித்துப் படித்தாலும், அவள் (ன்) தமிழில் படிப்பதையே நான் மிகவும் ரசிக்கிறேன். குரங்கு கபீஷை ஏனப்பா ஆங்கிலத்தில் கூட வெளியிட மறுக்கிறீர்கள்???
            நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்திலும் நான் மேற்சொன்ன வயது குழந்தைகளுக்கான சில தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கின்றன.இன்னொரு இனிய காட்சி - நான் எந்த ஸ்டாலில் எல்லாம் சின்ன பிள்ளங்க தமிழ் புக், சின்ன பிள்ளங்க தமிழ் புக் என்று தேடிக்கொண்டிருந்தேனோ அங்கெல்லாம் இன்னொரு அப்பா (பிள்ளைகள் 5 மற்றும் 3 வயது) சின்ன பிள்ளங்க தமிழ் புக் தேடிக்கொண்டிருந்தார். அப்புறம் ஸ்டால் எண் டிப்ஸெல்லாம் பரிமாறிக்கொண்டோம்.  பிரசுரகர்த்தாக்களே நீங்கள் வெளியிடுங்கள் - நாங்கள் வாங்குவோம் கட்டாயம்.
              மற்றும் க்ராஸ்வேர்ட், விடுகதைகள் ..... (ஆங்கிலத்தில்தான்) - இவ்வாறு எங்கள் குடும்பத்தின் புத்தகக்கண்காட்சி இனிதே முடிந்தது.
எனக்கு வாங்கிய புத்தகப்பட்டியல் பின்னொரு பதிவில் :)
 
 

Tuesday, January 15, 2013

பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கு்ம் பாலமேடு ஜல்லிக்கட்டு - வசந்த் டிவி நேரடி ஒளிபரப்பு

வசந்த் டிவியில் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது - உண்மையில் செம த்ரில். மாடு பிடிப்பவருக்கு பரிசுகள் பீரோ, சைக்கிள், பாவாடை (???), தங்கக்காசு, வேட்டி, அண்டா, குடம். வாடிவாசலின் இருபுறமும் சைக்கிள், பீரோக்களைக் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். வாடிவாசலின் மேல் சிறிய மூங்கில் மேடை கட்டி ஊர்க்காரர் ஒருத்தர் லைவ் காம்ப்பியர் பண்ணிக்கொண்டிருக்கிறார் (மேடை ஒரு டைப்பாக இருக்கிறதே  - விழுந்துவிடாதா?).  டிவி சார்பாக பட்டு சேலை கட்டி ஒரு பெண் மற்றும் வேட்டி சட்டையில் ஒரு ஆண் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் இருவரின் வர்ணனை ஒரு சாம்பிள் -
பட்டு வேட்டி சேலை ஆண் பெண் 
                மீன் கிடைக்காத போது சும்மா நின்று கொண்டிருக்கும் கொக்கு மீனைப் பார்த்தவுடன் பாயும் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கிற்கிணங்க வீரர்கள் மாடு வந்தவுடன் பாயக் காத்திருக்கிறார்கள். காளையா வீர மாலையா என்று வீரர்கள் வீறு கொண்டு நிற்கிறார்கள். நம் கண்களும் வாசலைப்பார்த்து கண்கள் ஆயிரம் பூக்களைப் பூத்து நிற்கிறது. அதோ ஒரு வீரர் மாட்டை அடக்கி விட்டார் - கீழே விழுந்து விட்டார் - மருத்துவக்குழு வந்து தூக்கிவிட்டது.
நம் ஊர்க்கார காம்ப்பியரர் 
               ஏம்ப்பா மாடு பிடிக்க வந்திகளா, சும்மா நிக்க வந்திகளா?. மாட்ட புடிங்கப்பா. பூரா ப்ரைஸூம் மாட்டுக்காரந் தான் வாங்கிட்டுப் போறான். காசு கீசு வாங்கிட்டியா. ஏ யாரப்பா டிஷர்ட் (மாடு பிடிப்பவர்கள் அணிவது) போட்டுக்கிட்டு டிராக்டர் கீழ உக்காந்துருக்கிறது? சாப்பாடு கொண்டாரச்சொல்லவா. எந்திருச்சு மாட்டப் பிடியப்பா. மாட்டத்தொட்டாலாம் பரிசு கெடயாது, புடிக்கணும். ஏ சிங்கம்டா நீ - அது பிடிமாடு. வந்து பரிச வாங்கிட்டுப்போ. அது சின்ன அடிதான் வுடு சரியாப் போவும்.
எது போட்டியின் போக்கை அழகாகத் தெரிவிக்கிறது - Choice left to u to decide

Saturday, December 15, 2012

ரியல் அஞ்சாநெஞ்சன் அஜித்

                              வயதும் புறத்தோற்றமும்  பிரதானமான விஷயங்களாக இருக்கும் திரைத்துறையில் அஜித் ஒரு ஆச்சர்யம். அவருடைய சால்ட் அன் பெப்பர் லுக்கைப் பார்க்கும் போது உண்மையில் ஆச்சர்யமாக இருக்கிறது. வயதை இவ்வளவு வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடிகரும் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். விக்ரமிடம் ஒரு பேட்டியில் அவர் வயதைக் கேட்டபோது தெரிவிக்க மறுத்துவிட்டார். இது வரையில் அவர் பிள்ளைகளின் போட்டோவையும் வெளியிட்டதில்லை (உத்தேசமாக அவர் வயதைக் கணக்கிட்டு விடலாம் அல்லவா). 
                            இந்திய காஸ்மட்டிக் சந்தையின் மதிப்பு பல்லாயிரம் கோடி என்கின்றனர். சில பல மேக்கப் சாதனங்களைப் பயன்படுத்தினால்தான் நீ தேறுவாய் என்று மீடியாக்கள் அலறுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் நாம் நாமாக இருப்பதற்கு அசாத்தியமான தன்னம்பிக்கை தேவையாக இருக்கிறது. மேக்கப் இல்லாமல் உங்கள் முகத்தைக் காட்டத் துணிவீர்களா? என்று கேட்கிறது ஒரு சோப் விளம்பரம். நம்முடைய பலங்களை நாம் அறிந்திருந்தோமென்றால், நம்முடைய தோற்றம் பலவீனமாய் இருக்கும் பட்சத்தில் அதை பொருட்படுத்தாமல் இருக்கக் கூடிய மன திடம் நமக்கு வாய்க்கும். எங்கள் வகுப்புத்தோழர்களில் அனேகருக்கு ரோல்மாடலாக, இன்பிரேஷனாக (நான் உட்பட) இருந்தவர் எங்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பேராசிரியர்  டாக்டர்.மகிழ் கார். There is nothing spectacular about his looks. ஆனால் அவரின் அறிவு - சான்ஸே இல்லை.
                          நாம் என்ன தான் மேக்கப்பெல்லாம் போட்டுக்கொணாடாலும் கடைசியில் நாம் யார் என்பதற்காகத்தான் நாம் மதிக்கப்படப்போகிறோம் - நாம் எப்படி தோற்றமளிக்கிறோம் என்பதற்காக அல்ல. எல்லா சாயமும் ஒரு நாள் வெளுத்துவிடும்.

A thing of beauty is a joy forever;
A thing of truth is a thing of beauty.

உண்மையே அழகு.

Friday, November 30, 2012

மனீஷா கொய்ராலாவிற்கு கான்சர்

பிரபல நடிகை மனீஷா கொய்ரலாவிற்கு கான்சர். சில நாட்களுக்கு முன் ஒரு சமூக வலைத்தளத்தில் புட் பாய்சனிங்கால் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்திருந்தார். தான் கட்டிக்கொண்டிருக்கும் புதிய வீட்டிற்காக நேபாளில் தங்கியிருக்கும் மனீஷா இரு தினங்களுக்கு முன் சுயநினைவை இழந்து கீழே விழுந்திருக்கிறார். அது வரை புட் பாய்சனிங் என்று நினைத்துக்கொண்டிருந்த அவரின் குடும்பத்தார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக அவரை மும்பை கொண்டு வந்திருக்கின்றனர். ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுள்ள அவர், இச்செய்தியை மிகத் தைரியமாக எதிர்கொண்டதாக அவரின் தோழி தெரிவிக்கின்றார். விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes