Sunday, August 28, 2011

ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை

நாம் மனிதர்களையும் அவர்கள்பால் நாம் கொள்ளும் உறவுகளையும் கையாள்வதில் என்றும் உணர்ச்சிவயப்பட்டவர்களாகவே இருக்கிறோம். பெண் என்னும் தனி மனுஷியை நமக்கு ஒன்று தெய்வமாக சித்தரிக்கவேண்டும் அல்லது பேயாக கேவலப்படுத்த வேண்டும். கணவனைக் கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுவாள் - டைப்பாக இருக்கவேண்டும். ஆசிரியர்களை mr அல்லது mrs என்ற அடைமொழியோடு பெயரிட்டு கூப்பிடுவதை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அதே போல் நண்பர்களையும், நட்பையும் ஒரு pedestalல் கொண்டு வைத்தபின் தான் நாம் ஓய்கிறோம். friendshipக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று பேசுபவரை திரைப்படத்தில், வகுப்பறையில், ஆஃபிஸில் எங்கும் காணலாம்.





போன வாரம் ஸ்கூலில் இருந்து வீடு திரும்பிய என் மகளின் கைகளில் காயம். என்னவென்று விசாரித்ததில் ஹரிணி கிள்ளிவிட்டதாகச் சொன்னாள். நீ miss கிட்ட சொல்லி வேற place போக வேண்டியது தான என்றேன். ஹரிணி என் friend மா என்றாள். உன்ன மாதிரியே இருக்கிறா உன் மகளும் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா. இவ ரொம்ப நல்லவ) என்றார் வாசு. நண்பர்களால் நாம் காயமடைவதும், மோசமான ஏமாற்றங்களுக்கு உள்ளாவதும், அதை நம் நெருங்கிய உறவினர் criticise பண்ணுவதும் எல்லா வீடுகளிலும் நடப்பது. நீதான் friend friendங்கிற. அவ செஞ்ச வேலையப் பாத்தியா என்ற கேள்வியை எதிர்கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இது எதை நிருபிக்கிறது என்றால் நண்பர்கள் மோசமான மனிதர்கள் என்பதையல்ல - நண்பர்களும் மனிதர்களே என்பதை. நண்பர்கள் சில வேளைகளில் சுயநலத்தோடு நடந்து கொண்டாலும், காயப்படுத்தினாலும் நிச்சயம் அவர்களை நம் வாழ்க்கையிலிருந்து முற்றுமாக அகற்றிவிட முடியாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நட்பை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ் தர விரும்புகிறேன்.















  1. பிரத்தியேகமானது எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகும், இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும் என்பதும் சுத்த ஹம்பக். அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக பெற்றோரின் மரணம் தரும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் உடல் பருமனால் அவதியுறும் தோழியின் மனவலியை என்னால் ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ளவே முடியாது. whats the big deal என்பதே என் reaction ஆக இருக்கும். எனவே மனம் வருந்தி நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயம் கிண்டலாக ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் மீது பிரயோகிக்கப்படும்போது மனவலி ஏற்படும். ஏனெனில் அப்பிரச்சினை இல்லாத உங்கள் தோழியால் அதைப்புரிந்து கொள்ள இயலாது. அதே போல் பொதுவான சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் சக்ஸஸ் என்று கூறி சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிரத்தியேக சந்தோஷங்களை அல்ல. ஏனெனில் மனித மனம் நுண்ணிய இழைகளால் ஆனது. அந்த இழைகளை அறுத்து மனத்தைச் சிதைக்க சிறு சலனமும் போதும். உங்களின் வெற்றியைக் கேட்கும் உங்கள் நண்பனின் மனதில் தோன்றும் சிறு ஏக்கமும் (அந்த வெற்றி அவர்களுக்கும் கிடைத்திராத பட்சத்தில்) பொறாமைத்தீயைப் பற்ற வைத்து நட்பை பஞ்சராக்கும். இவைகளால் நம் நண்பர்கள் கெட்டவர்கள் என்று புரிந்து கொள்வது அரைவேக்காட்டுத்தனம். நம் நண்பர்களும் - உயர்ந்த லட்சியங்களும், கீழான இச்சைகளும், சகமனிதருக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும், நான் மட்டுமே உயரவேண்டும் என்ற தன்னலமும் - கலந்து கொண்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே.










  2. எதன் பொருட்டும் கேட்கப்படாமல் அட்வைஸ் கொடுக்காதீர்கள். இது 10 வருட நட்பையும் 10 நிமிடத்தில் நொறுக்கி அள்ளிவிடும் வல்லமை படைத்தது. என் 12 வருட தோழியின் காதலனுக்கு accident. வீட்டில் படுக்கையிலிருக்கிறார். அவர்களுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. தோழி வேறு ஊரில் இருந்தாள். accident விஷயம் தெரிந்தவுடன் அவள் அவர் வீட்டிற்கு சென்று தங்கி அவருக்கு உதவி செய்ய விருப்பப்பட்டாள். நான் அந்த ஊர்ல ஒரு மாதிரியா பேசுவாங்க. பாத்துப்போ என்றேன். (அவள் என்னிடம் ஐடியா கேட்கவேயில்லை. நானாத்தான் கொடுத்தேன்). அன்றோடு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். திருமணத்திற்கு பத்திரிககை கூடத்தரவில்லை. கேட்கப்படாமல் ஐடியாவோ அட்வைஸோ தரவே தராதீர்கள். அவரவர் வாழ்க்கையை நடத்திச்செல்ல அவரவருக்குத்தெரியும்.



இவற்றால் உணரப்படும் நீதி: எல்லாவற்றையும் பகி்ர்ந்து கொள்ளாதீர்கள், கேட்கப்படாமல் அட்வைஸ் தராதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஃபிரெண்டும் நிச்சயம் தேவை நண்பர்களே

Monday, August 8, 2011

டப்பர்வேர் தோழிகள் ??!!

கல்லூரிப்பருவம் முடிந்த பின்னர் திருமணமானவுடன் தோழிகளோடு செலவிட பெண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. திருமணமான முதல் வருடம் தம்பதியருக்குள் ஒருவரின் குறை மற்றவருக்குத் தெரிவதில்லை. எனவே முதல் வருடம் இனிதே கழிகிறது. அடுத்த 3 வருடங்கள் ஒரே தலை போகிற சண்டை (ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கிறோமாம் ;) ). நீங்க ஏன் உங்க அம்மாக்கிட்ட அப்படி சொன்னீங்க? நீ மட்டும் அப்டி செய்யலாமா - இத்யாதிகள். அடுத்து ஒரு ஸ்டேஜ் - வாழ்க்கைத்துணை செய்யும் ஏதோ ஒரு செயல் மனவருத்தத்தைத் தருகிறது - ஆமா சொல்லி சண்ட போட்டானாப்ல என்ன ஆயிரப்போகுது என்ற மனப்பக்குவமும், தெளிவும் ஏற்பட்டுவிடும் ;)பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்லத் துவங்கிவிடுவர். இந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. கல்லூரித் தோழிகளின் நினைவு வருகிறது. இச்சமயத்தில் அக்கம்பக்கம் யாராவது நம்மோடு பழகமாட்டார்களா? ஏதாவது ப்ரண்ட் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.

இப்படி ஒரு ஸ்டேஜில் நான் இருந்தபோது ஒரு நாள் என் மகளை அபாகஸ் க்ளாஸ் முடித்து என் அம்மா கூப்பிட்டு வநுத பின் ஒரு விஷயத்தைச் சொன்னார். சன் ஷேட் அப்பார்ட்மென்ட்ஸில் (எங்க வீட்டுக்கு 2 வீடு தள்ளி) ஒருத்தங்க இருக்காங்க. டப்பர்வேர் சாமான்லாம் விக்கிறாங்களாம். வாங்குறியான்னு கேட்டாங்க. அவங்க வீட்டுக்கு வரச்சொன்னாங்க - என்றார். நானும் பழைய டப்பாக்களைத் தூக்கிப்போட்டுவிட்டு புது டப்பாக்கள் வாங்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் வீட்டுக்கு போய்தான் பார்ப்போமே என்று சென்றேன் (தயக்கத்துடன்தான்). அங்கே எனக்கு தடபுடல் வரவேற்பு. மிக இனிமையாக பேசினார் அப்பெண்மணி. குழந்தைகளின் படிப்பு, பள்ளிகளின் தரம், ஏரியாவில் ரியல் எஸ்டேட் நிலவரம் என்று பல விஷயங்களை டிஸ்கஸ் செய்தோம். நேரம் போனதே தெரியவில்லை. கேட்டலாக் காண்பித்தார். நான் கேட்ட சில ரக டப்பாக்கள ஸ்டாக் இல்லை. 2 எண்ணை ஜார்கள், ஒரு பீலர் வாங்கிக்கொண்டேன். கிட்டத்தட்ட ரூ.1800 பில். மற்ற சாமான்கள் ஸ்டாக் வய்தவுடன் தெரிவிப்பதாகச் சொன்னார். சாப்பிட்டுத்தான் போகவேண்டுமென்று ஒரே அன்புத்தொல்லை. அடுத்தமுறை பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வரவேண்டுமென்றார். எனக்கும் பிள்ளைகள் எந்நேரமும் வீட்டிற்குள்ளேயே கிடக்கின்றார்களே. நல்ல விளையாட்டுத்துணை கிடைத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி. ஒரு வாரமாக அவர்கள் வீட்டுக்கு என் பிள்ளைகளும் எங்கள் வீட்டுக்கு அவர்கள் பிள்ளைகளும் வந்து ஒரே குதூகலம் தான். டிவி கம்ப்யூட்டர் தான் விளையாட்டுத்தோழர்கள் என்று எண்ணியிருந்த குழந்தைகளுக்கு ஒரு புதிய உலகம் கண்முன் விரிந்த்து. everything went smooth. meanwhile நான் என் சுமார் 18 வருடத்தோழி மோனிக்கு போன் பண்ணி கிச்சன் முழுமைக்கும் டப்பர்வேர் டப்பாக்கள் வாங்கவிருப்பதைச் சொன்னேன். மாலா ப்ளாஸ்டிக்கில் ஏன் அவ்வளவு காசு போடுகிறாய்? சாதா ப்ளாஸ்டிக்குக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. ஒரே வருடத்தில் இதுவும் பழசாக ஆகிவிடும் என்றாள். யோசித்துப் பார்த்ததில் அதுவே சரியென்று பட்டது. எனவே டப்பர்வேர் தோழியிடம் மற்றவை வேண்டாமென்று சொல்லிவிட்டு தோசை மாவு டப்பா ஒன்று மட்டும் வாங்கிக்கொண்டேன்.

அன்று மாலை - அம்மா ஷிவானி (புதுத்தோழியின் மகள்) அக்கா வருவாங்க. பேப்பர்ல கேமரா பண்ண சொல்லித்தருவாங்க - என்று என் பிள்ளைகள் வெய்ட் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவள் அன்று மட்டுமல்ல பின் என்றுமே வரவில்லை. பிள்ளைகள் மறுபடியும் டிவிக்கும் கம்ப்யூட்டருக்கும் பழகிக்கொண்டார்கள். நான் தான் டப்பர்வேர் வாங்கியிருக்கலாமோ என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். :(

Monday, August 1, 2011

ரியலிசப் படங்கள்

நீண்ட நாட்களுக்குப்பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்சமய ட்ரெண்டான ரியலிச படங்களைப் பற்றி நான் நினைப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அங்காடித்தெரு, கற்றது தமிழ், நந்தலாலா, உன்னைப்போல் ஒருவன், தெய்வத்திருமகள் - இந்தப்படங்களின் க்ளிப்பிங்சைப் பார்க்கும் போதே மனதை ஒரு பதட்டம் ஆக்கிரமிக்கிறது. இவற்றின் இயக்குனர்கள் ஒரே குரலில் சொல்லும் செய்தி - உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் இப்படத்தை எடுத்தேன். இவர்கள் சொல்வது நிச்சயம் சரிதான். ஒரு முறை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தோம் (இனிமேல் ஏழேழு ஜென்மத்துக்கும் அங்கு செல்ல மாட்டேன், அனைத்துப் பொருட்களையும் இலவசமாகக் கொடுத்தாலும் கூட). வழக்கம் போல் என் மகளுக்கு பாத்ரூம் வந்துவிட்டது. அங்கு இருந்த லேடீஸ் டாய்லெட் - தனியாக கதவுடன் இருக்கக்கூடியவை 6 இருந்திருக்கலாம் மற்றவை வெட்டவெளி. உள்ளே ஒரு பெருங்கூட்டம். தனி டாய்லெட்டுக்கு காத்திருப்பதெல்லாம் நிச்சயம் கஷ்டம். தள்ளிக்கோங்க ப்ளீஸ் அவசரம் என்ற ஒரு சிறு வயது சேல்ஸ் பெண், அங்கு யாரிருக்கிறார்? பக்கத்திலிருக்கின்றனரா, தூரத்திலிருக்கிறாரா என்பதையெல்லாம் பார்க்காமல் என் காலுக்கு மிக அருகிலேயே அமர்ந்து விட்டார். நாமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான். எனக்கு கண்கள் தளும்பிவிட்டன. ஒரு சின்னஞ்சிறு பெண் பக்கத்திலிருக்கும் யாரையும் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் இயற்கை உபாதையைத் தணித்துகொள்வது எனக்கு பரிதாபமாக இருந்தது. என்ன ஒரு மோசமான வேலை பார்க்கும் சூழல்?

நான் சொல்ல வருவது இதைத்தான் - நேரிலேயே ஏற்கனவே ஜீரணிக்க முடியாத, நம்ப முடியாத பல விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம். இவை நம்மை ஒரு விதமான குற்றமனப்பான்மைக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாக்குகின்றன. அவற்றையே மீண்டும் போய் தியேட்டரிலும் பார்க்கும் மனவலிமை நிச்சயம் எனக்கு இல்லை. why should i relive my same stress again in அங்காடித்தெரு?


தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கம்மி என்பது நமக்குத் தெரியாதா? இப்போதைக்கு எதைப்படித்தாலும் வேலை வாய்ப்பு கம்மிதான். 3 வேளை சாப்பிடவும், தங்க இடமும் இல்லாத எத்தனையோ மாணவர்களை நான் அறிவேன். அம்மாக்கு உடம்பு சரியில்ல. பணத்துக்கு என்ன பண்ணனு தெரியல என்று கண்ணீர் விட்ட மாணவ சகோதரர்களை எனக்குப் பர்சனலாகத் தெரியும். நேற்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வந்த வெவ்வேறு செய்திகள் -




  1. சென்ற வருடம் படிப்பை முடித்த ஒரு ஏரோநாட்டிக் இன்ஜினியர் வேலை கிடைக்காமல் ஏடிஎம்மை கொள்ளை அடிக்க முயற்சி.


  2. BL மாணவன் வழிப்பறி கொள்ளை


  3. கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்

இதை ஒரு 3 மணி நேரம் படமாகப் பார்க்க வேண்டுமா?


படம் என்பது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தைக் கொஞ்ச நேரமாவது குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலைவர் ரஜினி வேலையில்லாப் பட்டதாரியாக லெதர் பேண்ட், ரேபான் கண்ணாடி போட்டுக்கொண்டு வேலை தேடுவார், கதாநாயகி - உனக்குத்தான் வேறு வேலையில்லையே என்னைக்காதலி- என்று பாடியாடுவார். உடனே தலைவர் சர்ட்டிபிகேட் ஃபைலைத் தூக்கிப்போட்டுவிட்டு காதல் செய்யத்துவங்கிவிடுவார். கட்டாயம் பின்னொரு நாளில் ஏதாவது வேலை கிடைத்துவிடும். நம்பிக்கை தாங்க வாழ்க்கை. படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். உண்மையிலேயே அந்நாளையப் படங்களுக்காக மனம் ஏங்குகிறது.


அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிலுவை, பூணூலைத் தூக்கிப்போட்டுவிட்டு போவதோடு படத்தை முடித்து விட்டார். அதற்கு பிறகு அவர்கள் எவ்வளவு கஷ்டப்படார்கள் என்பதை நான் காண்பிக்கிறேன் என்று கிளம்பும் இயக்குன நண்பர்களே - அவர்கள் நாய்படாத பாடு படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் (தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் மகளுடைய காதல் கணவன் dowry harassmentக்காக ஜெயிலில், டாக்டர் மகளின் காதல் கணவனை pwdல் வேலை பார்க்கும் என்ஜினியர் ஆள் வைத்துக் கொன்றார் etc etc etc...................................). இந்தப்பாடுகளைப் பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில், உடன் வேலை பார்ப்பவர்களிடத்தில் தினமும் பார்க்கிறோம். And they lived HAPPILY everafter என்பதை திரைப்படத்திலாவது பார்க்கவே நாங்கள் விரும்புகிறோம்.

Sunday, January 16, 2011

ஏற்பது இகழ்ச்சி

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இனி தமிழ்நாட்டின் அடுத்த திருவிழா தேர்தல்தான். இப்போதே கருணாநிதியின் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் குவியத்துவங்கிவிட்டன - 1.75லட்சம் கோடியைச் செலவழிக்க வேண்டாமா? இதில் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற மொக்கை அறிவிப்பு வேறு. புல்லரிக்குது போங்க. சென்னையின் பெரும்பாலான ஏரியாக்களில் TV இலவச Door delivvery. நீங்கள் இதைப் பெற்றுக்கொள்வதற்கு எங்கும் போய் வரிசையில் காத்திருக்க வேண்டாம். சில மாதங்களுக்கு முன் இதைப்பெற்றுக்கொள்ள நீங்கள் அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல நேர்ந்திருக்கும். வேளச்சேரியில் இந்த இலவச தொலைக்காட்சியைப் பெற்றுக் கொள்ள Ford Ikon , Santro க்களில் வந்திருந்தார்களாம் மக்கள் (நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா). நீங்கள் எதற்கு இதை வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு என் வீட்டில் வேலை செய்பவருக்குக் கொடுக்க என்றார்களாம். இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கவும், கேட்கவும் நேர்ந்த சூழ்நிலையில் தினமலரின் ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. செய்தி இதுதான். திருச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயி தனக்கு அளிக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியைக் கலெக்டர் ஆஃபிஸில் திருப்பி அளித்தார். அதனோடு அவர் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார். கடிதத்தின் சாராம்சம் இது - முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி. ஆனால் எங்களுக்கு இலவசங்கள் எதுவும் தேவையில்லை. இதற்கு பதிலாக எங்கள் பகுதியில் தடையில்லாத மின்சாரம் கிடைக்க வழி செய்தும், பாசன முறைகளில் புதுமை புகுத்த பயிற்சியளித்தும் விளைச்சலைப் பெருக்க வழி செய்து கொடுங்கள். அப்படி நீங்கள் செய்யும் போது இவற்றையெல்லாம் நாங்கள் எங்கள் சுயசம்பாத்தியத்தில் பெற்றுக்கொள்வோம். இந்த தொலைக்காட்சியை என் அன்புப்பரிசாக நான் முதல்வருக்கு அளிக்கிறேன்.

நான் தமிளன்டா என்று மேடைகளில் முழங்கும் சிவப்புக்கண் தெலுங்கர்கள், தமிழ் தான் என்னை வாழ வைத்தது என்று சொல்லிவிட்டு அனைத்து முதலீடுகளையும் தம் சொந்த மாநிலங்களில் செய்யும் கன்னடர்களையும் பார்த்து சலித்த எனக்கு இந்த தமிழனி்னஃ செய்கை மிகுந்த பெருமிதத்தை தருகிறது. தன்னிறைவே மெய் நிறைவு. ஏற்பது எவ்வகையிலும் இகழ்ச்சியே. நாம் கொடுப்பவர்களாய் இருப்போம், பெறுபவர்களாய் அல்ல. என் பாத்திரம் நிரம்பி வழியும். அதிலிருந்து நான் எல்லோருக்கும் கொடுப்பேன் என்பதே நம் மனநிலையாய் இருக்கட்டும்.

இதனை எழுதும்போது சென்ற வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவில் வருகிறது. என் தோழியின் வீட்டிறக்கு செல்ல வேண்டியிருந்தது. வாசுவோடு வண்டியில் சென்றேன். என் ஹேண்டஃ பேகை வண்டியின் முன் பகுதியில் தொங்கவிட்டிருந்தேன். நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பையை எடுத்துக்கொள்ள முன்னால் வந்து பார்த்தால் பையைக் காணவில்லை. எங்கே விழுந்த்தென்று நானும் கவனிக்கவில்லை, வாசுவுக்கும் தெரியவில்லை. என்ன செய்வதென்று விளங்கவில்லை. வாசு ATM ல் பணம் எடுத்துக்கொடுத்துவிட்டு, எனக்கு திரும்பி்பபோய் தேடிப்பார்க்க டைம் இல்லை. ஆஃபிஸிற்கு லேட்டாகிவிட்டது. அப்படியே நாம் தேடினாலும் கிடைப்பதற்கான பாஸிபிலிட்டி ரொம்ப கம்மி. நீ ஃப்ரண்டு வீட்டுக்குப் போய்ட்டு வா. அப்புறம் பாத்துக்கலாம் என்றார். அவர் சொல்வதும் சரிதான். தொலைந்த பை கிடைக்கவா போகிறது என்று நினைத்து பேசாமல் friendஐப் பார்க்கச் சென்றுவிட்டேன். திடீரென்று வாசு என் friend நம்பருக்கு phone செய்து (என் phone பையோடு சென்றுவிட்டது) உன் நம்பருக்கு call பண்ணேன். ஒரு அம்மா எடுத்தாங்க. அட்ரஸ் கொடுத்தாங்க. அங்க போய் உன் பைய வாங்கிக்குவியாம் என்றார். இதெல்லாம் நம்ம சிங்காரச்சென்னையில் சாத்தியமா என்றே புரியவில்லை. ப்ரேமா (என் ப்ரெண்ட்), ரமேஷ் அண்ணன்(ப்ரேமாவின் அண்ணன், எனக்கும் தான் - தனியால்லாம் போக வேண்டாம்மா. எவ்வளவு தூரம் நம்பலாம்னு தெரியல) நான் எல்லோரும் அண்ணனின் காரில் அந்த முகவரிக்குச் சென்று பார்த்தோம். ஒரு ஒண்டிக்குடித்தன வீடு. ஒரு அம்மா வந்து பையைக் கொடுத்தார்கள். வீட்டில் வேறு யாரும் இல்லை. வீட்டுக்கார்ரை (40 வயது) ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்களாம் heart operationக்கு. பிள்ளைகள் அவருக்குத் துணைக்கிருக்கிறார்களாம். வீட்டுக்காரர் டீக்கடையில் வேலை பார்க்கிறாராம். ஒரு நாள் சம்பளம் 120 ரூபாயாம். 3.5 லட்சம் கடன் வாங்கி ஆபரேஸன் செய்திருக்கிறார்களாம். என் HideSign bag, E Series phone, பையிலிருந்த சில ஆயிரங்கள் இவற்றை அவர் வைத்துக்கொண்டிருந்தால் நிச்சயம் பல ஆயிரங்கள் அவருக்கு கிடைத்திருக்கும். சில நாட்களை அவர் சிரமமின்றி கழித்திருக்கலாம். ஆனாலும் அவர் சொல்கிறார் - அடுத்தவங்க பொருளுக்கு ஆசப்படலாமா? அது தப்புமா. அவர் தான் உண்மையான, தன்மானத் தமிழன். மந்திரியாயிருந்த ராசாக்களும், அவர்களின் பரிவாரங்களும் என் நினைவில் ஆடினர்.
நண்பர்களே நாம் என்றைக்கும் எதையும் மற்றவர்க்கு கொடுப்பவர்களாய், எவ்விதத்திலும் மற்றவர்க்கு உதவுபவராய், ஈவதில் உவகையுள்ளவர்களாய் இருக்க நமக்கு கடவுள் அருள்பாலிக்க வேண்டுகிறேன்.

Tuesday, November 16, 2010

தீபாவளியும் அப்பாவின் செல்லப்பெண்ணும்

நீண்ட நாட்களுக்குப்பின் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. School van 5 நிமிடம் தாமதமாக வந்த்து. டென்ஷனாகிவிட்டேன் leave announce பண்ணிவிடுவார்களோ என்று. அப்புறம் rain outside the house and storm in the house ஆகிவிடுமே. நல்ல வேளை - கடவுள் தம்மை நம்புபவரை ஒரு போதும் கைவிடுவதில்லை ;). van வந்துவிட்டது. Coming to the point தீபாவளி இனிதே கழிந்தது. தீபாவளிக்கு என் பெண்ணிற்கு ஒரு க்ரீம் கலர் கவுன். Princess Dress மாதிரி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டாள் என் மகள். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன் அந்த ட்ரஸஸை வாங்கியிருந்தோம். தினமும் ஸ்கூல் விட்டு வந்த்தும் ஒரு முறை அந்த ட்ரஸஸை எடுத்துப் போட்டுப் பார்த்துக் கொள்வாள். நாங்கள் யாரும் பார்க்கவில்லை என்று அவள் நினைக்கும் நேரம் டப்பாவைத் திறந்து ஆடையைத் தடவிப் பார்த்துக் கொள்வாள். நாங்கள் பார்ப்பதை அவள் கவனித்து விட்டால் வெட்கம் வந்துவிடும். பையனுக்கு வழக்கம் போல் ஒரு பனியன் கால்சட்டை. ஏம்ப்பா பசங்களுக்கு வெரைட்டீஸ் அவ்வளவு இல்லை. இவனுக்கு ட்ரஸ் choose பண்ணுவது உண்மையிலேயே எனக்குப் பெரிய வேலை. மகள் காலண்டரைப் பார்த்து துடித்துக்கொண்டிருந்தாள் 6ம் தேதி (தீபாவளி) வருவதற்கு. Atlast தீபாவளி வந்தேவிட்டது. காலையிலேயே முதல் ஆளாய்க்குளித்துவிட்டு புது ட்ரஸஸைப் போட்டுக்கொண்டுவிட்டாள். head band, matching shoes, chain, புது காதணி என்று அவளின் உற்சாகம் எங்களையும் தொத்திக்கொண்டது. சக்கரம், புஸ்வாணம், சாட்டை, கம்பி மத்தாப்பு, பாம்பு, சுருள் கேப், துப்பாக்கி - இவைகள் தான் எங்கள் தீபாவளி வெடிகள். மறந்து விட்டேன் - ஒரு பிஜிலி வெடி பாக்கெட். வாங்கடா வெடிப்போம் எனப் பிள்ளைகளைக் கூப்பிட்டுப் பார்த்தார் வாசு. வெளியே உள்ள வெடி சத்தத்தைக் கேட்டு ஒன்றும் வெளியே கிளம் ப மறுத்து விட்டது. கட்டாயம் வந்தேயாக வேண்டும், வெடித்தே ஆக வேண்டும் என்று வாசு பிள்ளைகளை ஒரே நச்சு. மெதுவாக் கூப்பிடுங்க. ஏற்கனவே பயப்படுறாங்க, நீங்க கத்துறத கேட்டு இன்னும் பயப்படப்போறாங்க என்று சொன்னேன். ஆமா பெரிய அணுகுண்டு வாங்கி வச்சிருக்கோம், புள்ளங்க பயப்படப்போறாங்க. உன்னால தான் இப்டி எதுக்கெடுத்தாலும் பயப்படுதுங்க என்று எனக்கு 2 திட்டு. இதல்லாம் நாங்க எவ்வளவோ பாத்தவங்க என்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அதையே சொன்னேன் (இதற்கு முன் swimming pool செல்லும் போதும் பிள்ளைகள் பயப்படும் போது இதையே தான் நான் சொல்லுவேன். வாசுவிடம் எனக்குப் பிடிக்காதது எதுவென்றால் swimming கூட்டிப்போன முதல் நாளன்றே பிள்ளைகளை engllish channel ஐ நீந்திக்கடக்க வேண்டும் என்பார்). பிள்ளைகளை அழ அழ மொட்டை மாடி கூட்டிக்கொண்டு சென்றார். நானும் தான். மொட்டை மாடி சென்று பார்த்தால் அடேங்கப்பா வானமே தெரியவில்லை. ஒளி வெள்ளம். விதவிதமான வாணவேடிக்கைகள். பிள்ளைகள் திறந்த வாய்மூடாமல் வேடிக்கை பார்க்கத் துவங்கினர். எந்த திசையில் பார்ப்பதென்றே தெரியவில்லை. எப்படியும் வேளச்சேரியில் மட்டும் பல லட்சம் பெறுமான வெடிகள் வெடிக்கப்பட்டிருக்கும். பிள்ளைகள் அவர்களாகவே அப்பா வாங்க நம்ம வெடிய வெடிப்போம் என்றனர். வாசு என்னைப் பார்த்து ஒரு வெற்றிப்புன்னகை புரிந்தார். மாற்றி மாற்றி சக்கரம் புஸ்வாணம் எல்லாம் வைத்து காண்பித்தோம். பின் வாசு ஒரு சாட்டையைக் கையில் பிடித்துக்கொண்டு இதை பொருத்து என்றார் (மெழுகுவத்தி அணைந்து விட்டது). சாட்டையை என்னை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தார். நானும் அதை பொருட்படுத்தாமல் பற்ற வைத்தேன். சர்ரென்று பற்றியதில் என் கட்டை விரலையும், சுட்டு விரலையும் பதம் பார்த்தது சாட்டை. (இன்னும் சரியாகவில்லை நண்பர்களே). என் மகன் வந்து பார்த்துவிட்டு அப்பாதான சுட்டாங்கம்மா. நான் பெரிய குச்சி வச்சிருக்கேன், அதால அடிச்சிர்றேன் என்றான். மகள் அதல்லாம் இல்ல தம்பு. அம்மாதான கைல தீப்பெட்டி வச்சிருந்தாங்க. அவங்களாதான் சுட்டுக்கிட்டாங்க. அப்பா பாவம். அப்பாவ அடிக்காத வலிக்கும்ல என்றாள். அடப்பாவி கொஞ்ச நேரம் முன்னால் வந்து என் பின்னால் ஒளிந்து நின்றாயே அப்பாவின் கோபத்துக்கு பயந்து. இது தான் Daddy's Little Girl போலும் என நினைத்து மனத்துக்குள் சிரித்துக்கொண்டேன்.

Wednesday, October 6, 2010

வேளச்சேரியில் உணவகங்கள் - ஒரு கைட்லைன்



வேளச்சேரியில் உள்ள உணவகங்களில் உங்கள் வீக் எண்டைச் சுவையான உணவோடு கழிக்க எந்த உணவகம் ஏற்றது என்பதற்கு ஒரு கைட்லைன் கொடுக்க விருப்பம். இங்கு சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட் துவங்கி (Noodle house), Parfait 3 Bistro, Pizzaurant, Dominoes, McDonald என உலகை ஒரு வலம் வந்து, Kumarakom (Kerala Speciality), Kalinga Court (Andhra), The Dhaba (Punjabi) என்று இந்திய மாநிலங்களில் புகுந்து புறப்பட்டு, Nalas, அஞ்சப்பர், காரைக்குடி, ரத்னா கபே என்று கடைசியாக ஆனந்த பவன் என்று நம் அடையாறில் வந்து முடிகிறது (அதாங்க நம்ம அடையார் ஆனந்தபவன் :) ) இவைகளில் கிடைக்கும் உணவு வகைகள், அவற்றின் சுவை மற்றும் Hospitality ஐப் பற்றி ஒரு report இதோ :






முதலில் The Dhaba: இங்கு சென்றவுடன் முதலில் ஒரு மண் குடுவையில் ஏதோ ஒரு பானம் தருகிறார்கள். கிட்டத்தட்ட புளித்தண்ணி மாதிரி. கடைசி வரை புளியைத் தவிர அதில் வேறென்ன போட்டிருக்கிறாருகள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ரசத்தைக் கொதிக்க வைக்காமல் பச்சையாக குடித்தது போல் ஒரு feel. இதோடு ஒரு சுட்ட அப்பளமும் ஒரு சட்னியும் வேக்கிறார்கள். அந்தச் சட்னி சும்மா சொல்லக்கூடாதுங்க, செம டேஸ்ட். ஸ்டாட்டருக்கு சிக்கன் கபாப் ஆர்டர் செய்தோம். Melts in your mouth என்று சொல்வார்களே அதைப் போல் வாயில் போட்டவிடன் கரைகிறது. நன்றாக வெந்து, மசாலா சரியாக எல்லா பாகத்திலும் பரவி, ஓரத்தில் மெலிதாக கருகி, வெங்காயம், முட்டைக்கோஸ் துருவல்களுடன், அந்த சட்னியும் சேர்த்து - அடாடா கபாப் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். main courseக்கு கார்லிக் நான், பட்டர் சிக்கன் - நான் நன்றாக இருந்த்து. பட்டர் சிக்கனும் பெயருக்கேற்றார் போல் வெண்ணையாக இருந்த்து. சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்திருந்தோம் (இனிமேல் செய்ய மாட்டோம் ;) ). வெயிட்டர்கள் நன்றாக கவனிக்கிறார்கள் - நம் அருகே நின்று plateஐயே முறைத்துக்கொண்டிருப்பது இல்லை. அதே நேரம் நமக்குத் தேவையான சமயம் கரெக்டாக அங்கேயிருக்கிறார்கள். என்ன ஒரேயொரு பிரச்சனை - தயாரித்து, பரிமாற இவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம். ஆர்டர் கொடுத்து மிக மிக நேரம் கழித்தும் யாரும் பரிமாற வரவில்லை. பிறகு அந்தப்பக்கம் போய்க்கொண்டிருந்த வெயிட்டரைக் கூப்பிட்டு - பாஸ் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆர்டர் கொடுத்தோமே, அத ஆர்டரா எடுத்துக்காமா requestஆ எடுத்துக்கிட்டு தயவு செஞ்சு சாப்பாட்ட கொண்டு வாங்க என்று கெஞ்சிவிட்டோம் கெஞ்சி.



நம்ம நளாஸ் ஆப்பக்கடை - இங்க ஆப்பம் ரொம்ப famous என்றார்கள். சீஸ் ஆப்பம், சில்ட்ரன் ஸபெஷல் ஆப்பம், முட்டை ஆப்பம் இப்படி பல. எனக்கென்னவோ இங்கு ஆப்பம் authentic ஆப்பம் போலில்லை என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட தோசைக்கும் ரியல் ஆப்பத்துக்கும் நடுவே இருக்கிறது இங்கு தரப்படும் ஆப்பம். ஆனால் சிலோன் சிக்கன் பரோட்டா, கொத்து பரோட்டா போன்றவை நன்றாக இருக்கின்றன. பிரியாணி not upto the mark. ரேட் ரொம்பவே நாமினல் என்பதால் சரியான கூட்டம். once in a while போகலாம்.



வேளச்சேரி அஞ்சப்பருக்கு, பெசன்ட் நகர் அஞ்சப்பரை நினைத்துக் கொண்டு சென்றால் - மன்னிக்கவும் நீங்கள் நிச்சயம் ஏமாறுவீர்கள். பெசன்ட் நகரில் சாப்பிட்ட மென்மையான வெங்காய ஊத்தப்பம், சிக்கன் குழம்பு, மீன் தந்தூரி இவற்றை நினைத்து சப்புக்கொட்டிக்கொண்டு வேளச்சேரி அஞ்சப்பருக்கு சென்றோம். கடவுளே - தந்தூரி சிக்கன் வேகவில்லை. மசாலா அப்படியே இருந்த்து வேகவேயில்லை. பிரியாணி மிகச் சாதாரணம். யார்மேலயாவது நமக்கு கோவம்னா இங்க கூட்டிட்டு வந்து treat கொடுத்துவிடுவோம் என்றார் வாசு. நிச்சயம் நல்ல யோசனை. இந்த comment காரைக்குடி ரெஸ்டாரன்ட்டுக்கும் பொருந்தும்.





பிரியாணி என்றால் நேரே கலிங்கா கோர்ட்டுக்குச் சென்று விடுங்கள். மசாலா நெடி இல்லாமல் அதே நேரம் நல்ல மணத்துடன், மிக நீண்ட பாசுமதி அரிசியில் தயாரான, கறி நன்கு வெந்து, மிதமான மசாலா சுவையுடன் கூடிய அருமையான ஆந்திர பிரியாணி. ஆனால் நான்வெஜ் மீல்ஸ் ஆர்டர் செய்ய வேண்டாம் - மிகவும் காஸட்லி. கொடுக்கும் காசுக்கு மதிப்பு கம்மி. இங்கு ஒரேயொரு பிரச்சனை - தெலுங்கு பாட்டை ஒலிக்க விடுகிறார்கள். ஆனால் அந்த பிரியாணியின் சுவைக்கு பாட்டுக்கொடுமையைச் சகித்துக்கொள்ளலாம்.




Noodle House - இங்கு ஸ்டார்ட்டருக்கு ஃபிஷ் ஃபிங்கர், சீ ஃபுட் ப்ளாட்டர் ஆர்டர் செய்தோம். ஃபிஷ் ஃபிங்கர் உண்மையில் ரொம்ப டேஸ்ட்டி - வெளியே க்ரிஸ்ப்பியாகவும், உள்ளே ஜூஸியாகவும். சீ ஃபுட்டை ரொம்ப deep fry செய்து விடுகிறார்கள். ருசியே தெரியவில்லை. இங்கே soup மிகவும் நன்றாக இருக்கிறது. நூடுல்ஸில் fried noodles, Mee Goreng இவை நன்றாக இருக்கின்றன. ஆனால் இவர்களிடம் consistency இல்லை. ஒரு முறை ஒரு ஐட்டம் நன்றாக இருக்கிறது என்று அடுத்த முறை ஆர்டர் செய்தால் - Disastrous. யோசித்துச் செல்லுங்கள்.







குழந்தைகளுக்கு இருக்கவே இருக்கிறது McDonalds. Nuggets, fries, cola, burger என்று எதை வாங்கிக்கொடுத்தாலும் கம்மென்று சாப்பிட்டுவிடுகிறார்கள்.(ஆனால் வீட்டில் என் அம்மா செம திட்டு - கண்டதையும் வாங்கிக்கொடுக்கிறோம் என்று). Dominos Pizzaவும் நல்லா இருக்கும். ஆனால் வாசு சீஸ் டூத் பேஸ்ட் போலிருக்கிறது என்பார். Parfait 3 Bistro வில் ambience ரொம்ப நன்றாக இருக்கும். Chicken Alfredo - இது ஒரு Pasta வகை அருமை. chicken and caesar என்று சாலட் பெயரைப் பார்த்து ஆர்டர் செய்தேன் (Caesar dressing என்னுடைய favourite). ஆனால் இது வேறேதோ சீசர் போலும். சகிக்க முடியவில்லை. எங்க வீட்டு சீசர் கூட சாப்பிட முடியாது.





ரத்னா கபேயின் கொடுமை தாங்கவில்லை. மஷ்ரும் 65 ஆர்டர் செய்தோம். மஞ்சூரியன் செய்ய தயாரித்திருந்த காளானை வைத்து 65ஐத் தயாரித்துவிட்டனர். மேலும் இரவு 9 மணிக்கு மேல் இங்கு சென்றால் நம்மை வெளியே துரத்துவதில் குறியாய் இருக்கின்றனர். ஸ்டார்ட்டருக்கு முன் காபி வந்துவிடும். சுகாதாரம் கிடையாது. Ambience பற்றி பேசவே கூடாது. Name Boardல் since 1948 என்று எழுதியிருக்கிறார்கள். 48லிருந்தே இவனுங்க torture ஆரம்பிச்சிருச்சு போல.






இருக்கிறதுலேயே பெஸ்ட் அடையார் ஆனந்தபவன்தான். எதை வேண்டுமானாலும் தைரியமாக ஆர்டர் பண்ணலாம். நிச்சயம் ருசியாக இருக்கும். self service தான் இங்கே ஒரே பிரச்சனை. சரியான கூட்டம். இப்போது expand பண்ணி கட்டியும் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. ஆனால் பொறுமையாக queueவில் நினைறால் நல்ல சாப்பாடு சாப்பிடுவது நிச்சயம்.

Monday, October 4, 2010

பணமும், பணக்காரர்களும்


பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்தியாவில் மதிக்கப்படுகின்றனர். வேறெவரும் இங்கே மதிக்கப்படுவதில்லை - ஒரு சமீபத்திய சர்வேயின் முடிவுகள். இது டைம்ஸ் ஆஃப் இண்டியா நியூஸ்பேப்பரில் சமீபத்தில் வந்த ஒரு செய்தி. இதனோடு நான் ஒரு வரியைச் சேர்க்க விரும்புகிறேன் : இந்தியாவில் பணம் படைத்தவர்களுக்கும், நான் பணம் படைத்தவள் என்பதைக் காட்டிக் கொள்கிறவர்களுக்குமே மதிப்பு. இக்கருத்திற்கு நான் ஒரு ஆதாரத்தையும் தர விரும்புகிறேன். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன் நாங்கள் மும்பையில் வசித்தபோது நடந்த ஒரு சம்பவம் - இதுவும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தான் வெளியிடப்பட்டது. ஒரு டாக்டர் உ.பி மாநிலத்திலிருந்து மும்பையைச் சுற்றிப்பார்க்க வந்தார். சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்து, படித்து (படிப்பால் மட்டுமே) மருத்துவர் ஆனவர். அவருடைய தாயாருக்கு புகழ் பெற்ற தாஜ் ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருந்திருக்கிறது. நிறைவேற்றுவது ஒரு நல்ல மகனின் கட்டாயக் கடமை அல்லவா? குடும்பத்தோடு அங்கே சென்றிருக்கின்றனர். தாயார் கரிய நிறமும்,எளிய தோற்றமும் கொண்டவர் போலும். மகனும் அப்படியே. உள்ளே செல்ல முயன்ற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த மகன் ' நான் ஒரு டாக்டர். நீங்கள் கொடுக்கும் பில்லை என்னால் செட்டில் செய்ய முடியும் ' என்று சொல்லி தன் வங்கி அட்டைகளையும் காண்பித்துள்ளார். நோ யூஸ். அனுமதி மறுப்புக்கு Hotel management சொன்ன காரணம் அவர்கள் ரப்பர் செப்பல் அணிந்திருந்தார்களாம்.(நாங்கள் gateway of india சென்றிருந்தபோது கவனித்த விஷயம் - அந்த ஹோட்டலிலிருந்து வெளியே வந்த வெளிநாட்டவர் பலரும் அரைக்கால் சட்டையும், ரப்பர் செருப்பும் அணிந்து கொண்டு கையில் ஒரு வாட்டர் பாட்டிலுடனும் இருந்தனர்).
இங்கே நான் ஒரு சிறு தகவலைத் தெரிவிக்க விரும்புகிறேன். தாஜ் ஹோட்டலை ஜாம்ஷெட்ஜி டாடா துவங்கியதற்கான காரணம், 19ம் நூற்றாண்டில் அப்போது புகழ் பெற்று விளங்கிய வெள்ளையர்கள் மட்டுமே செல்லக்கூடிய அப்பல்லோ ஹோட்டலில் டாடாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.எனவே அனைத்து இந்தியர்களும் செல்லத்தக்க உயர்தர ஹோட்டலை நிர்மாணிக்க விரும்பி அந்த ஹோட்டலைக் கட்டுவித்தார்.1904ம் ஆண்டு அது துவங்கப்பட்டது.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது - நம்மிடம் பணம் இருக்கிறது என்பதை நாம் நம் நடை, உடை, செருப்பு, நகைகள் வாயிலாகப் பறை சாற்றினாலன்றி நம்மை ஒரு பயல் மதிக்கப்போவதில்லை.நம்மைப் பற்றியிருக்கும் நிறவெறியும், பணவெறியும் என்று ஓயும்?

என்னை சிந்தனையில் ஆழ்த்திய மற்றொரு நிகழ்ச்சி - பணம் படைத்தவர்களுக்கு எதிராகவோ, அவர்களைப் பற்றியோ எந்த ஒரு கருத்தோ, தகவலோ அவர்கள் ஒப்புதலின்றி யாரேனும் சொன்னால் அவர்கள் அடையும் நிலை Oh my God :(

நடிகர் சிவக்குமாரைப் பற்றி எனக்கு மிகவும் நல்ல opinion இருந்தது. அவரது நல்லொழுக்கம், பேச்சுத்திறன், கடமையுணர்வு etc. சமீபத்தில் அவரது மகன் கார்த்தி நடித்த 'நான் மகான் அல்ல' படம் வெளியானது. அதன் தொடர்ச்சியாக PRO நிகில்முருகன் தன்னுடைய Twitter accountல் ஒரே ஒரு வரி comment ஒன்று போட்டார் - "Why poor opening for Naan Mahan Alla?"
அவ்வளவுதான். உடனே நடிகரின் வீட்டிலிருந்து கண்டனங்கள். உடனடியாக அவர் சூர்யாவின் PRO பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஸ்ருதி கமல்ஹாசன் - எனக்கு நிகில் முருகன் PRO அல்ல என்று அறிக்கை வெளியிட்டார். (ஏற்கனவே நிகில் அவருக்கு PRO அல்ல. அவருடைய தந்தை கமலுக்குத்தான் நிகில் PRO - எல்லாம் ஏழாம் அறிவு படுத்தும் பாடு). நிகில் முருகன் ஒன்றும் சாதாரண ஆளில்லை. த்ரிஷா, ஹாரிஸ், கமல் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கும், பெரிய பட்ஜட் படங்களுக்கும் PRO வாகப் பணியாற்றியவர். தன்னுடைய துறையில் வல்லுனர். ஒரே ஒரு வரி உண்மைக்காக இந்த action எடுக்கப்பட்டிருக்கிறது. பணம் படைத்த சிவக்குமார் தன் மகனைப் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டதற்காக நிகில் மேல் எடுத்திருக்கும் நடவடிக்கை அவருடைய சகிப்புத்தன்மையின் லெவலைக் காட்டுகிறது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes