Thursday, August 10, 2017

டார்க் டூரிஸம்

முன்னாடிலாம் வீட்லருந்து டூர் போனா திருச்செந்தூர் or மதுர அழகர்கோவில் or மலைக்கோட்டை, அதோட சேத்து முக்கொம்பு or குற்றாலம், கொஞ்சம் பெரிய டூர்னா ஊட்டி, கொடைக்கானல். அவ்ளோதான். இப்ப டூர்ஸ் லெவலே வேற - ரிலிஜஸ் டூர் பேக்கேஜஸ், ஈகோ டூரிஸம் - அங்கயே டென்ட் அடிச்சு தங்குறது (ஒரு ஊர்ல வெட்டவெளில - சுத்தி மரம், ஆறு இருக்கு- ரெண்டு கட்டில் போட்டு வச்சு இருக்காய்ங்க- அங்க தங்குறதுக்கு 220 யூரோ per nightஆம். நம்ம மொட்டமாடி கூட நல்லாத்தான் இருக்கு), அட்வன்ச்சர் டூரிஸம், ஃபுட் டூர், டார்க் டூரிஸம். இதில் டார்க் டூரிஸம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (பெரும்பாலும் நெகட்டிவ் ரீசன்ஸ் - war, poverty, genocides- இவை போல) இடங்களுக்குச் செல்வது. நம் இந்தியாவைப்பொருத்த வரையில் ஜாலியன் வாலாபாக், அந்தமான் செல்லூலார் ஜெயில், போபால் விஷ வாயுவினால் மக்கள் உயிரிழந்த இடம் ஆகியவை டார்க் டூரிஸ் ட்ஸ்பாட்கள்...

Wednesday, August 9, 2017

என் மனைவிக்கு அருகே என்னைப் புதைக்காதீர்கள் - டென்மார்க் இளவரசர்

டென்மார்க் இளவரசர் ஹென்ரிக், என் மறைவிற்குப் பின் என் மனைவிக்கு அருகே என்னைப் புதைக்க வேண்டாம் என்று கூறியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1967ம் ஆண்டு இளவரசி மார்கரெட்டும், ஹென்ரிக்கும் மணம் புரிந்து கொண்டனர். 1972ம் ஆண்டு இளவரசி மார்கரெட் அரியணை ஏறினார், அரசியானார். ஹென்ரிக்கும் தான் மன்னர் என்று அறியப்படவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் அவர்கள் நாட்டின் முறைப்படி Prince Consort என்ற பட்டத்தைத்தான் தர முடியும், King Consort அல்ல என்று தெரிவித்துவிட்டார் அரசி (இங்கிலாந்திலும் இன்று வரை ராணி எலிசபெத், இளவரசர் ஃபிலிப் தான் - மன்னர் அல்ல). அதனால் இருவருக்கும் இவ்விஷயத்தில் அன்றிலிருந்தே புகைச்சல்தான் என்கின்றனர். அதன் உச்சமாக இளவரசர் முதலில் சொன்னவாறு தெரிவித்துள்ளார். மனைவி தன்னை விட உயர்ந்த பதவியிலோ, ஃபேமஸாகவோ இருப்பது எப்போதும் ஆண்களுக்குத் தாங்கிக்கொள்ள...

Monday, August 7, 2017

லீவுக்கு எங்க போகலாம்

இந்த மாதம் லாங் வீக் எண்ட் 2,3 வருகிறது. Trip advisor, trivago எல்லா siteகளிலும் ஆஃபர் மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பத்தாததற்கு SOTC, Mahindra holidays என்று package offer பண்ணும் நிறுவனங்கள் ஜஸ்ட் 2 லட்ச ரூபாயில் ஐரோப்பாவின் லண்டன் பாரீஸ் என்ற விளம்பரங்கள். நம் பிள்ளைகள் பக்கத்து வீட்டு அனந்த் சம்மர் லீவுக்கு சைப்ரஸ் போறாங்க (எங்கய்யா இருக்கு இந்த சைப்ரஸ்). பிஸினஸ் க்ளாஸ்ல போறாங்களா-அதனால அவங்கள பிக்கப் பண்ண ஆடி கார் வந்துச்சு. நம்மளும் ஒரு தடவயாவது பிஸினஸ் க்ளாஸ்ல போகணும். (டேய் உன் வயசுல நான் ஏரோப்ளேன் பாத்தது கூட இல்லடா. கருடா கருடா பூப்போடுன்னு பருந்து பின்னாடி அண்ணாந்து பாத்துக்கிட்டே ஓடியிருக்கோம். அவ்வளவுதான்). துபாய், தாய்லாந்து, மொரிஷியஸ் அடேங்கப்பா. அட்வன்ச்சர் டூரிஸம், டார்க் டூரிஸம் etc etc. டூர் போயே ஆக வேண்டும். இந்த சோஷல் மீடியாக்கள் வருகைக்குப்பின் டூர் போவது ஒரு கட்டாயம்....

Friday, August 4, 2017

கால சர்ப்பதோஷத்திலிருந்து எந்த வயதில் விடுபடலாம்?

கால சர்ப்ப தோஷம் உடையவர்கள் தங்கள் வாழ்வின் முதல் பாதியில் பல இன்னல்களுக்கு ஆளாவார்கள் - பொருளாதாரத் தடை, தொழிலில் முன்னேற்றமின்மை, பெர்சனல் வாழ்விலும் பல இடர்ப்பாடுகள், தோல்விகள், மனவருத்தங்கள்.... உதாரணமாக பாக்யராஜ், இளையராஜா இவர்களின் ஜாதகங்களைக் குறிப்பிடலாம்.  இளையராஜா ஆரம்ப நாட்களில் கிராமத் திருவிழாக்களிலும், நாடகங்களிலும் மிகச் சொற்ப சம்பளத்திற்கு வாசித்துக்கொண்டிருந்தார் என்பதெல்லாம் நாம் அறிந்ததே. அதே போல்தான் பாக்யராஜும்.  ஒரு பிரேக் கிடைப்பதற்கு முன் மிகவும் சிரமப்பட்டே முன்னுக்கு வந்திருக்கிறார். முதல் மனைவி மறைவும் இத்துன்பங்களில் அடக்கிக்கொள்ளலாம். அவர்களின் பிற்பாதி வாழ்க்கையில் அவர்கள் அடைந்த உயரங்கள் நாம் அனைவரும் அறிந்ததே. என்ன தான் 30 வயதைக் கடந்து விட்டாலும் காலசர்ப்ப தோஷமுடைய வரனுக்குப் பெண் கொடுக்க பெற்றோர் இன்றும் தயங்குகின்றனர். என் நெருங்கிய உறவின்ர்...

Wednesday, July 26, 2017

தாயாரின் மறைவிற்கு அழாத பிரிட்டிஷ் இளவரசர்கள்

மறைந்த  பிரிட்டிஷ் இளவரசியின் இருபதாம் நினைவு நாள் ஆகஸ்ட்டில். இளவரசர்கள் வில்லியம், ஹாரி தங்கள் தாயார் பற்றிய பெர்சனலான நினைவுகளை முதன்முறையாக ஒரு தொலைக்காட்சி சானலில் பகிர்ந்துகொண்டுள்ளனர். இளவரசர் ஹாரி இதுவரை இருமுறை மட்டுமே தன் தாயாரின் மறைவுக்காக அழுதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 20 வருட துக்கம் இன்னும் எக்கச்சக்கம் மீதமிருக்கிறது என்கிறார். Coincidental ஆக  ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கமலஹாசன் தன் தாயார், தகப்பனாரின் மறைவின் போதோ அல்லது மிகச்சமீபமாக அவர் சகோதர்ரின் மறைவின் போதோ வாய் விட்டு அழுததெல்லாம் இல்லை. மாறாக சம்மந்தமேயில்லாமல் ஒரு சூரிய உதயத்தைப் பார்க்கும்போது அழுகை பீறிட்டுக்கிளம்பியது என்கிறார். யோசித்துப்பார்க்கும் பொழுது, இன்று வரை என் தகப்பனாரின் மறைவுக்கு நான் அழுததே இல்லை. அவர் மறைந்த போது என் வயது எட்டு. ஏன் அழவில்லை - சத்தியமாகத் தெரியவில்லை....

Friday, January 6, 2017

என்ன தான் இருக்கிறது 9ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி

சிபிஎஸ்இ சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்புப்பாடப்புத்தகத்திலிருந்து சில பகுதிகளை நீக்க வேண்டுமென்று கோரிக்கைகள் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டு தற்சமயம் அப்பகுதிகளை நீக்கி கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்பகுதிகளை வகுப்பறையில் நடத்தக்கூடாதென்றும் மேலும் அப்பகுதியிலிருந்து பரிட்சையில் கேள்விகள் கேட்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஒரு விஷயத்தைக்குறித்து யாராவது போராடும்போதுதான் (அது எவ்வளவு சாதாரணமாக விஷயமாக இருந்தபோதிலும்) பலரின் கவனத்தை அது திருப்புகிறது. என்ன தான் இருக்கிறது அதில் என்ற ஆர்வக்கோளாறில் அதைப் படித்தோம்.  இது தான் பாடப்புத்தகத்தில் இருக்கிறது - 1800களில் சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் குலப்பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. உயர்குலத்தவரான நாயர் பெண்கள் மட்டுமே...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes