இசையரசி M.S.சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு சமீபத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அவர் நினைவைக் கவுரவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசை நிகழ்ச்சி ஒன்றும் ஐ.நா சபையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளை ஒட்டி சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் பேத்தி முறை உறவான கவுரி அவர்களின் பேட்டி ஒரு நாளிதழில் வெளியாகியிருந்தது. அதில் அவர் சொல்லும் சில தகவல்கள் கொஞ்சம் சர்ப்ரைசிங்காக இருந்தன. M.S.சுப்புலட்சுமி அம்மையார் அவர்களின் கணவர் திரு. கல்கி சதாசிவத்தை, தமிழ் ஹிட்லர் என்று அழைப்பார்களாம். M.S.சுப்புலட்சுமி அவர்கள் எந்தக் கச்சேரியில் பாட வேண்டும், என்ன பாடல் பாட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் முடிவு செய்தது சதாசிவம் தான்.
இதை மேன்ஸ்ப்ளயினிங் (Mansplaining) என்கிறார்கள். அதாவது, எல்லா விஷயங்களையும் ஒரு ஆண் என்ற தோரணையில் விளக்குவது, ஆதிக்கம் செலுத்துவது. குடும்பங்களிலும், வேலை பார்க்கும்...