நிஜமாகவே எல்லாம் அவன் செயல்தானா? நாம் நம் வாழ்க்கையில் பல சமயங்களில் நல்ல வேள, By God's grace தப்பிச்சேன். ஒரு அரை மார்க் குறைஞ்சிருந்தா அவ்ளோதான், வேலை போயிருக்கும், மெடல் போயிருக்கும் ஆர்டர் கெடச்சிருக்காது, ப்ராஜக்ட் கெடச்சிருக்காது, அந்த வீடு அமையாம போயிருந்திருக்கும்.......................... இப்படி பல பல சந்தர்ப்பங்கள், சம்பவங்களில் கடவுள் கருணையுள்ளவர் என்பதைச் சொல்லியிருப்போம்.
என்னுடைய இன்றைய வாழ்க்கை வரை எக்கச்சக்க முறை கடவுளின் கிருபையால் என்ற வார்த்தையை வெவ்வேறு சூழ்நிலைகளில், பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலான சமயங்களில் என் அறிவு, என் திறமை போன்ற நினைவுகளை ஒரு போலியான பெருந்தன்மையுடன் கஷ்டப்பட்டு பின்தள்ளிவிட்டு (அப்புறம் சாமி கண்ணக் குத்திரும் என்ற பயத்துடன் ;) ) By God's grace என்று சொல்லிக்கொள்வேன். என்ன தான் கடவுள் இருந்தாலும் என் அறிவால்தானே இந்த...