Thursday, August 29, 2013

தனுஷ் படத்தில் சிம்பு - பழம் விட்டாச்சு

தனுஷ், சிம்பு கொஞ்ச வருடங்களுக்கு முன் மோதிக்கொண்டிருந்தாலும் இப்போது நண்பர்களாகவே வெளியில் காட்டிக்கொள்கின்றனர். தற்சமயம் வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து தயாரிக்கும் காக்கா முட்டை படத்தில் ஒரு பாடலை, சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரைப்பாடித் தருமாறு தனுஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார். சிம்புவும் ஒப்புக்கொண்டு சந்தோஷமாகப் பாடித் தந்ததாகக் கேள்வி. ஒருவரை வெறுப்பேற்ற வேண்டுமென்றால் அவருக்குப் பிடிக்காதவரிடம் நாம் ஒட்டி உறவாடலாம். என்ன நடக்குது தனுஷ் இங்க - வீட்ல எல்லாரும் சுகம் தானே???? ...

Wednesday, August 28, 2013

ஒரு ஊர்ல எம்.சி.ஏ ன்னு ஒரு படிப்பு இருந்துச்சாம்

சுமார் 20 வருடங்களுக்கு முன், எம்.சி.ஏ சீட் கிடைத்தவர்கள், கடவுளர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். முடித்தவுடன், அரசுக்கல்லூரிகளில் பெர்மணன்ட் வாத்தியார் வேலைக்குச் சென்றவர்களும், ஐ.டி. துறையில் வேலைக்குச் சென்றவர்களும் பிழைத்தனர். மாறாக, ப்ரைவேட் என்ஜினியரிங் கல்லூரிகளில் வேலைக்குச் சென்ற வாத்தியார்களின் நிலை தான் இப்பதிவின் பாடுபொருள். முதலில், தகுதியற்றவர்கள் தான் வாத்தியார் வேலைக்கு வருவார்கள் என்ற பிம்பத்தை எப்பாடுபட்டும் உடைக்க இயலாது. நீங்கள் பல்கலைக்கழக முதல் மாணவராக இருந்தாலும் சரி, வாத்தியார் வேலைக்கு வந்து விட்டால் நீங்கள் மக்குதான். சரி அதாவது பரவாயில்லை. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். தற்சமயப் பிரச்சினை என்னவென்றால், எம்.சி.ஏ கோர்ஸிற்கு மாணவர்கள் சேர்வதேயில்லை. 120 சீட் இருக்கும் கல்லூரியில் 20 பேர் சேர்கிறார்கள்....

Tuesday, August 27, 2013

மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டுத் தீர்மானம் - தமிழ் மென்பொருட்களைப் பயன்படுத்துவோம்

மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து உலகத்தமிழ் இணைய மாநாட்டை மலேயா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 15-18 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். உயர்திரு. அனந்தகிருஷ்ணன், டைரக்டர், ஐ.ஐ.டி கான்பூர், அவர்களும் உயர்மட்டக்குழுவின் ஒரு உறுப்பினர். தமிழில் உள்ள மென்பொருட்கள், இன்னும் புதிய தமிழ் மென்பொருட்கள் உருவாக்க வேண்டியதன் அவசியம், இருக்கும் தமிழ் மென்பொருட்களின் தரம், அவை இன்னும் அப் டி த மார்க் இல்லாமல் இருப்பதன் காரணங்கள் முதலியவற்றை விரிவாக அலசினார். தமிழில் இருக்கும் மென்பொருட்களை நாம் முதலில் பயன்படுத்துகிறோமா? என்னென்ன மென்பொருட்கள் தமிழில் இருக்கின்றன என்பது முதலில் நமக்குத்தெரியுமா? இப்போதைய தொழில்நுட்ப யுகத்தில், ஒரு மொழி சர்வைவ் செய்ய வேண்டுமென்றால் அது தன்னை மொழித்தொழில் நுட்பத்துக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழுக்குத் தன்னார்வலர்கள் பலர் சிறப்பான மென்பொருட்களைத் தயாரித்துள்ளனர்....

Monday, August 19, 2013

மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு - ஒரு குறிப்பு

மலேசியாவில் மலேயா பல்கலைக்கழகமும், உத்தமமும் இணைந்து நடத்திய உலகத்தமிழ் இணைய மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை மலேயா பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். ஒரு சிறு பயணக்குறிப்பு இதோ. டிப்பெண்டன்ட் விசாவில் இல்லாத முதல் வெளிநாட்டுப்பயணம் என்பதால் மிகவும் எக்ஸைட்டடாக இருந்தது. மாநாட்டின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒரு புறம் இருக்கட்டும் (பின்னொரு பதிவில்). இப்பதிவில் நான் வேறு சிலவற்றைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். முதலில் உணவு. காலை உணவில் விதவிதமான நூடுல்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒல்லியான, பட்டையான, உருண்டையான என்று வித விதமான வடிவங்களில், முக்கியமாக மீன் சேர்க்கப்பட்டவை.இவர்களின் நூடுல்ஸ் மசாலா வித்தியாசமாக, மிகச்சுவையாக இருக்கிறது.  அப்புறம் சம்பல் - இந்த மீன் குழம்பு சான்ஸே இல்லை. சூப்பர். முக்கியமாக கவனிக்க வேண்டியது...

Page 1 of 3612345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes