நம்ம தமிழ் மண்ணுக்குன்னே சில குணம் இருக்கு. அந்த குணத்தால பல நேரம் மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம தடுமார்றது நம்ம ப்ளட்லயே இருக்கு. அதுல முக்கியமான 5 இதோ -
1. மாடி வீட்டு அங்கிளாவது, ஆன்ட்டியாவது நம்ம வீட்டு பிள்ளங்க அல்லது மனைவி கூட வாசல்ல நின்னு பேசிக்கிட்டு இருந்தா, விரல் நகம் கூட வெளிய தெரிஞ்சிராம, நல்லா தள்ளி உக்காந்து ஒளிஞ்சுக்கிறது.
2. மேல பாத்த இந்த குணம், நம்ம அப்பார்ட்மென்ட்டோட நிக்கிறது இல்ல. கடல் தாண்டி போனாலும், யாராவது தமிழ்க்காரன்னு தெரிஞ்சுட்டா அப்டியே எங்கயாவது போய் பதுங்கிர்றது. லண்டன் ஐ-ய ஒரு நிமிஷம் நிறுத்தி, அதுல இருக்குற தமிழ்க்காரங்கள மட்டும் கவுன்ட் பண்ணா, நிச்சயம் ஒரு 50 பேராவது இருப்போம். ஆனா யாரும் யார்கூடவும் பேசிக்க மாட்டோம். (மலையாளிகள் மலையாளியான்னு? அப்டின்னு உடனே ஆரமிச்சிருவாங்க)
3. பெரிய ஸ்வீட் ஸ்டாலுக்குப் போய் கிலோ ரூ.680 விக்கிற ஏதாவது...