திரையிசை மற்றும் கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயை மீண்டும் சங்கீத மேடைகளில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் அவருடைய கணவர் திரு. மகாதேவன் தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு காரணங்கள் கிசுகிசுக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று, நித்யஸ்ரீயின் மாமியார் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவர் வீட்டிலிருந்து மாமியாரைக் கவனித்துக்கொள்ளவில்லையாம். இதனால் அவருடைய கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தாயாரின் மறைவுக்குப்பின் அம்மனவுளைச்சல் அதிகமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு ரூமர்.
இச்செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். இசை...