அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல நான் படித்த மற்றும் வேலை பார்த்த, பார்க்கின்ற பெண்கள் கல்லூரி வாட்ச்மேன்கள் அனைவருமே மிகவும் கண்டிப்பானவர்களாக, அதே நேரம் அக்கல்லூரியைச் சார்ந்த அனைவராலும் விரும்பப்படுகிறவர்களாகவே இருக்கின்றனர்.
ஹோலிகிராஸ் சேஷு அண்ணா முதல் எத்திராஜ் அண்ணாதுரை அண்ணா வரை இவர்கள் கண்களில் தப்பி ஈ, காக்காய் கூட உள்ளே நுழைய முடியாது. அதுவும் ஒரு முறை சேஷு அண்ணா, காலேஜுக்கு ஒரு ஃபங்ஷனுக்கு வந்த சீஃப் கெஸ்ட்டை வெளியே நிறுத்தி புண்ணியம் கட்டிக்கொண்டார். என்னடா இன்னும் சீஃப்கெஸ்ட்டைக் காணோம் என்று கேட்டுக்கு வந்து பார்த்தவர்கள், அப்புறம் அவரை சேஷு அண்ணாவிடமிருந்து மீட்டு உள்ளே கூட்டிச் சென்றார்கள். (செல்போனெல்லாம் அப்போது கிடையாது).
ஸ்டூண்ட்ஸும் ஆசிரியர்களிடமிருந்து கூட கல்லூரி நேரத்தில்...