Sunday, August 28, 2011

ஒவ்வொரு ஃபிரெண்டும் தேவை

நாம் மனிதர்களையும் அவர்கள்பால் நாம் கொள்ளும் உறவுகளையும் கையாள்வதில் என்றும் உணர்ச்சிவயப்பட்டவர்களாகவே இருக்கிறோம். பெண் என்னும் தனி மனுஷியை நமக்கு ஒன்று தெய்வமாக சித்தரிக்கவேண்டும் அல்லது பேயாக கேவலப்படுத்த வேண்டும். கணவனைக் கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுவாள் - டைப்பாக இருக்கவேண்டும். ஆசிரியர்களை mr அல்லது mrs என்ற அடைமொழியோடு பெயரிட்டு கூப்பிடுவதை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அதே போல் நண்பர்களையும், நட்பையும் ஒரு pedestalல் கொண்டு வைத்தபின் தான் நாம் ஓய்கிறோம். friendshipக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று பேசுபவரை திரைப்படத்தில், வகுப்பறையில், ஆஃபிஸில் எங்கும் காணலாம்.





போன வாரம் ஸ்கூலில் இருந்து வீடு திரும்பிய என் மகளின் கைகளில் காயம். என்னவென்று விசாரித்ததில் ஹரிணி கிள்ளிவிட்டதாகச் சொன்னாள். நீ miss கிட்ட சொல்லி வேற place போக வேண்டியது தான என்றேன். ஹரிணி என் friend மா என்றாள். உன்ன மாதிரியே இருக்கிறா உன் மகளும் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா. இவ ரொம்ப நல்லவ) என்றார் வாசு. நண்பர்களால் நாம் காயமடைவதும், மோசமான ஏமாற்றங்களுக்கு உள்ளாவதும், அதை நம் நெருங்கிய உறவினர் criticise பண்ணுவதும் எல்லா வீடுகளிலும் நடப்பது. நீதான் friend friendங்கிற. அவ செஞ்ச வேலையப் பாத்தியா என்ற கேள்வியை எதிர்கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இது எதை நிருபிக்கிறது என்றால் நண்பர்கள் மோசமான மனிதர்கள் என்பதையல்ல - நண்பர்களும் மனிதர்களே என்பதை. நண்பர்கள் சில வேளைகளில் சுயநலத்தோடு நடந்து கொண்டாலும், காயப்படுத்தினாலும் நிச்சயம் அவர்களை நம் வாழ்க்கையிலிருந்து முற்றுமாக அகற்றிவிட முடியாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நட்பை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ் தர விரும்புகிறேன்.















  1. பிரத்தியேகமானது எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகும், இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும் என்பதும் சுத்த ஹம்பக். அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக பெற்றோரின் மரணம் தரும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் உடல் பருமனால் அவதியுறும் தோழியின் மனவலியை என்னால் ஒரு அளவுக்கு மேல் புரிந்து கொள்ளவே முடியாது. whats the big deal என்பதே என் reaction ஆக இருக்கும். எனவே மனம் வருந்தி நீங்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயம் கிண்டலாக ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் மீது பிரயோகிக்கப்படும்போது மனவலி ஏற்படும். ஏனெனில் அப்பிரச்சினை இல்லாத உங்கள் தோழியால் அதைப்புரிந்து கொள்ள இயலாது. அதே போல் பொதுவான சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் சக்ஸஸ் என்று கூறி சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிரத்தியேக சந்தோஷங்களை அல்ல. ஏனெனில் மனித மனம் நுண்ணிய இழைகளால் ஆனது. அந்த இழைகளை அறுத்து மனத்தைச் சிதைக்க சிறு சலனமும் போதும். உங்களின் வெற்றியைக் கேட்கும் உங்கள் நண்பனின் மனதில் தோன்றும் சிறு ஏக்கமும் (அந்த வெற்றி அவர்களுக்கும் கிடைத்திராத பட்சத்தில்) பொறாமைத்தீயைப் பற்ற வைத்து நட்பை பஞ்சராக்கும். இவைகளால் நம் நண்பர்கள் கெட்டவர்கள் என்று புரிந்து கொள்வது அரைவேக்காட்டுத்தனம். நம் நண்பர்களும் - உயர்ந்த லட்சியங்களும், கீழான இச்சைகளும், சகமனிதருக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும், நான் மட்டுமே உயரவேண்டும் என்ற தன்னலமும் - கலந்து கொண்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே.










  2. எதன் பொருட்டும் கேட்கப்படாமல் அட்வைஸ் கொடுக்காதீர்கள். இது 10 வருட நட்பையும் 10 நிமிடத்தில் நொறுக்கி அள்ளிவிடும் வல்லமை படைத்தது. என் 12 வருட தோழியின் காதலனுக்கு accident. வீட்டில் படுக்கையிலிருக்கிறார். அவர்களுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. தோழி வேறு ஊரில் இருந்தாள். accident விஷயம் தெரிந்தவுடன் அவள் அவர் வீட்டிற்கு சென்று தங்கி அவருக்கு உதவி செய்ய விருப்பப்பட்டாள். நான் அந்த ஊர்ல ஒரு மாதிரியா பேசுவாங்க. பாத்துப்போ என்றேன். (அவள் என்னிடம் ஐடியா கேட்கவேயில்லை. நானாத்தான் கொடுத்தேன்). அன்றோடு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டாள். திருமணத்திற்கு பத்திரிககை கூடத்தரவில்லை. கேட்கப்படாமல் ஐடியாவோ அட்வைஸோ தரவே தராதீர்கள். அவரவர் வாழ்க்கையை நடத்திச்செல்ல அவரவருக்குத்தெரியும்.



இவற்றால் உணரப்படும் நீதி: எல்லாவற்றையும் பகி்ர்ந்து கொள்ளாதீர்கள், கேட்கப்படாமல் அட்வைஸ் தராதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஃபிரெண்டும் நிச்சயம் தேவை நண்பர்களே

5 comments:

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

Nice blog mala......

மாலா வாசுதேவன் said...
This comment has been removed by the author.
மாலா வாசுதேவன் said...

Now that we know each other quite well, what is the need for mail id. Any way thanx for asking :)

மாலா வாசுதேவன் said...

By the way the comment has been deleted accidentally. Sorry for that (don't know how to retrieve)

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes